இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2731, 2732ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ أَخْبَرَنِي الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا حَدِيثَ صَاحِبِهِ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَمَنَ الْحُدَيْبِيَةِ، حَتَّى كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ بِالْغَمِيمِ فِي خَيْلٍ لِقُرَيْشٍ طَلِيعَةً فَخُذُوا ذَاتَ الْيَمِينِ ‏"‏‏.‏ فَوَاللَّهِ مَا شَعَرَ بِهِمْ خَالِدٌ حَتَّى إِذَا هُمْ بِقَتَرَةِ الْجَيْشِ، فَانْطَلَقَ يَرْكُضُ نَذِيرًا لِقُرَيْشٍ، وَسَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِالثَّنِيَّةِ الَّتِي يُهْبَطُ عَلَيْهِمْ مِنْهَا، بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ‏.‏ فَقَالَ النَّاسُ حَلْ حَلْ‏.‏ فَأَلَحَّتْ، فَقَالُوا خَلأَتِ الْقَصْوَاءُ، خَلأَتِ الْقَصْوَاءُ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ مَا خَلأَتِ الْقَصْوَاءُ، وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ، وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الْفِيلِ، ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلاَّ أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ‏"‏‏.‏ ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ، قَالَ فَعَدَلَ عَنْهُمْ حَتَّى نَزَلَ بِأَقْصَى الْحُدَيْبِيَةِ، عَلَى ثَمَدٍ قَلِيلِ الْمَاءِ يَتَبَرَّضُهُ النَّاسُ تَبَرُّضًا، فَلَمْ يُلَبِّثْهُ النَّاسُ حَتَّى نَزَحُوهُ، وَشُكِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْعَطَشُ، فَانْتَزَعَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهُ فِيهِ، فَوَاللَّهِ مَا زَالَ يَجِيشُ لَهُمْ بِالرِّيِّ حَتَّى صَدَرُوا عَنْهُ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ، إِذْ جَاءَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ الْخُزَاعِيُّ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ مِنْ خُزَاعَةَ، وَكَانُوا عَيْبَةَ نُصْحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ تِهَامَةَ، فَقَالَ إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَىٍّ وَعَامِرَ بْنَ لُؤَىٍّ نَزَلُوا أَعْدَادَ مِيَاهِ الْحُدَيْبِيَةِ، وَمَعَهُمُ الْعُوذُ الْمَطَافِيلُ، وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ الْبَيْتِ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّا لَمْ نَجِئْ لِقِتَالِ أَحَدٍ، وَلَكِنَّا جِئْنَا مُعْتَمِرِينَ، وَإِنَّ قُرَيْشًا قَدْ نَهِكَتْهُمُ الْحَرْبُ، وَأَضَرَّتْ بِهِمْ، فَإِنْ شَاءُوا مَادَدْتُهُمْ مُدَّةً، وَيُخَلُّوا بَيْنِي وَبَيْنَ النَّاسِ، فَإِنْ أَظْهَرْ فَإِنْ شَاءُوا أَنْ يَدْخُلُوا فِيمَا دَخَلَ فِيهِ النَّاسُ فَعَلُوا، وَإِلاَّ فَقَدْ جَمُّوا، وَإِنْ هُمْ أَبَوْا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لأُقَاتِلَنَّهُمْ عَلَى أَمْرِي هَذَا حَتَّى تَنْفَرِدَ سَالِفَتِي، وَلَيُنْفِذَنَّ اللَّهُ أَمْرَهُ ‏"‏‏.‏ فَقَالَ بُدَيْلٌ سَأُبَلِّغُهُمْ مَا تَقُولُ‏.‏ قَالَ فَانْطَلَقَ حَتَّى أَتَى قُرَيْشًا قَالَ إِنَّا قَدْ جِئْنَاكُمْ مِنْ هَذَا الرَّجُلِ، وَسَمِعْنَاهُ يَقُولُ قَوْلاً، فَإِنْ شِئْتُمْ أَنْ نَعْرِضَهُ عَلَيْكُمْ فَعَلْنَا، فَقَالَ سُفَهَاؤُهُمْ لاَ حَاجَةَ لَنَا أَنْ تُخْبِرَنَا عَنْهُ بِشَىْءٍ‏.‏ وَقَالَ ذَوُو الرَّأْىِ مِنْهُمْ هَاتِ مَا سَمِعْتَهُ يَقُولُ‏.‏ قَالَ سَمِعْتُهُ يَقُولُ كَذَا وَكَذَا، فَحَدَّثَهُمْ بِمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏ فَقَامَ عُرْوَةُ بْنُ مَسْعُودٍ فَقَالَ أَىْ قَوْمِ أَلَسْتُمْ بِالْوَالِدِ قَالُوا بَلَى‏.‏ قَالَ أَوَلَسْتُ بِالْوَلَدِ قَالُوا بَلَى‏.‏ قَالَ فَهَلْ تَتَّهِمُونِي‏.‏ قَالُوا لاَ‏.‏ قَالَ أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي اسْتَنْفَرْتُ أَهْلَ عُكَاظٍ، فَلَمَّا بَلَّحُوا عَلَىَّ جِئْتُكُمْ بِأَهْلِي وَوَلَدِي وَمَنْ أَطَاعَنِي قَالُوا بَلَى‏.‏ قَالَ فَإِنَّ هَذَا قَدْ عَرَضَ لَكُمْ خُطَّةَ رُشْدٍ، اقْبَلُوهَا وَدَعُونِي آتِهِ‏.‏ قَالُوا ائْتِهِ‏.‏ فَأَتَاهُ فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَحْوًا مِنْ قَوْلِهِ لِبُدَيْلٍ، فَقَالَ عُرْوَةُ عِنْدَ ذَلِكَ أَىْ مُحَمَّدُ، أَرَأَيْتَ إِنِ اسْتَأْصَلْتَ أَمْرَ قَوْمِكَ هَلْ سَمِعْتَ بِأَحَدٍ مِنَ الْعَرَبِ اجْتَاحَ أَهْلَهُ قَبْلَكَ وَإِنْ تَكُنِ الأُخْرَى، فَإِنِّي وَاللَّهِ لأَرَى وُجُوهًا، وَإِنِّي لأَرَى أَوْشَابًا مِنَ النَّاسِ خَلِيقًا أَنْ يَفِرُّوا وَيَدَعُوكَ‏.‏ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ امْصُصْ بَظْرَ اللاَّتِ، أَنَحْنُ نَفِرُّ عَنْهُ وَنَدَعُهُ فَقَالَ مَنْ ذَا قَالُوا أَبُو بَكْرٍ‏.‏ قَالَ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ يَدٌ كَانَتْ لَكَ عِنْدِي لَمْ أَجْزِكَ بِهَا لأَجَبْتُكَ‏.‏ قَالَ وَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَكُلَّمَا تَكَلَّمَ أَخَذَ بِلِحْيَتِهِ، وَالْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ قَائِمٌ عَلَى رَأْسِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَهُ السَّيْفُ وَعَلَيْهِ الْمِغْفَرُ، فَكُلَّمَا أَهْوَى عُرْوَةُ بِيَدِهِ إِلَى لِحْيَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم ضَرَبَ يَدَهُ بِنَعْلِ السَّيْفِ، وَقَالَ لَهُ أَخِّرْ يَدَكَ عَنْ لِحْيَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَرَفَعَ عُرْوَةُ رَأْسَهُ فَقَالَ مَنْ هَذَا قَالُوا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ‏.‏ فَقَالَ أَىْ غُدَرُ، أَلَسْتُ أَسْعَى فِي غَدْرَتِكَ وَكَانَ الْمُغِيرَةُ صَحِبَ قَوْمًا فِي الْجَاهِلِيَّةِ، فَقَتَلَهُمْ، وَأَخَذَ أَمْوَالَهُمْ، ثُمَّ جَاءَ فَأَسْلَمَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَمَّا الإِسْلاَمَ فَأَقْبَلُ، وَأَمَّا الْمَالَ فَلَسْتُ مِنْهُ فِي شَىْءٍ ‏"‏‏.‏ ثُمَّ إِنَّ عُرْوَةَ جَعَلَ يَرْمُقُ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَيْنَيْهِ‏.‏ قَالَ فَوَاللَّهِ مَا تَنَخَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نُخَامَةً إِلاَّ وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ، وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ، فَرَجَعَ عُرْوَةُ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ أَىْ قَوْمِ، وَاللَّهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ، وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ، يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مُحَمَّدًا، وَاللَّهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلاَّ وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ، فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ، وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ، فَاقْبَلُوهَا‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْ بَنِي كِنَانَةَ دَعُونِي آتِهِ‏.‏ فَقَالُوا ائْتِهِ‏.‏ فَلَمَّا أَشْرَفَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَصْحَابِهِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ هَذَا فُلاَنٌ، وَهْوَ مِنْ قَوْمٍ يُعَظِّمُونَ الْبُدْنَ فَابْعَثُوهَا لَهُ ‏"‏‏.‏ فَبُعِثَتْ لَهُ وَاسْتَقْبَلَهُ النَّاسُ يُلَبُّونَ، فَلَمَّا رَأَى ذَلِكَ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا يَنْبَغِي لِهَؤُلاَءِ أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ، فَلَمَّا رَجَعَ إِلَى أَصْحَابِهِ قَالَ رَأَيْتُ الْبُدْنَ قَدْ قُلِّدَتْ وَأُشْعِرَتْ، فَمَا أَرَى أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ‏.‏ فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ مِكْرَزُ بْنُ حَفْصٍ‏.‏ فَقَالَ دَعُونِي آتِهِ‏.‏ فَقَالُوا ائْتِهِ‏.‏ فَلَمَّا أَشْرَفَ عَلَيْهِمْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هَذَا مِكْرَزٌ وَهْوَ رَجُلٌ فَاجِرٌ ‏"‏‏.‏ فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَبَيْنَمَا هُوَ يُكَلِّمُهُ إِذْ جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو‏.‏ قَالَ مَعْمَرٌ فَأَخْبَرَنِي أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ، أَنَّهُ لَمَّا جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لَقَدْ سَهُلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ ‏"‏‏.‏ قَالَ مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِهِ فَجَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ هَاتِ، اكْتُبْ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابًا، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْكَاتِبَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏"‏‏.‏ قَالَ سُهَيْلٌ أَمَّا الرَّحْمَنُ فَوَاللَّهِ مَا أَدْرِي مَا هُوَ وَلَكِنِ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ‏.‏ كَمَا كُنْتَ تَكْتُبُ‏.‏ فَقَالَ الْمُسْلِمُونَ وَاللَّهِ لاَ نَكْتُبُهَا إِلاَّ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏"‏‏.‏ فَقَالَ سُهَيْلٌ وَاللَّهِ لَوْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ مَا صَدَدْنَاكَ عَنِ الْبَيْتِ وَلاَ قَاتَلْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَاللَّهِ إِنِّي لَرَسُولُ اللَّهِ وَإِنْ كَذَّبْتُمُونِي‏.‏ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏"‏‏.‏ قَالَ الزُّهْرِيُّ وَذَلِكَ لِقَوْلِهِ ‏"‏ لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلاَّ أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ‏"‏‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَلَى أَنْ تُخَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الْبَيْتِ فَنَطُوفَ بِهِ ‏"‏‏.‏ فَقَالَ سُهَيْلٌ وَاللَّهِ لاَ تَتَحَدَّثُ الْعَرَبُ أَنَّا أُخِذْنَا ضُغْطَةً وَلَكِنْ ذَلِكَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فَكَتَبَ‏.‏ فَقَالَ سُهَيْلٌ وَعَلَى أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا رَجُلٌ، وَإِنْ كَانَ عَلَى دِينِكَ، إِلاَّ رَدَدْتَهُ إِلَيْنَا‏.‏ قَالَ الْمُسْلِمُونَ سُبْحَانَ اللَّهِ كَيْفَ يُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جَاءَ مُسْلِمًا فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ دَخَلَ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلِ بْنِ عَمْرٍو يَرْسُفُ فِي قُيُودِهِ، وَقَدْ خَرَجَ مِنْ أَسْفَلِ مَكَّةَ، حَتَّى رَمَى بِنَفْسِهِ بَيْنَ أَظْهُرِ الْمُسْلِمِينَ‏.‏ فَقَالَ سُهَيْلٌ هَذَا يَا مُحَمَّدُ أَوَّلُ مَا أُقَاضِيكَ عَلَيْهِ أَنْ تَرُدَّهُ إِلَىَّ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّا لَمْ نَقْضِ الْكِتَابَ بَعْدُ ‏"‏‏.‏ قَالَ فَوَاللَّهِ إِذًا لَمْ أُصَالِحْكَ عَلَى شَىْءٍ أَبَدًا‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ فَأَجِزْهُ لِي ‏"‏‏.‏ قَالَ مَا أَنَا بِمُجِيزِهِ لَكَ‏.‏ قَالَ ‏"‏ بَلَى، فَافْعَلْ ‏"‏‏.‏ قَالَ مَا أَنَا بِفَاعِلٍ‏.‏ قَالَ مِكْرَزٌ بَلْ قَدْ أَجَزْنَاهُ لَكَ‏.‏ قَالَ أَبُو جَنْدَلٍ أَىْ مَعْشَرَ الْمُسْلِمِينَ، أُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جِئْتُ مُسْلِمًا أَلاَ تَرَوْنَ مَا قَدْ لَقِيتُ وَكَانَ قَدْ عُذِّبَ عَذَابًا شَدِيدًا فِي اللَّهِ‏.‏ قَالَ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ أَلَسْتَ نَبِيَّ اللَّهِ حَقًّا قَالَ ‏"‏ بَلَى ‏"‏‏.‏ قُلْتُ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ قَالَ ‏"‏ بَلَى ‏"‏‏.‏ قُلْتُ فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا قَالَ ‏"‏ إِنِّي رَسُولُ اللَّهِ، وَلَسْتُ أَعْصِيهِ وَهْوَ نَاصِرِي ‏"‏‏.‏ قُلْتُ أَوَلَيْسَ كُنْتَ تُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي الْبَيْتَ فَنَطُوفُ بِهِ قَالَ ‏"‏ بَلَى، فَأَخْبَرْتُكَ أَنَّا نَأْتِيهِ الْعَامَ ‏"‏‏.‏ قَالَ قُلْتُ لاَ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ ‏"‏‏.‏ قَالَ فَأَتَيْتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ يَا أَبَا بَكْرٍ، أَلَيْسَ هَذَا نَبِيَّ اللَّهِ حَقًّا قَالَ بَلَى‏.‏ قُلْتُ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ قَالَ بَلَى‏.‏ قُلْتُ فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا قَالَ أَيُّهَا الرَّجُلُ، إِنَّهُ لَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَيْسَ يَعْصِي رَبَّهُ وَهْوَ نَاصِرُهُ، فَاسْتَمْسِكْ بِغَرْزِهِ، فَوَاللَّهِ إِنَّهُ عَلَى الْحَقِّ‏.‏ قُلْتُ أَلَيْسَ كَانَ يُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي الْبَيْتَ وَنَطُوفُ بِهِ قَالَ بَلَى، أَفَأَخْبَرَكَ أَنَّكَ تَأْتِيهِ الْعَامَ قُلْتُ لاَ‏.‏ قَالَ فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ‏.‏ قَالَ الزُّهْرِيِّ قَالَ عُمَرُ فَعَمِلْتُ لِذَلِكَ أَعْمَالاً‏.‏ قَالَ فَلَمَّا فَرَغَ مِنْ قَضِيَّةِ الْكِتَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ ‏"‏ قُومُوا فَانْحَرُوا، ثُمَّ احْلِقُوا ‏"‏‏.‏ قَالَ فَوَاللَّهِ مَا قَامَ مِنْهُمْ رَجُلٌ حَتَّى قَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ، فَلَمَّا لَمْ يَقُمْ مِنْهُمْ أَحَدٌ دَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ، فَذَكَرَ لَهَا مَا لَقِيَ مِنَ النَّاسِ‏.‏ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا نَبِيَّ اللَّهِ، أَتُحِبُّ ذَلِكَ اخْرُجْ ثُمَّ لاَ تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً حَتَّى تَنْحَرَ بُدْنَكَ، وَتَدْعُوَ حَالِقَكَ فَيَحْلِقَكَ‏.‏ فَخَرَجَ فَلَمْ يُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ، حَتَّى فَعَلَ ذَلِكَ نَحَرَ بُدْنَهُ، وَدَعَا حَالِقَهُ فَحَلَقَهُ‏.‏ فَلَمَّا رَأَوْا ذَلِكَ، قَامُوا فَنَحَرُوا، وَجَعَلَ بَعْضُهُمْ يَحْلِقُ بَعْضًا، حَتَّى كَادَ بَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا غَمًّا، ثُمَّ جَاءَهُ نِسْوَةٌ مُؤْمِنَاتٌ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏بِعِصَمِ الْكَوَافِرِ‏}‏ فَطَلَّقَ عُمَرُ يَوْمَئِذٍ امْرَأَتَيْنِ كَانَتَا لَهُ فِي الشِّرْكِ، فَتَزَوَّجَ إِحْدَاهُمَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، وَالأُخْرَى صَفْوَانُ بْنُ أُمَيَّةَ، ثُمَّ رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ، فَجَاءَهُ أَبُو بَصِيرٍ ـ رَجُلٌ مِنْ قُرَيْشٍ ـ وَهْوَ مُسْلِمٌ فَأَرْسَلُوا فِي طَلَبِهِ رَجُلَيْنِ، فَقَالُوا الْعَهْدَ الَّذِي جَعَلْتَ لَنَا‏.‏ فَدَفَعَهُ إِلَى الرَّجُلَيْنِ، فَخَرَجَا بِهِ حَتَّى بَلَغَا ذَا الْحُلَيْفَةِ، فَنَزَلُوا يَأْكُلُونَ مِنْ تَمْرٍ لَهُمْ، فَقَالَ أَبُو بَصِيرٍ لأَحَدِ الرَّجُلَيْنِ وَاللَّهِ إِنِّي لأَرَى سَيْفَكَ هَذَا يَا فُلاَنُ جَيِّدًا‏.‏ فَاسْتَلَّهُ الآخَرُ فَقَالَ أَجَلْ، وَاللَّهِ إِنَّهُ لَجَيِّدٌ، لَقَدْ جَرَّبْتُ بِهِ ثُمَّ جَرَّبْتُ‏.‏ فَقَالَ أَبُو بَصِيرٍ أَرِنِي أَنْظُرْ إِلَيْهِ، فَأَمْكَنَهُ مِنْهُ، فَضَرَبَهُ حَتَّى بَرَدَ، وَفَرَّ الآخَرُ، حَتَّى أَتَى الْمَدِينَةَ، فَدَخَلَ الْمَسْجِدَ يَعْدُو‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَآهُ ‏"‏ لَقَدْ رَأَى هَذَا ذُعْرًا ‏"‏‏.‏ فَلَمَّا انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قُتِلَ وَاللَّهِ صَاحِبِي وَإِنِّي لَمَقْتُولٌ، فَجَاءَ أَبُو بَصِيرٍ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، قَدْ وَاللَّهِ أَوْفَى اللَّهُ ذِمَّتَكَ، قَدْ رَدَدْتَنِي إِلَيْهِمْ ثُمَّ أَنْجَانِي اللَّهُ مِنْهُمْ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَيْلُ أُمِّهِ مِسْعَرَ حَرْبٍ، لَوْ كَانَ لَهُ أَحَدٌ ‏"‏‏.‏ فَلَمَّا سَمِعَ ذَلِكَ عَرَفَ أَنَّهُ سَيَرُدُّهُ إِلَيْهِمْ، فَخَرَجَ حَتَّى أَتَى سِيفَ الْبَحْرِ‏.‏ قَالَ وَيَنْفَلِتُ مِنْهُمْ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلٍ، فَلَحِقَ بِأَبِي بَصِيرٍ، فَجَعَلَ لاَ يَخْرُجُ مِنْ قُرَيْشٍ رَجُلٌ قَدْ أَسْلَمَ إِلاَّ لَحِقَ بِأَبِي بَصِيرٍ، حَتَّى اجْتَمَعَتْ مِنْهُمْ عِصَابَةٌ، فَوَاللَّهِ مَا يَسْمَعُونَ بِعِيرٍ خَرَجَتْ لِقُرَيْشٍ إِلَى الشَّأْمِ إِلاَّ اعْتَرَضُوا لَهَا، فَقَتَلُوهُمْ، وَأَخَذُوا أَمْوَالَهُمْ، فَأَرْسَلَتْ قُرَيْشٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تُنَاشِدُهُ بِاللَّهِ وَالرَّحِمِ لَمَّا أَرْسَلَ، فَمَنْ أَتَاهُ فَهْوَ آمِنٌ، فَأَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ‏}‏ وَكَانَتْ حَمِيَّتُهُمْ أَنَّهُمْ لَمْ يُقِرُّوا أَنَّهُ نَبِيُّ اللَّهِ، وَلَمْ يُقِرُّوا بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَحَالُوا بَيْنَهُمْ وَبَيْنَ الْبَيْتِ‏.‏
அல்-மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் மர்வான் ஆகியோர் அறிவிக்கிறார்கள்: (இவ்விருவரின் அறிவிப்பும் மற்றவரின் அறிவிப்பை மெய்ப்பிக்கிறது).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் காலத்தில் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்கள் வழியில் சிறிது தூரம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக காலித் பின் அல்-வலீத், குரைஷிகளின் குதிரைப்படையின் முன்னணிப் பிரிவுடன் 'அல்-கமீம்' என்னுமிடத்தில் இருக்கிறார். எனவே நீங்கள் வலதுபுறமாகச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, காலித் அவர்களை (முஸ்லிம்களை) அவர்களது படையின் புழுதி பறக்கச் சென்றடையும் வரை உணரவில்லை. பிறகு அவர் (காலித்) குரைஷிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காகத் தனது குதிரையை விரட்டிச் சென்றார்.

நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து சென்றார்கள். (மக்காவாசிகளுக்கு) இறங்கிச் செல்லக்கூடிய கனவாய் பகுதியை அவர்கள் அடைந்தபோது, அவர்களின் ஒட்டகம் மண்டியிட்டது. மக்கள் "ஹல், ஹல்" (எழும்பு! எழும்பு!) என்று அதட்டினர். ஆனால் அது (எழாமல்) அடம்பிடித்தது. மக்கள், "கஸ்வா (ஒட்டகம்) முரண்டு பிடிக்கிறது! கஸ்வா முரண்டு பிடிக்கிறது!" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா முரண்டு பிடிக்கவில்லை; அது அதன் குணமும் இல்லை. மாறாக, (அப்ராஹாவின்) யானையைத் தடுத்தவனே இதனையும் தடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். பிறகு, "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்கள் என்னிடம் எந்தத் திட்டத்தைக் கேட்டாலும், அதை நான் அவர்களுக்கு வழங்குவேன்" என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தை அதட்ட, அது துள்ளி எழுந்தது. பிறகு அவர்கள் (குரைஷிகளின் பாதையைத் தவிர்த்து) மாறிச் சென்று, ஹுதைபிய்யாவின் ஒதுக்குப்புறத்தில், தண்ணீர் குறைவாக இருந்த ஒரு நீர்நிலைக்கு அருகில் தங்கினார்கள். மக்கள் அதிலிருந்து சிறுகச் சிறுகத் தண்ணீரை எடுத்தனர். சிறிது நேரத்திலேயே மக்கள் அதிலிருந்த நீரை வற்றச் செய்துவிட்டனர். பின்னர் தாகத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். நபி (ஸல்) அவர்கள் தங்கள் அம்பறாத்தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து, அதை அந்த நீர்நிலையில் ஊன்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் (தாகம் தணிய) நீர் அருந்தி அங்கிருந்து திரும்பும் வரை தண்ணீர் கொப்புளித்துக்கொண்டு இருந்தது.

அவர்கள் அந்நிலையில் இருந்தபோது, புதைல் பின் வரகா அல்குஸாஈ என்பவர் தனது சமூகமான குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் வந்தார். அவர்கள் திஹாமா வாசிகளிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நம்பிக்கையான ஆலோசகர்களாகத் திகழ்ந்தனர். அவர் (புதைல்), "நான் கஅப் பின் லுஅய் மற்றும் ஆமிர் பின் லுஅய் குலத்தாரை, ஹுதைபிய்யாவின் நீர்நிலைகளுக்கு அருகில் இறங்கியிருக்க விட்டு வருகிறேன். அவர்களுடன் பால் தரும் ஒட்டகங்களும் குட்டிகளும் (பெண்கள் மற்றும் குழந்தைகளும்) உள்ளன. அவர்கள் உங்களுடன் போரிடுவார்கள்; இறையில்லத்தை (கஅபாவை) நீங்கள் நெருங்க விடாமல் தடுப்பார்கள்" என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, உம்ரா செய்வதற்காகவே வந்துள்ளோம். நிச்சயமாக போர் குரைஷிகளை பலவீனப்படுத்திவிட்டது; அவர்களுக்குத் தீங்கிழைத்துவிட்டது. அவர்கள் விரும்பினால், அவர்களுடன் நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன்; அவர்களுக்கும் (எனக்கும்) மக்களுக்கும் இடையில் (குறுக்கிடாமல்) அவர்கள் வழிவிட வேண்டும். நான் (மற்றவர்களுடன் போரிட்டு) வெற்றி பெற்றால், மக்கள் நுழையும் மார்க்கத்தில் அவர்களும் விரும்பினால் நுழையலாம். இல்லையெனில், (போரின்றி) அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அவர்கள் (ஒப்பந்தத்தை) மறுத்தால், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! எனது தலை துண்டிக்கப்படும் வரை இக்காரியத்திற்காக நான் அவர்களுடன் போரிடுவேன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவேற்றியே தீருவான்" என்று கூறினார்கள்.

புதைல், "நீங்கள் கூறுவதை நான் அவர்களுக்குத் தெரிவிப்பேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டு குரைஷிகளிடம் வந்தார். "நாங்கள் அந்த மனிதரிடமிருந்து (நபியிடமிருந்து) வருகிறோம். அவர் ஒரு விஷயத்தைச் சொல்லக் கேட்டோம். அதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அவர்களிலிருந்த அறிவீனர்கள், "அவரைப் பற்றி எதையும் நீ எங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்றனர். அவர்களிலிருந்த அறிவுடையோர், "நீர் கேட்டதைச் சொல்லும்" என்றனர். அவர், "அவர் (நபி (ஸல்)) இன்னின்னவாறு சொல்லக் கேட்டேன்" என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தார்.

அப்போது உர்வா பின் மஸ்ஊத் எழுந்து, "என் சமூகத்தாரே! நீங்கள் (எனக்குத்) தந்தை(யின் ஸ்தானத்தில்) இல்லையா?" என்று கேட்டார். அவர்கள் "ஆம்" என்றனர். "நான் (உங்கள்) பிள்ளை இல்லையா?" என்று கேட்டார். அவர்கள் "ஆம்" என்றனர். "என்னை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?" என்று கேட்டார். அவர்கள் "இல்லை" என்றனர். "உக்காஸ்வாசிகளிடம் நான் உதவி கோரியதையும், அவர்கள் மறுத்தபோது, என் குடும்பத்தார், என் பிள்ளைகள் மற்றும் எனக்குக் கட்டுப்பட்டவர்களுடன் நான் உங்களிடம் வந்ததையும் நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார். அவர்கள் "ஆம்" என்றனர். அவர், "இதோ இவர் (நபி) உங்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்று கூறினார். அவர்கள் "அவரிடம் செல்லும்" என்றனர்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் கூறியதைப் போன்றே இவரிடமும் கூறினார்கள். அப்போது உர்வா, "முஹம்மதே! உங்கள் சமூகத்தை நீங்களே அழித்துவிடுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? உங்களுக்கு முன்பு அரபுகளில் யாரேனும் தன் குடும்பத்தையே அடியோடு அழித்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை மறுவிதமாக நடந்தால் (நீங்கள் தோற்றால்), அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (உங்களுக்கு உதவக்கூடிய) கண்ணியமான முகங்களை நான் இங்கு காணவில்லை. மாறாக, உங்களை விட்டுவிட்டு ஓடிவிடக்கூடிய பலதரப்பட்ட மக்களையே காண்கிறேன்" என்று கூறினார்.

அப்போது அபூபக்ர் (ரலி), **"அல்-லாத் (சிலையின்) மர்ம உறுப்பைச் சப்பு!** நாங்கள் அவரை விட்டு ஓடுவோமா? அவரைத் தனியே விட்டுவிடுவோமா?" என்று (கடிந்து) கூறினார். உர்வா, "யார் இது?" என்று கேட்டார். மக்கள், "அபூபக்ர்" என்றனர். உர்வா, "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உமக்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறு ஒன்று பாக்கியில்லையென்றால், உமக்கு நான் (தக்க) பதிலளித்திருப்பேன்" என்றார்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் பேசலானார். அவர் பேசும்போது நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிப்பார். முகீரா பின் ஷுஅபா (ரலி) தலையில் இரும்புக் கவசமும் இடுப்பில் வாளுமாக நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். உர்வா நபி (ஸல்) அவர்களின் தாடியைத் தொடுவதற்குத் தனது கையை நீட்டும்போதெல்லாம், முகீரா (ரலி) தனது வாளின் கைப்பிடியால் அவரது கையைத் தட்டி, "அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து உனது கையை எடு" என்று கூறுவார். உர்வா தலையை உயர்த்தி, "யார் இவர்?" என்று கேட்டார். மக்கள், "முகீரா பின் ஷுஅபா" என்றனர். உர்வா, "மோசக்காரனே! உனது மோசடிக்கு (நஷ்டஈடு கொடுத்து) நான் பாடுபடவில்லையா?" என்று கேட்டார். அறியாமைக் காலத்தில் முகீரா ஒரு கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, அவர்களைக் கொன்று அவர்களின் பொருட்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். பிறகு இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உனது இஸ்லாத்தை நான் ஏற்கிறேன். ஆனால் (நீ அபகரித்து வந்த) செல்வத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று கூறியிருந்தார்கள்.

பிறகு உர்வா, நபி (ஸல்) அவர்களின் தோழர்களை உற்றுநோக்கலானார். (திரும்பிச் சென்று மக்களிடம்) அவர் கூறினார்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் காறி உமிழ்ந்தால், அது அவர்களில் ஒருவரின் கரங்களில் விழாமல் இருப்பதில்லை. அதை அவர்கள் தங்கள் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கின்றனர். அவர் அவர்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால், அதை நிறைவேற்ற முந்திக்கொள்கின்றனர். அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால், அந்தத் தண்ணீரைப் பெறுவதற்குச் சண்டையிடும் அளவுக்குச் செல்கின்றனர். அவர் பேசினால், தங்கள் குரல்களைத் தாழ்த்திக்கொள்கின்றனர். அவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவரை அவர்கள் கூர்மையாக உற்றுநோக்குவதுமில்லை."

உர்வா தனது தோழர்களிடம் திரும்பிச் சென்று, "என் சமூகத்தாரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அரசர்களிடம் சென்றிருக்கிறேன். கைஸர், கிஸ்ரா, நஜாஷி ஆகியோரிடமும் சென்றிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மதுடைய தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவதைப் போன்று, எந்த மன்னரின் தோழர்களும் தங்கள் மன்னரைக் கண்ணியப்படுத்துவதை நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் காறி உமிழ்ந்தால், அது அவர்களில் ஒருவரின் கரத்தில் விழாமல் இருப்பதில்லை. அதை அவர்கள் தங்கள் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கின்றனர். அவர் கட்டளையிட்டால் அதைச் செய்ய முந்திக்கொள்கின்றனர். அவர் உளூச் செய்தால் அந்தத் தண்ணீருக்காகச் சண்டையிடும் அளவுக்குச் செல்கின்றனர். அவர் பேசினால் தங்கள் குரல்களைத் தாழ்த்திக்கொள்கின்றனர். அவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவரை உற்றுநோக்குவதுமில்லை. அவர் உங்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

பனூ கினானாவைச் சேர்ந்த ஒருவர், "என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்றார். அவர்கள் "செல்" என்றனர். அவர் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் முன்னால் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் இன்னார்; குர்பானி ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். எனவே குர்பானி ஒட்டகங்களை அவருக்கு முன்னால் ஓட்டிச் செல்லுங்கள்" என்றார்கள். அவ்வாறே அவை ஓட்டிச் செல்லப்பட்டன. மக்கள் தல்பியா முழங்கியவாறு அவரை வரவேற்றனர். அவர் இதைக் கண்டபோது, "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) இந்த மக்கள் இறையில்லத்தை அடைவதைத் தடுப்பது தகாது" என்று கூறினார். அவர் தன் தோழர்களிடம் திரும்பிச் சென்று, "குர்பானி ஒட்டகங்கள் அடையாளமிடப்பட்டு, கழுத்து மாலை அணிவிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். அவர்களை இறையில்லத்திலிருந்து தடுப்பதை நான் காணவில்லை (விரும்பவில்லை)" என்றார்.

பிறகு அவர்களிலிருந்து மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்பவர் எழுந்து, "என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்றார். அவர்கள் "செல்" என்றனர். அவர் அவர்களை (முஸ்லிம்களை) நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள், "இவர் மிக்ரஸ்; ஒரு பாவப்பட்ட மனிதர்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே சுஹைல் பின் அம்ர் வந்தார்.

அவர் வந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "உங்கள் காரியம் உங்களுக்கு எளிதாகிவிட்டது" என்றார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, "வாரும், எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை எழுதுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்து, "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதுங்கள்" என்றார்கள். சுஹைல், "'ரஹ்மான்' என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. மாறாக, முன்பு நீர் எழுதுவதைப் போன்று 'பிஸ்மிக்க அல்லாஹும்ம' (அல்லாஹ்வே! உனது பெயரால்) என்று எழுதுவீராக!" என்றார். முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதுவோம்" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "'பிஸ்மிக்க அல்லாஹும்ம' என்றே எழுதுங்கள்" என்றார்கள். பிறகு "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது தீர்ப்பளித்ததாகும்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நீர் அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் நம்பியிருந்தால், இறையில்லத்திலிருந்து உம்மைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உம்முடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, 'முஹம்மது பின் அப்துல்லாஹ்' என்று எழுதுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் என்னைப்பொய்ப்பித்தாலும் நான் அல்லாஹ்வின் தூதர்தான். (பரவாயில்லை) 'முஹம்மது பின் அப்துல்லாஹ்' என்றே எழுதுங்கள்" என்றார்கள். (அல்லாஹ்வின் கட்டளைகளைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்கள் எதைக் கேட்டாலும் அதை அவர்களுக்குக் கொடுத்துவிடுவதாக நபி (ஸல்) அவர்கள் முன்பே கூறியிருந்த காரணத்தால் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று அறிவிப்பாளர் சுஹ்ரி கூறுகிறார்).

பிறகு நபி (ஸல்) அவர்கள், "நாங்கள் இறையில்லத்தை வலம் வருவதற்கு (தவாஃப் செய்ய) எங்களுக்கு வழிவிட வேண்டும்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் நிர்பந்திக்கப்பட்டு இணங்கிவிட்டோம் என்று அரபுகள் பேசிக்கொள்ளக் கூடாது. வேண்டுமானால் அடுத்த வருடம் (அனுமதிக்கிறோம்)" என்று கூறி, அவ்வாறே எழுதினார். பிறகு சுஹைல், "எங்களிடமிருந்து ஒரு மனிதர் உம்மிடம் வந்தால் - அவர் உமது மார்க்கத்தில் இருந்தாலும் சரியே - அவரை எங்களிடமே நீர் திருப்பி அனுப்பிவிட வேண்டும்" என்றார். முஸ்லிம்கள், "சுப்ஹானல்லாஹ்! முஸ்லிமாக வந்த ஒருவரை எப்படி இணைவைப்பவர்களிடமே திருப்பி அனுப்புவது?" என்று கூறினார்கள்.

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அபூ ஜந்தல் பின் சுஹைல் பின் அம்ர், தனது விலங்குகளுடன் தள்ளாடி நடந்து வந்து முஸ்லிம்களிடம் தஞ்சம் புகுந்தார். சுஹைல், "முஹம்மதே! நான் உம்முடன் ஒப்பந்தம் செய்துகொண்ட முதல் விஷயம், இவரை என்னிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்பதே" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நாம் இன்னும் ஒப்பந்தத்தை எழுதி முடிக்கவில்லையே!" என்றார்கள். அவர், "அப்படியென்றால் நான் உம்முடன் எந்த சமாதானமும் செய்துகொள்ள மாட்டேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இவரை மட்டும் எனக்கு அனுமதிப்பீராக!" என்றார்கள். அவர், "நான் அனுமதிக்க மாட்டேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை, நீர் செய்தே ஆக வேண்டும்" என்றார்கள். அவர், "நான் செய்ய மாட்டேன்" என்றார். மிக்ரஸ், "நாங்கள் இவரை உமக்கு அனுமதித்துவிட்டோம்" என்றார். (ஆனால் சுஹைல் மறுத்துவிட்டார்). அபூ ஜந்தல், "முஸ்லிம் சமூகமே! முஸ்லிமாக வந்துள்ள என்னை இணைவைப்பவர்களிடமே திருப்பி அனுப்பப் போகிறீர்களா? நான் படும் துயரத்தை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கதறினார். அவர் அல்லாஹ்வின் பாதையில் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம் (நான் இறைத்தூதர்தான்)" என்றார்கள். "நாம் சத்தியத்திலும் நம் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்றார்கள். "அப்படியென்றால் நமது மார்க்கத்தில் நாம் ஏன் பணிந்து செல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கு நான் மாறுசெய்வதில்லை. அவன்தான் எனக்கு உதவி செய்பவன்" என்றார்கள். "நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை வலம் வருவோம் என்று எங்களிடம் நீங்கள் கூறவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், ஆனால் இந்த ஆண்டே வருவோம் என்று நான் உன்னிடம் கூறினேனா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "நிச்சயமாக நீ அங்கு வருவாய்; அதை வலம் வருவாய்" என்று கூறினார்கள். பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ரே! இவர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அவர் "ஆம்" என்றார். "நாம் சத்தியத்திலும் நம் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அவர் "ஆம்" என்றார். "அப்படியென்றால் நமது மார்க்கத்தில் நாம் ஏன் பணிந்து செல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அவர், "மனிதரே! நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர். அவர் தன் இறைவனுக்கு மாறுசெய்வதில்லை. அவன்தான் அவருக்கு உதவி செய்பவன். எனவே அவரது வழிமுறையைப் பற்றிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சத்தியத்தில்தான் இருக்கிறார்" என்றார். "நாம் இறையில்லத்திற்குச் சென்று வலம் வருவோம் என்று அவர் நம்மிடம் கூறவில்லையா?" என்று கேட்டேன். "ஆம், ஆனால் இந்த ஆண்டே வருவோம் என்று அவர் உன்னிடம் கூறினாரா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன். அவர், "நிச்சயமாக நீ அங்கு வருவாய்; அதை வலம் வருவாய்" என்றார். (உமர் (ரலி) கூறுகிறார்: "இதற்காக (நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக) நான் பல அமல்களைச் செய்தேன்").

ஒப்பந்தம் எழுதி முடிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "எழுந்து குர்பானி கொடுத்துவிட்டு, தலைமுடியை மழித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியும் அவர்களில் ஒருவரும் எழவில்லை. அவர்களில் யாரும் எழாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று, மக்களிடமிருந்து தனக்கு ஏற்பட்ட (மனவருத்தத்)தை விவரித்தார்கள். உம்மு ஸலமா (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதை விரும்புகிறீர்களா? நீங்கள் வெளியே சென்று உங்கள் ஒட்டகத்தை அறுத்து, உங்கள் நாவிதரை அழைத்து மழித்துக்கொள்ளும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்" என்று ஆலோசனை கூறினார். நபி (ஸல்) அவர்கள் வெளியே சென்று, (அவ்வாறே) தன் ஒட்டகத்தை அறுத்து, நாவிதரை அழைத்துத் தன் முடியை மழித்துக்கொண்டார்கள். இதைக் கண்டதும் (மற்றவர்களும்) எழுந்து குர்பானி கொடுத்து, ஒருவருக்கொருவர் முடியை மழித்துவிடலானார்கள். (விரைந்து செயல்பட்டதில்) நெரிசலால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து சாகுமளவுக்கு ஆயினர்.

பிறகு இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் (மூமினான பெண்கள்) வந்தார்கள். அப்போது அல்லாஹ், "ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் சோதித்துப் பாருங்கள்..." (திருக்குர்ஆன் 60:10) என்ற வசனத்தை அருளினான். (இதனைத் தொடர்ந்து) உமர் (ரலி) இணைவைப்பாளர்களாக இருந்த தன் இரண்டு மனைவியரை விவாகரத்து செய்தார். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபூ சுஃப்யானும், மற்றவரை சஃப்வான் பின் உமையாவும் மணந்துகொண்டனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். குரைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக அவர்களிடம் வந்தார். அவரைத் தேடி (குரைஷிகள்) இரண்டு நபர்களை அனுப்பி, "எங்களுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்று" என்று கேட்டனர். எனவே நபி (ஸல்) அவர்கள் அபூ பஸீரை அவ்விருவரிடமும் ஒப்படைத்தார்கள். அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு 'துல் ஹுலைஃபா' வரை சென்றனர். அங்கு அவர்கள் தங்களிடமிருந்த பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுவதற்காக இறங்கினர். அப்போது அபூ பஸீர் அவ்விருவரில் ஒருவரிடம், "இன்னாரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உனது இந்த வாள் மிக அருமையாக உள்ளதே!" என்றார். மற்றவர் அதை உருவி, "ஆம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது மிக அருமையானது; நான் இதை பலமுறை சோதித்திருக்கிறேன்" என்றார். அபூ பஸீர், "இங்கே தா, நான் அதைப் பார்க்கிறேன்" என்று கேட்டார். அவர் அவரிடம் அதைக் கொடுத்ததும், அவர் சாகும் வரை அவரை அடித்தார். மற்றவர் தப்பித்து மதீனா வந்து பள்ளியில் நுழைந்தார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவர் பீதியுற்றவர்போல் காணப்படுகிறார்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் தோழர் கொல்லப்பட்டுவிட்டார்; நானும் கொல்லப்படவிருந்தேன்" என்றார். அப்போது அபூ பஸீர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான்; என்னை அவர்களிடம் திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பிறகு அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டான்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இவருடைய தாய்க்கு கேடுதான்! இவருடன் இன்னும் சிலர் இருந்திருந்தால் இவர் போரை மூட்டியிருப்பாரே!" என்றார்கள்.

இதைச் செவியுற்ற அபூ பஸீர், நபி (ஸல்) அவர்கள் தன்னை மீண்டும் அவர்களிடமே திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறி கடற்கரைக்குச் சென்றுவிட்டார். (இதற்கிடையில்) அபூ ஜந்தல் பின் சுஹைல் அவர்களிடமிருந்து தப்பித்து அபூ பஸீருடன் சேர்ந்துகொண்டார். பிறகு குரைஷிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும் எவரும் அபூ பஸீருடன் போய்ச் சேரலாயினர். இறுதியில் ஒரு கூட்டம் சேர்ந்தது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குரைஷிகளின் வியாபாரக் கூட்டம் ஷாம் நோக்கிச் செல்வதை இவர்கள் கேள்விப்பட்டால், அவர்களை வழிமறித்து அவர்களைக் கொன்று, அவர்களின் பொருட்களை எடுத்துக்கொள்ளலானார்கள்.

எனவே குரைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வையும் உறவையும் முன்னிறுத்தி, "அவர்களைத் தாங்களே அழைத்துக்கொள்ள வேண்டும்; இனி உம்மிடம் வருபவர் பாதுகாப்பானவர்" என்று வேண்டிக்கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களை (மதீனாவிற்கு) அழைத்துக்கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ், "அவனே மக்காவின் (ஹுதைபிய்யா) பள்ளத்தாக்கில், அவர்கள்மீது உங்களுக்கு வெற்றியளித்த பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளை அவர்களை விட்டும் தடுத்தான்... எவர் நிராகரித்தார்களோ அவர்கள், தங்கள் உள்ளங்களில் வைராக்கியத்தை - அறியாமைக் காலத்து வைராக்கியத்தை - கொண்டபோது..." (திருக்குர்ஆன் 48:24-26) என்ற வசனங்களை அருளினான். அவர்கள், இவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்க மறுத்ததும், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று எழுதுவதை ஏற்க மறுத்ததும், இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் தடுத்ததுமே அந்த (அறியாமைக் கால) வைராக்கியமாகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3401ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبَكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى صَاحِبَ الْخَضِرِ لَيْسَ هُوَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ‏.‏ فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ أَنَّ مُوسَى قَامَ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا‏.‏ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ‏.‏ فَقَالَ لَهُ بَلَى، لِي عَبْدٌ بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ‏.‏ قَالَ أَىْ رَبِّ وَمَنْ لِي بِهِ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ أَىْ رَبِّ وَكَيْفَ لِي بِهِ ـ قَالَ تَأْخُذُ حُوتًا، فَتَجْعَلُهُ فِي مِكْتَلٍ، حَيْثُمَا فَقَدْتَ الْحُوتَ فَهْوَ ثَمَّ ـ وَرُبَّمَا قَالَ فَهْوَ ثَمَّهْ ـ وَأَخَذَ حُوتًا، فَجَعَلَهُ فِي مِكْتَلٍ، ثُمَّ انْطَلَقَ هُوَ وَفَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ، حَتَّى أَتَيَا الصَّخْرَةَ، وَضَعَا رُءُوسَهُمَا فَرَقَدَ مُوسَى، وَاضْطَرَبَ الْحُوتُ فَخَرَجَ فَسَقَطَ فِي الْبَحْرِ، فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، فَأَمْسَكَ اللَّهُ عَنِ الْحُوتِ جِرْيَةَ الْمَاءِ، فَصَارَ مِثْلَ الطَّاقِ، فَقَالَ هَكَذَا مِثْلُ الطَّاقِ‏.‏ فَانْطَلَقَا يَمْشِيَانِ بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمَهُمَا، حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا‏.‏ وَلَمْ يَجِدْ مُوسَى النَّصَبَ حَتَّى جَاوَزَ حَيْثُ أَمَرَهُ اللَّهُ‏.‏ قَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ، وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا، فَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَلَهُمَا عَجَبًا‏.‏ قَالَ لَهُ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، رَجَعَا يَقُصَّانِ آثَارَهُمَا حَتَّى انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، فَإِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ، فَسَلَّمَ مُوسَى، فَرَدَّ عَلَيْهِ‏.‏ فَقَالَ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ‏.‏ قَالَ أَنَا مُوسَى‏.‏ قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ، أَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا‏.‏ قَالَ يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ، عَلَّمَنِيهِ اللَّهُ لاَ تَعْلَمُهُ وَأَنْتَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ‏.‏ قَالَ هَلْ أَتَّبِعُكَ قَالَ ‏{‏إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا * وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏إِمْرًا‏}‏ فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، كَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمْ، فَعَرَفُوا الْخَضِرَ، فَحَمَلُوهُ بِغَيْرِ نَوْلٍ، فَلَمَّا رَكِبَا فِي السَّفِينَةِ جَاءَ عُصْفُورٌ، فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ فِي الْبَحْرِ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ، قَالَ لَهُ الْخَضِرُ يَا مُوسَى، مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ مِثْلَ مَا نَقَصَ هَذَا الْعُصْفُورُ بِمِنْقَارِهِ مِنَ الْبَحْرِ‏.‏ إِذْ أَخَذَ الْفَأْسَ فَنَزَعَ لَوْحًا، قَالَ فَلَمْ يَفْجَأْ مُوسَى إِلاَّ وَقَدْ قَلَعَ لَوْحًا بِالْقَدُّومِ‏.‏ فَقَالَ لَهُ مُوسَى مَا صَنَعْتَ قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا، لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا‏.‏ قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا، فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا‏.‏ فَلَمَّا خَرَجَا مِنَ الْبَحْرِ مَرُّوا بِغُلاَمٍ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ فَقَلَعَهُ بِيَدِهِ هَكَذَا ـ وَأَوْمَأَ سُفْيَانُ بِأَطْرَافِ أَصَابِعِهِ كَأَنَّهُ يَقْطِفُ شَيْئًا ـ فَقَالَ لَهُ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا‏.‏ قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي، قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي عُذْرًا‏.‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ مَائِلاً ـ أَوْمَأَ بِيَدِهِ هَكَذَا وَأَشَارَ سُفْيَانُ كَأَنَّهُ يَمْسَحُ شَيْئًا إِلَى فَوْقُ، فَلَمْ أَسْمَعْ سُفْيَانَ يَذْكُرُ مَائِلاً إِلاَّ مَرَّةً ـ قَالَ قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُطْعِمُونَا وَلَمْ يُضَيِّفُونَا عَمَدْتَ إِلَى حَائِطِهِمْ لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا‏.‏ قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ، سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا‏"‏‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَدِدْنَا أَنَّ مُوسَى كَانَ صَبَرَ، فَقَصَّ اللَّهُ عَلَيْنَا مِنْ خَبَرِهِمَا ‏"‏‏.‏ قَالَ سُفْيَانُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَوْ كَانَ صَبَرَ يُقَصُّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا ‏"‏‏.‏ وَقَرَأَ ابْنُ عَبَّاسٍ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا، وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا وَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ‏.‏ ثُمَّ قَالَ لِي سُفْيَانُ سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ وَحَفِظْتُهُ مِنْهُ‏.‏ قِيلَ لِسُفْيَانَ حَفِظْتَهُ قَبْلَ أَنْ تَسْمَعَهُ مِنْ عَمْرٍو، أَوْ تَحَفَّظْتَهُ مِنْ إِنْسَانٍ فَقَالَ مِمَّنْ أَتَحَفَّظُهُ وَرَوَاهُ أَحَدٌ عَنْ عَمْرٍو غَيْرِي سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا وَحَفِظْتُهُ مِنْهُ‏.‏
சயீத் பின் ஜுபைர் அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நௌஃப் அல்-பக்காலி என்பவர், அல்-கதிர் அவர்களின் தோழரான மூஸா, பனூ இஸ்ராயீலின் மூஸா (அலை) அல்ல; மாறாக அவர் வேறொரு மூஸா என்று வாதிடுகிறார்” என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் எதிரி (நௌஃப்) பொய் உரைத்துவிட்டார்” என்று கூறினார்கள்.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீலர்களிடையே நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘மக்களில் மிகவும் அறிவு மிக்கவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவை அல்லாஹ்விற்கே உரியதாக்காததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்தான். அல்லாஹ் அவர்களுக்கு, ‘இரு கடல்களும் சந்திக்கும் இடத்தில் என்னுடைய அடியார் ஒருவர் இருக்கிறார்; அவர் உன்னை விட அதிகம் அறிந்தவர்’ என்று வஹி அறிவித்தான்.

மூஸா (அலை) அவர்கள், ‘இறைவா! நான் அவரை எவ்வாறு சந்திப்பேன்?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ‘நீ ஒரு மீனை எடுத்து, அதை ஒரு கூடையில் வைத்துக்கொள். அந்த மீனை எங்கே தவறவிடுகிறாயோ அங்கே அவர் இருப்பார்’ என்று கூறினான்.

மூஸா (அலை) அவர்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு, தம் உதவியாளரான யூஷா பின் நூன் என்பவருடன் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் ஒரு பாறையை அடைந்ததும், தங்கள் தலைகளைச் சாய்த்துப் படுத்து உறங்கினார்கள். அப்போது மீன் கூடையிலிருந்து துள்ளி, கடலினுள் சென்று விழுந்தது. அது கடலில் (செல்லும் வழியில்) ஒரு சுரங்கத்தைப் போன்று தன் வழியை அமைத்துக் கொண்டது. அல்லாஹ் மீனின் மீது தண்ணீர் பாய்வதை தடுத்தான்; அதனால் அப்பகுதி ஒரு வளைவைப் (ஆர்ச்) போல ஆனது.”

(இதை விவரிக்கும் போது) நபி (ஸல்) அவர்கள் வளைவு போன்று தங்கள் கைகளால் சைகை செய்து காட்டினார்கள்.

“பிறகு அவர்கள் இருவரும் தங்கள் இரவின் மீதமுள்ள நேரத்திலும், பகலிலும் பயணம் செய்தனர். அடுத்த நாள் காலை வந்தபோது மூஸா (அலை) தம் உதவியாளரிடம், ‘நமது காலை உணவைக் கொண்டு வா! நமது இந்தப் பயணத்தில் நாம் மிகுந்த களைப்பைச் சந்தித்துவிட்டோம்’ என்று கூறினார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட அந்த இடத்தைக் கடந்து செல்லும் வரை மூஸா (அலை) களைப்பை உணரவில்லை.

அப்போது அவருடைய உதவியாளர் அவரிடம், ‘(நாம் ஓய்வெடுக்க) அந்தப் பாறையில் ஒதுங்கியபோது, நான் அந்த மீனை மறந்துவிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை நினைவூட்டுவதை விட்டும் ஷைத்தானே என்னை மறக்கச் செய்துவிட்டான். அது ஆச்சரியமான முறையில் கடலில் தன் வழியை அமைத்துக் கொண்டது’ என்று கூறினார். மீனுக்கு அது ஒரு பாதையாகவும், அவ்விருவருக்கும் அது ஒரு ஆச்சரியமாகவும் அமைந்தது.

மூஸா (அலை) அவர்கள், ‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்’ என்று கூறினார்கள். உடனே அவர்கள் இருவரும் தங்கள் கால்தடங்களைப் பின்பற்றியவாறே (வந்த வழியே) திரும்பிச் சென்றார்கள்.

அவர்கள் அந்தப் பாறையை அடைந்தபோது, அங்கே ஒரு மனிதர் ஆடையால் போர்த்தப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டார்கள். மூஸா (அலை) அவருக்கு சலாம் கூறினார்கள். அதற்கு அவர் (அல்-கதிர்), ‘உனது பூமியில் சலாம் (சாந்தி) ஏது?’ என்று கேட்டார்.

மூஸா (அலை) அவர்கள், ‘நான்தான் மூஸா’ என்று கூறினார்கள்.
அவர், ‘பனூ இஸ்ராயீலர்களின் மூஸாவா?’ என்று கேட்டார்.
மூஸா (அலை), ‘ஆம்’ என்றார்கள். மேலும், ‘அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து, எனக்கு நீங்கள் நல்வழியைக் கற்றுத் தருவதற்காக நான் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு அவர், ‘மூஸாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த அவனது அறிவில் நான் இருக்கிறேன்; அதை நீர் அறியமாட்டீர். அல்லாஹ் உமக்குக் கற்றுத் தந்த அறிவில் நீர் இருக்கிறீர்; அதை நான் அறியமாட்டேன்’ என்று கூறினார்.

