أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ بِأَىِّ شَىْءٍ طَيَّبْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ بِأَطْيَبِ الطِّيبِ عِنْدَ حُرْمِهِ وَحِلِّهِ .
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நீங்கள் எதனைக்கொண்டு நறுமணம் பூசினீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இஹ்ராம் கட்டும்போதும், இஹ்ராமிலிருந்து விடுபடும்போதும் நறுமணங்களில் மிகச் சிறந்ததைக் கொண்டு (பூசினேன்)' என்று கூறினார்கள்."