حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ لِصُبْحِ رَابِعَةٍ يُلَبُّونَ بِالْحَجِّ، فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً إِلاَّ مَنْ مَعَهُ الْهَدْىُ. تَابَعَهُ عَطَاءٌ عَنْ جَابِرٍ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (ரழி) துல்-ஹஜ் மாதம் 4ஆம் நாள் காலையில், ஹஜ் செய்ய நாடியவர்களாக, தல்பியா ((அல்லாஹ்வே! உனது கட்டளைகளுக்கு நாங்கள் கீழ்ப்படிகிறோம், உனது அழைப்புக்கு நாங்கள் பதிலளிக்கிறோம் 4) . . .) கூறிக் கொண்டு மக்காவை அடைந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், தம்முடன் ஹதீ (பலியிடப்படும் பிராணி) வைத்திருந்தவர்களைத் தவிர்த்து, தம் தோழர்களுக்கு (ரழி) ஹஜ்ஜுக்கு பதிலாக உம்ராவிற்கு இஹ்ராம் அணியுமாறு கட்டளையிட்டார்கள்.
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا حَبَّانُ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ لِصُبْحِ رَابِعَةٍ وَهُمْ يُلَبُّونَ بِالْحَجِّ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَحِلُّوا .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (ரழி) (துல்ஹஜ் மாதத்தின்) நான்காவது நாள் காலையில் ஹஜ்ஜுக்காக தல்பியா கூறியவர்களாக வந்தார்கள், மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்".