இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1692ஸஹீஹுல் புகாரி
وَعَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي تَمَتُّعِهِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَتَمَتَّعَ النَّاسُ مَعَهُ بِمِثْلِ الَّذِي أَخْبَرَنِي سَالِمٌ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக உம்ராவைச் செய்து (இஹ்ராம் கலைந்து) ‘தமத்துஉ’ செய்தார்கள் என்றும், மக்களும் அவர்களுடன் அவ்வாறே ‘தமத்துஉ’ செய்தார்கள் என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். (இந்தச் செய்தி) இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து சாலிம் எனக்கு அறிவித்ததைப் போன்றதேயாகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح