ஆபி அல்-லஹ்ம் அவர்களின் முன்னாள் அடிமையான உமைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"என் எஜமானர் இறைச்சியை வெட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டார். அப்போது ஓர் ஏழை வந்தார். நான் அவருக்கு அதிலிருந்து உணவளித்தேன். இதனையறிந்த என் எஜமானர் என்னை அடித்தார். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் எஜமானரை அழைத்து, 'நீ ஏன் அவனை அடித்தாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நான் கட்டளையிடாமலேயே அவன் என் உணவைக் கொடுக்கிறான்' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(அதற்கான) நற்கூலி உங்கள் இருவருக்கும் உண்டு' என்று கூறினார்கள்."