أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ لاَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّيَ رَكْعَتَيْنِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்குப் பிறகு, (தொழுமிடத்திலிருந்து) புறப்பட்டுச் சென்ற பின்னரே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்களும், அதன் பிறகு இரண்டு ரக்அத்களும், மஃரிப் தொழுகைக்குப் பிறகு அவர்களுடைய வீட்டில் இரண்டு ரக்அத்களும், இஷா தொழுகைக்குப் பிறகு இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள். அவர்கள் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு (பள்ளிவாசலிலிருந்து) புறப்படும் வரை (சுன்னத்) தொழ மாட்டார்கள். பிறகு, (தமது வீட்டிற்குச் சென்று) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (புகாரி, முஸ்லிம்) ஜும்ஆவிற்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் மட்டும் (அல்பானி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும், அதன்பிறகு இரண்டு ரக்அத்களும், மஃரிபுக்குப் பிறகு அவர்களுடைய வீட்டில் இரண்டு ரக்அத்களும், இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள். அவர்கள் ஜும்ஆவுக்குப் பிறகு (தொழும் இடத்தை விட்டுப்) புறப்படும் வரை தொழ மாட்டார்கள்; (அங்கிருந்து) புறப்பட்ட பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.