இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1414ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَطُوفُ الرَّجُلُ فِيهِ بِالصَّدَقَةِ مِنَ الذَّهَبِ ثُمَّ لاَ يَجِدُ أَحَدًا يَأْخُذُهَا مِنْهُ، وَيُرَى الرَّجُلُ الْوَاحِدُ يَتْبَعُهُ أَرْبَعُونَ امْرَأَةً، يَلُذْنَ بِهِ مِنْ قِلَّةِ الرِّجَالِ وَكَثْرَةِ النِّسَاءِ ‏ ‏‏.‏
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒரு மனிதன் தங்கத்தைத் தர்மமாக எடுத்துக்கொண்டு சுற்றுவான். ஆனால், அதை அவனிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரையும் அவன் காணமாட்டான். ஆண்களின் எண்ணிக்கை குறைந்து, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதால், நாற்பது பெண்கள் ஒரு ஆணின் அடைக்கலத்தை நாடி அவரைப் பின்தொடர்வதை அப்போது பார்க்கலாம்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1825ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏ليأتين على الناس زمان يطوف الرجل فيه بالصدقة من الذهب، فلا يجد أحداً يأخذها منه، ويرى الرجل الواحد يتبعه أربعون امرأة يلذن به من قلة الرجال وكثرة النساء‏ ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். அப்போது ஒரு மனிதன் தனது தங்கத்தாலான தர்மத்தை எடுத்துக்கொண்டு சுற்றி வருவான்; ஆனால், அதை அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள எவரையும் காணமாட்டான். ஆண்களின் பற்றாக்குறை மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக, நாற்பது பெண்கள் ஒரே ஒரு ஆணைச் சார்ந்து பின்தொடர்வதை (அக்காலத்தில்) பார்க்கலாம்.”

முஸ்லிம்