அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ஒரு ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று, அதற்குத் தொழுதுவிட்டுத் திரும்பிவிடுகிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை உண்டு. யார் அதைப் பின்தொடர்ந்து சென்று, அதற்குத் தொழுதுவிட்டு, அது நல்லடக்கம் செய்யப்பட்டு முடியும் வரை இருக்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மைகள் உண்டு. அவ்விரண்டில் ஒவ்வொன்றும் உஹத் மலையை விடப் பெரியதாகும்.”