حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ سَرِيَّةً فِيهَا عَبْدُ اللَّهِ قِبَلَ نَجْدٍ، فَغَنِمُوا إِبِلاً كَثِيرًا، فَكَانَتْ سِهَامُهُمُ اثْنَىْ عَشَرَ بَعِيرًا أَوْ أَحَدَ عَشَرَ بَعِيرًا، وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்து திசைக்கு ஒரு சிரிய்யாவை (படைப்பிரிவை) அனுப்பினார்கள். அந்த சிரிய்யாவில் அப்துல்லாஹ் (பின் உமர்) அவர்களும் இருந்தார்கள். அவர்கள் போர்ச்செல்வமாக ஏராளமான ஒட்டகங்களைப் பெற்றார்கள். அவர்களது பங்கு பன்னிரண்டு ஒட்டகங்களாக அல்லது பதினோரு ஒட்டகங்களாக இருந்தது. மேலும், அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ஒரு ஒட்டகம் வழங்கப்பட்டது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ، قَالاَ حَدَّثَنَا اللَّيْثُ، - الْمَعْنَى - عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ سَرِيَّةً فِيهَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا إِبِلاً كَثِيرَةً فَكَانَتْ سُهْمَانُهُمُ اثْنَىْ عَشَرَ بَعِيرًا وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا . زَادَ ابْنُ مَوْهَبٍ فَلَمْ يُغَيِّرْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்தை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். அதில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அவர்கள் அதிக எண்ணிக்கையிலான ஒட்டகங்களை கனீமத்தாகப் பெற்றார்கள். அவர்களது பங்கு பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தது; மேலும் (கூடுதலாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ஒட்டகம் பரிசாக வழங்கப்பட்டது. இப்னு மவ்ஹப் அவர்களின் அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதனை மாற்றவில்லை” என்று கூடுதலாக வந்துள்ளது.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இடம்பெற்றிருந்த ஒரு படைப்பிரிவை நஜ்த் பகுதியை நோக்கி அனுப்பினார்கள். அவர்கள் (அப்போரில்) ஏராளமான ஒட்டகங்களைப் போர்ச் செல்வமாகப் பெற்றார்கள். அவர்களது பங்கு பன்னிரண்டு அல்லது பதினொரு ஒட்டகங்களாக இருந்தன. மேலும், அவர்களுக்குத் தலா ஓர் ஒட்டகம் உபரியாக வழங்கப்பட்டது.