حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ ذَكَرَ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ أَيَمَسُّ طِيبًا أَوْ دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ فَقَالَ لاَ أَعْلَمُهُ.
தாவூஸ் அவர்கள் அறிவித்தார்கள்:
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், வெள்ளிக்கிழமை குளிப்பது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் கூற்றைக் குறிப்பிட்டார்கள். பின்னர் நான் அவர்களிடம், ஒருவரின் வீட்டில் நறுமணம் அல்லது (தலை) எண்ணெய் காணப்பட்டால் அவற்றைப் பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்களா என்று கேட்டேன். அவர் (இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்) அது பற்றித் தமக்குத் தெரியாது என்று பதிலளித்தார்கள்.