அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறாரோ, அவருக்கு ஒரு கீராத் (நன்மை) உண்டு; யார் அந்த ஜனாஸா கப்ரில் வைக்கப்படும் வரை அதைப் பின்தொடர்ந்து செல்கிறாரோ, அவருக்கு இரண்டு கீராத்துகள் உண்டு."
நான் (அபூ ஹாஸிம்) கேட்டேன்: "அபூ ஹுரைரா அவர்களே! கீராத் என்றால் என்ன?" அவர்கள் கூறினார்கள்: "அது உஹது மலை போன்றதாகும்."