حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ يَتْرُكُونَ الْمَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ، لاَ يَغْشَاهَا إِلاَّ الْعَوَافِ ـ يُرِيدُ عَوَافِيَ السِّبَاعِ وَالطَّيْرِ ـ وَآخِرُ مَنْ يُحْشَرُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ، يُرِيدَانِ الْمَدِينَةَ يَنْعِقَانِ بِغَنَمِهِمَا، فَيَجِدَانِهَا وَحْشًا، حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الْوَدَاعِ خَرَّا عَلَى وُجُوهِهِمَا .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "மதீனா மிகச் சிறந்த நிலையில் இருந்தபோதிலும் மக்கள் அதனை விட்டு வெளியேறிவிடுவார்கள். அதில் காட்டுப் பறவைகளும், வேட்டையாடும் விலங்குகளும் தவிர வேறு எதுவும் வசிக்காது. இறுதியாக ஒன்று திரட்டப்படுபவர்கள் முஸைனா குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களாவர். அவர்கள் தங்கள் ஆடுகளைச் சப்தமிட்டு ஓட்டியவாறு மதீனாவை நோக்கி வருவார்கள். அங்கே அது (மனிதர்களின்றி) வெறிச்சோடிக் கிடப்பதையே காண்பார்கள். இறுதியில் அவர்கள் ‘தனிய்யத்துல் வதா’ கணவாயை அடைந்ததும் முகங்குப்புற விழுந்து (இறந்து) போவார்கள்."
وعنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يتركون المدينة على خير ما كانت، لا يغشاها إلا العوافي -يريد: عوافي السباع والطير، وآخر من يحشر راعيان من مزينة يريدان المدينة ينعقان بغنمهما فيجدانها وحوشاً، حتى إذا بلغا ثنية الوداع خراً على وجوههما ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: “மக்கள் மதீனாவை அது மிகச் சிறந்த நிலையில் இருக்கும்போதே விட்டுச் செல்வார்கள். அங்கு (உணவு தேடித்திரியும்) காட்டு விலங்குகளையும் பறவைகளையும் தவிர வேறெதுவும் இருக்காது. இறுதியாக ஒன்று திரட்டப்படுபவர்கள் முஸைனா குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களாவர். அவர்கள் தங்கள் ஆடுகளைச் சத்தமிட்டு ஓட்டிக்கொண்டு மதீனாவை நாடி வருவார்கள். ஆனால், அதை வனவிலங்குகள் நிறைந்ததாகவே காண்பார்கள். இறுதியில் அவர்கள் ‘தனிய்யத்துல் வதா’ எனும் குன்றை அடைந்ததும் முகங்குப்புற (விழுந்து இறந்து) போவார்கள்.”