حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَالِمٌ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ، فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ بِالْمُزْدَلِفَةِ بِلَيْلٍ، فَيَذْكُرُونَ اللَّهَ مَا بَدَا لَهُمْ، ثُمَّ يَرْجِعُونَ قَبْلَ أَنْ يَقِفَ الإِمَامُ، وَقَبْلَ أَنْ يَدْفَعَ، فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ مِنًى لِصَلاَةِ الْفَجْرِ، وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ، فَإِذَا قَدِمُوا رَمَوُا الْجَمْرَةَ، وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரில் பலவீனமானவர்களை (முன்கூட்டியே) அனுப்பி வைப்பார்கள். எனவே அவர்கள் இரவில் முஸ்தலிஃபாவிலுள்ள ‘அல்-மஷ்அருல் ஹராம்’ அருகில் நின்று, அல்லாஹ்வை தங்களுக்கு இயன்றவரை நினைவு கூர்வார்கள். பிறகு இமாம் (தங்குவதற்கு) நிற்பதற்கு முன்பாகவும், (மினாவிற்குப்) புறப்படுவதற்கு முன்பாகவும் அவர்கள் (மினாவிற்குத்) திரும்பி விடுவார்கள். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்கு மினாவை அடைவார்கள்; அவர்களில் சிலர் அதற்குப் பிறகும் வருவார்கள். அவர்கள் (மினாவிற்கு) வந்து சேர்ந்ததும் ஜம்ராவில் கல்லெறிவார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர்களுக்கு (இவ்வாறு செய்ய) சலுகை அளித்தார்கள்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.