وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ جَابِرًا عَنْ رُكُوبِ الْهَدْىِ، فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ارْكَبْهَا بِالْمَعْرُوفِ حَتَّى تَجِدَ ظَهْرًا .
அபூ ஸுபைர் அறிவித்தார்கள்:
நான் ஜாபிர் (ரழி) அவர்களிடம் பலிப் பிராணியில் சவாரி செய்வது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: நீங்கள் மற்றொரு வாகனத்தைக் கண்டுபிடிக்கும் வரை அவற்றில் மென்மையாக சவாரி செய்யுங்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம் ‘பதனா’வில் (குர்பானி ஒட்டகத்தில்) சவாரி செய்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: ‘(சவாரி செய்ய) நீ நிர்பந்திக்கப்பட்டால், உனக்கு வேறு வாகனம் கிடைக்கும் வரை நியாயமான முறையில் அதில் சவாரி செய்’.”
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்களிடம் பலியிடப்படும் ஒட்டகங்களில் சவாரி செய்வது பற்றி கேட்டேன்.
அதற்கு அவர்கள், "வேறு வாகனம் கிடைக்கும் வரை, வேறு வழியில்லாதபோது, அவற்றின் மீது நயமாக சவாரி செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்றார்கள்.