இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1453 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّ سَهْلَةَ بِنْتَ سُهَيْلِ بْنِ عَمْرٍو جَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ سَالِمًا - لِسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ - مَعَنَا فِي بَيْتِنَا وَقَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَلِمَ مَا يَعْلَمُ الرِّجَالُ ‏.‏ قَالَ ‏ ‏ أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ ‏ ‏ ‏.‏ قَالَ فَمَكَثْتُ سَنَةً أَوْ قَرِيبًا مِنْهَا لاَ أُحَدِّثُ بِهِ وَهِبْتُهُ ثُمَّ لَقِيتُ الْقَاسِمَ فَقُلْتُ لَهُ لَقَدْ حَدَّثْتَنِي حَدِيثًا مَا حَدَّثْتُهُ بَعْدُ ‏.‏ قَالَ فَمَا هُوَ فَأَخْبَرْتُهُ ‏.‏ قَالَ فَحَدِّثْهُ عَنِّي أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْنِيهِ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

சுஹைல் பின் அம்ரின் புதல்வி ஸஹ்லா, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் -இவர் அபூ ஹுதைஃபாவின் மவ்லா (முன்னாள் அடிமை)- எங்களுடன் எங்கள் வீட்டில் இருக்கிறார். ஆண்கள் அடையும் பருவ வயதை அவரும் அடைந்துவிட்டார்; ஆண்கள் அறிந்துகொள்ளும் (பெண்கள் தொடர்பான) விஷயங்களையும் அவர் அறிந்துகொண்டார்" என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவருக்குப் பாலூட்டு! (அதன் மூலம்) நீ அவருக்கு (திருமணத்திற்குத்) தடுக்கப்பட்டவளாக ஆகிவிடுவாய்" என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளரான இப்னு அபூ முலைக்கா கூறினார்:)
நான் (இந்த ஹதீஸை அறிவிக்க) அஞ்சி, ஒரு வருடம் அல்லது அதற்கொப்பான காலம் இதை (யாருக்கும்) அறிவிக்காமல் இருந்தேன். பிறகு நான் அல்-காஸிமைச் சந்தித்தேன். அவரிடம், "நீங்கள் எனக்கு ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை நான் அதன்பிறகு (வேறெவரிடமும்) அறிவிக்கவில்லை" என்று கூறினேன். அவர், "அது என்ன?" என்று கேட்டார். நான் அதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்கு அவர், "ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு இதை அறிவித்ததாக என் பெயரில் அதை அறிவியுங்கள்!" என்று கூறினார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3323சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الْوَهَّابِ، قَالَ أَنْبَأَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، أَنَّ سَالِمًا، مَوْلَى أَبِي حُذَيْفَةَ كَانَ مَعَ أَبِي حُذَيْفَةَ وَأَهْلِهِ فِي بَيْتِهِمْ فَأَتَتْ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ سَالِمًا قَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَقَلَ مَا عَقَلُوهُ وَإِنَّهُ يَدْخُلُ عَلَيْنَا وَإِنِّي أَظُنُّ فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْ ذَلِكَ شَيْئًا ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ ‏ ‏ ‏.‏ فَأَرْضَعْتُهُ فَذَهَبَ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ فَرَجَعْتُ إِلَيْهِ فَقُلْتُ إِنِّي قَدْ أَرْضَعْتُهُ فَذَهَبَ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அபூ ஹுதைஃபாவின் (ரழி) விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸாலிம் (ரழி), அபூ ஹுதைஃபா (ரழி) மற்றும் அவரது குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டில் வசித்து வந்தார். ஸுஹைலின் மகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்:

"ஸாலிம் பருவ வயதை அடைந்துவிட்டார்; ஆண்கள் புரிந்துகொள்வதை அவரும் புரிந்துகொள்கிறார். அவர் எங்களிடம் வருகிறார்; அபூ ஹுதைஃபா இதில் அதிருப்தியாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்."

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவருக்குப் பாலூட்டுங்கள், அதனால் நீங்கள் அவருக்கு (திருமணத்திற்குத்) தடை செய்யப்பட்டவராகி விடுவீர்கள்."

(பிறகு ஸுஹைலின் மகள் கூறினார்): "ஆகவே நான் அவருக்குப் பாலூட்டினேன்; அபூ ஹுதைஃபாவின் மனதில் இருந்த (அதிருப்தி) நீங்கியது. பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, 'நான் அவருக்குப் பாலூட்டினேன், அபூ ஹுதைஃபாவின் அதிருப்தியும் நீங்கிவிட்டது' என்று கூறினேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)