وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَغُرَّنَّكُمْ أَذَانُ بِلاَلٍ وَلاَ هَذَا الْبَيَاضُ - لِعَمُودِ الصُّبْحِ - حَتَّى يَسْتَطِيرَ هَكَذَا .
சமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
பிலால் (ரழி) அவர்களின் பாங்கும், அதிகாலையின் (தூண் போன்ற) வெண்மையும் உங்களை வழிதவறச் செய்ய வேண்டாம். ஏனெனில் அது உண்மையான வைகறையின் வெண்மை அல்ல; மாறாக அது தூண் போன்று செங்குத்தாக இருக்கும் பொய்யான வைகறையின் வெண்மையாகும். மேலும், வெண்மைக் கீற்றுகள் இவ்வாறு (கிடைமட்டமாகப்) பரவும் வரை நீங்கள் உணவு உண்ணலாம்.
(மக்களுக்கு) உரையாற்றும்போது, ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
பிலால் (ரழி) அவர்களின் அதான் (தொழுகைக்கான அழைப்பு) உங்களை ஸஹர் உணவு உண்பதிலிருந்து தடுக்க வேண்டாம்; அவ்வாறே அடிவானத்தில் இந்த வழியில் (செங்குத்தாக) தோன்றும் வெண்மையும், அது கிடைமட்டமாகப் பரவி விரியும் வரை (உங்களைத் தடுக்க வேண்டாம்).
ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பிலாலின் அதானோ, செங்குத்தான ஃபஜ்ரோ உங்கள் ஸஹரை விட்டும் உங்களைத் தடுக்க வேண்டாம். மாறாக, அடிவானத்தில் பரவும் ஃபஜ்ரே (உண்மையான ஃபஜ்ராகும்).”