حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ هَلْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْصَى فَقَالَ لاَ. فَقُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الْوَصِيَّةُ أَوْ أُمِرُوا بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ.
தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் `அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா (ரழி) அவர்களிடம் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண சாசனம் செய்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை" என்று பதிலளித்தார்கள். நான் அவர்களிடம், "அப்படியானால், மரண சாசனம் செய்வது மக்களுக்கு எவ்வாறு விதிக்கப்பட்டது, (அல்லது அவர்கள் மரண சாசனம் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளனர்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை (அதாவது குர்ஆனை) மரண சாசனமாக விட்டுச் சென்றார்கள்" என்று பதிலளித்தார்கள்.