இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2458சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ تَصُومُ الْمَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلاَّ بِإِذْنِهِ غَيْرَ رَمَضَانَ وَلاَ تَأْذَنُ فِي بَيْتِهِ وَهُوَ شَاهِدٌ إِلاَّ بِإِذْنِهِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண், தன் கணவர் ஊரில் இருக்கும்போது அவரின் அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோற்பது ஆகுமானதல்ல, மேலும் அவரின் அனுமதியின்றி அவரின் வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதிக்கவும் கூடாது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ், முத்தஃபக்குன் அலைஹி, ரமழான் பற்றிய குறிப்பு இல்லாமல் (அல்-அல்பானி)
صحيح ق دون ذكر رمضان (الألباني)