அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு முஸ்லிம் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ் (அந்த அடிமையின்) ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக இவருடைய ஒவ்வொரு உறுப்பையும் நரகத்திலிருந்து விடுவிப்பான்; (அந்த அடிமையின்) அந்தரங்க உறுப்புக்கு(ப் பகரமாக) இவருடைய அந்தரங்க உறுப்பையும் கூட (விடுவிப்பான்)."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
யார் ஓர் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்காகவும், (விடுதலை செய்த) இவருடைய ஒவ்வொரு உறுப்பையும், இவருடைய அந்தரங்க உறுப்புகளையும் கூட, அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலை செய்வான்.
நாங்கள் வாதிலா இப்னுல் அஸ்கஃ (ரழி) அவர்களிடம் சென்று, "எந்தவொரு கூட்டலும் குறைத்தலும் இல்லாத ஒரு ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கேட்டோம். அவர்கள் கோபமடைந்து, "உங்களில் ஒருவர் தனது வீட்டில் குர்ஆன் பிரதியைத் தொங்கவிட்டிருக்கும் நிலையில் அதை ஓதுகிறார்; (இருப்பினும்) அவர் அதில் கூட்டல்களையும் குறைத்தல்களையும் செய்கிறார்" என்று கூறினார்கள்.
நாங்கள், "நாங்கள் நாடியதெல்லாம், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு ஹதீஸைத்தான்" என்று கூறினோம்.
அவர்கள் கூறினார்கள்: "கொலை செய்த காரணத்தால் நரகத்திற்குத் தகுதியாகிவிட்ட எங்கள் நண்பர் ஒருவரைப் பற்றி (முறையிட) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்கள், 'அவருக்காக ஓர் அடிமையை விடுதலை செய்யுங்கள்; (அந்த அடிமையின்) ஒவ்வொரு உறுப்புக்கும் பதிலாக, இவருடைய ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலை செய்வான்' என்று கூறினார்கள்."
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்: 'எவர் ஒரு முஃமினான அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ், அவரின் ஓர் உறுப்பை, அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கு ஈடாக நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்கிறான்; எந்த அளவிற்கு எனில், அந்த அடிமையின் மறை உறுப்புக்கு ஈடாக, அவரின் மறை உறுப்பையும் அவன் (அல்லாஹ்) விடுதலை செய்கிறான்.'"
وعن أبي هريرة رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم : من أعتق رقبة مسلمة أعتق الله بكل عضو منه عضوًا منه من النار حتى فرجه بفرجه ((متفق عليه))
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒரு முஸ்லிம் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக, விடுதலை செய்தவரின் ஒவ்வொரு உறுப்பையும், அவரது மர்ம உறுப்பு உட்பட, அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து விடுவிப்பான்."