இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனைவருக்கும் ரமழானின் ஸகாத்தாக ஒரு ஸாஃ1 பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ வாற்கோதுமையை கடமையாக்கினார்கள். எனவே மக்கள் அதனை அரை ஸாஃ கோதுமைக்கு சமமாகக் கருதினார்கள்."
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆண், பெண், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாஃ பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ வாற்கோதுமையை ஸதக்கத்துல் ஃபித்ராகக் கடமையாக்கினார்கள்." அவர் கூறினார்கள்: "மக்கள் அதை அரை ஸாஃ கோதுமைக்கு சமமாக கருதினார்கள்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"சிறியவர், பெரியவர், ஆண், பெண், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஸதக்கத்துல் ஃபித்ரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்; ஒரு ஸாவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாவு வாற்கோதுமை."