"என் ஒட்டகம் தொலைந்துவிட்டது. ஆகவே, அரஃபா நாளன்று அதைத் தேடி நான் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நான் (எனக்குள்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் 'ஹும்ஸ்' கூட்டத்தைச் சேர்ந்தவராயிற்றே! இவருக்கு இங்கே என்ன வேலை?' என்று கூறினேன்."
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரழி) அவர்கள் தங்களின் தந்தை (ஜுபைர் பின் முத்இம்) (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
"என்னுடைய ஒட்டகம் ஒன்றைத் தொலைத்துவிட்டேன், எனவே, அரஃபா நாளில் அதைத் தேடி நான் அரஃபாவிற்குச் சென்றேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். மேலும், 'இவர் இங்கு என்ன செய்கிறார்? இவர் 'ஹும்ஸ்' கூட்டத்தைச் சேர்ந்தவராயிற்றே' என்று கூறினேன்."