حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنهم ـ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ فَقَالَ " قَدْ قَضَى ". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. فَبَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَكَوْا فَقَالَ " أَلاَ تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ، وَلاَ بِحُزْنِ الْقَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا ـ وَأَشَارَ إِلَى لِسَانِهِ ـ أَوْ يَرْحَمُ وَإِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ". وَكَانَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَضْرِبُ فِيهِ بِالْعَصَا، وَيَرْمِي بِالْحِجَارَةِ وَيَحْثِي بِالتُّرَابِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோருடன் அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். சஅத் (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவர் தம் குடும்பத்தாரால் சூழப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, (நபி (ஸல்) அவர்கள்) "அவர் இறந்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். மக்கள், "இல்லை, இறைத்தூதர் அவர்களே!" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் அழுவதைக் கண்ட மக்களும் அழுதார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (நான் கூறுவதைச்) செவியுறவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கண்ணீர் வடிப்பதாலோ, உள்ளத்தின் கவலையாலோ தண்டிப்பதில்லை. மாறாக, இதனாலேயே அவன் தண்டிக்கிறான் -அல்லது அருள்புரிகிறான்" என்று கூறித் தமது நாவைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும், "இறந்தவர் தம் குடும்பத்தினர் தனக்காக (ஒப்பாரி வைத்து) அழுவதன் காரணமாகத் தண்டிக்கப்படுகிறார்" என்றும் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் (இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்து அழுபவர்களைத்) தடியால் அடிப்பவர்களாகவும், கற்களை எறிபவர்களாகவும், மண்ணை வாரி இறைப்பவர்களாகவும் இருந்தார்கள்.
وعن ابن عمر رضي الله عنهما قال: اشتكى سعد بن عبادة رضي الله عنه شكوى فأتاه رسول الله صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف، وسعد بن أبي وقاص، وعبد الله بن مسعود رضي الله عنهم، فلما دخل عليه، وجده في غشية فقال: "أقضي؟" قالوا: لا يا رسول الله فبكى رسول الله صلى الله عليه وسلم فلما رأى القوم بكاء النبي صلى الله عليه وسلم بكوا، قال: "ألا تسمعون؟ إن الله لا يُعذب بدمع العين، ولا بحزن القلب، ولكن يعذب بهذا" وأشار إلى لسانه "أو يرحم" ((متفق عليه)).
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஸஃத் பின் உபாதா (ரழி) அவர்கள் நோயுற்றிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) மற்றும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) ஆகியோருடன் அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது, அவர் மயக்கமுற்றிருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவர் இறந்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் அழுவதைக் கண்ட மக்களும் அழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் செவியுறவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கண்ணீருக்காகவோ, உள்ளத்தின் கவலைக்காகவோ தண்டிப்பதில்லை. மாறாக, இதன் காரணமாகவே அவன் தண்டிக்கிறான் அல்லது கருணை காட்டுகிறான்" என்று கூறித் தமது நாவைச் சுட்டிக்காட்டினார்கள்.