மூஸா (அலை), ‘நான் உங்களைப் பின்தொடரலாமா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், **'இன்னக்க லன் தஸ்ததீஅ மஇய ஸப்ரா'** (நிச்சயமாக நீர் என்னுடன் இருக்கப் பொறுமை கொள்ள மாட்டீர்) என்றும், **'வ கைஃப தஸ்பிரு அலா மா லம் துஹித் பிஹி குப்ரா'** (உம்மால் முழுமையாக அறிய முடியாத விஷயத்தில் நீர் எப்படி பொறுமையாக இருப்பீர்?) என்றும் கூறினார். (அல்குர்ஆன் 18:67-68)

(அதற்கு மூஸா (அலை), ‘அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்; எந்த விஷயத்திலும் உமக்கு நான் மாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள்).

பிறகு அவர்கள் இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அவர்களுக்குச் சொந்தமாகப் படகு எதுவும் இருக்கவில்லை. அப்போது அவர்களைக் கடந்து ஒரு படகு சென்றது. தங்களை ஏற்றிக்கொள்ளும்படி அவர்கள் படகோட்டிகளிடம் பேசினார்கள். அல்-கதிர் அவர்களை அந்தப் படகோட்டிகள் அடையாளம் கண்டுகொண்டனர். அதனால் கூலி எதுவும் பெறாமலேயே அவர்களை ஏற்றிக்கொண்டனர்.

அவர்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிட்டுக்குருவி வந்து படகின் ஓரத்தில் அமர்ந்தது. அது கடலில் தன் அலகால் ஒன்று அல்லது இரண்டு முறை கொத்தியது (நீரைக் குடித்தது).

அல்-கதிர் அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம், ‘மூஸாவே! அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடும்போது, என்னுடைய அறிவும் உன்னுடைய அறிவும் இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் கடலிலிருந்து குறைத்த அளவைத் தவிர வேறில்லை’ என்று கூறினார்கள்.

அப்போது அல்-கதிர் அவர்கள் (திடீரென) ஒரு கோடரியை எடுத்து, படகின் பலகை ஒன்றை கழற்றினார்கள். அவர் கோடரியால் பலகையைப் பெயர்த்தெடுக்கும் வரை மூஸா (அலை) அவரைக் கவனிக்கவில்லை. (பிறகு) மூஸா (அலை) அவரிடம், ‘நீர் என்ன காரியம் செய்தீர்? இவர்கள் நம்மிடம் கூலி எதுவும் பெறாமல் நம்மை ஏற்றினார்கள்; ஆனால் நீரோ இவர்களின் படகில் ஓட்டையிட்டு, இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கப் பார்க்கிறீரா? **லகத் ஜிஃத ஷைஅன் இம்ரா** (நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான காரியத்தைச் செய்துவிட்டீர்)’ என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 18:71)

அதற்கு அவர், ‘நீர் என்னுடன் இருக்கப் பொறுமை கொள்ள மாட்டீர் என்று நான் சொல்லவில்லையா?’ என்று கேட்டார்.
மூஸா (அலை), ‘நான் மறந்ததற்காக என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்; என் விஷயத்தில் சிரமத்தைக் கொடுக்காதீர்கள்’ என்று கூறினார்கள். இது மூஸா (அலை) அவர்களிடமிருந்து ஏற்பட்ட முதலாவது மறதியாகும்.

பிறகு அவர்கள் கடலைவிட்டு வெளியேறிச் சென்றபோது, சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். அல்-கதிர் அவர்கள் அந்தச் சிறுவனின் தலையைப் பிடித்து, தன் கையால் அதைத் துண்டித்தார்.”

(அறிவிப்பாளர் சுஃப்யான் அவர்கள், ஏதோ ஒரு பழத்தைப் பறிப்பது போல தன் விரல் நுனிகளால் சைகை செய்து காட்டினார்).

“மூஸா (அலை) அவரிடம், ‘எந்த உயிருக்கும் பகரமாக இல்லாமல், ஒரு தூய ஆத்மாவை நீர் கொன்றுவிட்டீரே? **லகத் ஜிஃத ஷைஅன் நுக்ரா** (நிச்சயமாக நீர் ஒரு தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்)’ என்று கேட்டார்கள். (அல்குர்ஆன் 18:74)
அல்-கதிர் அவர்கள், ‘நீர் என்னுடன் இருக்கப் பொறுமை கொள்ள மாட்டீர் என்று நான் உமக்குச் சொல்லவில்லையா?’ என்று கேட்டார்.

அதற்கு மூஸா (அலை), ‘இதற்குப் பிறகு நான் எதைப் பற்றியாவது உம்மிடம் கேட்டால், என்னை நீர் உமது தோழராக வைத்துக்கொள்ள வேண்டாம். என்னிடமிருந்து தக்க காரணத்தைப் பெற்றுவிட்டீர்’ என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள் இருவரும் நடந்தார்கள். ஒரு கிராமத்தாரிடம் வந்து, அவர்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால் அக்கிராமத்தார் இவர்களுக்கு விருந்தளிக்க மறுத்துவிட்டனர். அங்கு இடிந்து விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவர்கள் கண்டார்கள்.”
(அல்-கதிர் அவர்கள் தம் கையை உயர்த்திக் காட்டி அச்சுவரைச் சரி செய்ததாக சுஃப்யான் சைகை செய்து காட்டினார்).

“மூஸா (அலை) அவர்கள், ‘நாம் இவர்களிடம் வந்தோம்; ஆனால் இவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; நமக்கு விருந்தளிக்கவும் இல்லை. ஆயினும் நீர் இவர்களது சுவரைச் சரிசெய்துள்ளீர். நீர் விரும்பியிருந்தால் இதற்காக இவர்களிடம் கூலி பெற்றிருக்கலாமே! **லவ் ஷிஃத லத்தகஸ்த அலைஹி அஜ்ரா**’ என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 18:77)

அதற்கு அல்-கதிர், ‘இதுதான் எனக்கும் உமக்கும் இடையிலான பிரிவு. உம்மால் பொறுத்துக்கொள்ள முடியாதவற்றின் விளக்கத்தை நான் உமக்குச் சொல்கிறேன்’ என்று கூறினார்.”

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூஸா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அவ்வாறிருந்தால் அல்லாஹ் அவர்களின் செய்திகளை நமக்கு (இன்னும் அதிகமாக) விவரித்திருப்பான்.”

(மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (அவ்வசனத்தை), **"அவர்களுக்கு முன்னால் ஒரு அரசன் இருந்தான்; அவன் குறையற்ற (நல்ல) கப்பல்களை எல்லாம் அபகரித்துக் கொண்டிருந்தான்"** என்றும், **"அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக (காஃபிராக) இருந்தான்; அவனது பெற்றோரோ இறைநம்பிக்கையாளர்களாக (மூஃமின்களாக) இருந்தனர்"** என்றும் ஓதுபவர்களாக இருந்தார்கள்).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3700ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَبْلَ أَنْ يُصَابَ بِأَيَّامٍ بِالْمَدِينَةِ وَقَفَ عَلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ وَعُثْمَانَ بْنِ حُنَيْفٍ، قَالَ كَيْفَ فَعَلْتُمَا أَتَخَافَانِ أَنْ تَكُونَا قَدْ حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ قَالاَ حَمَّلْنَاهَا أَمْرًا هِيَ لَهُ مُطِيقَةٌ، مَا فِيهَا كَبِيرُ فَضْلٍ‏.‏ قَالَ انْظُرَا أَنْ تَكُونَا حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ، قَالَ قَالاَ لاَ‏.‏ فَقَالَ عُمَرُ لَئِنْ سَلَّمَنِي اللَّهُ لأَدَعَنَّ أَرَامِلَ أَهْلِ الْعِرَاقِ لاَ يَحْتَجْنَ إِلَى رَجُلٍ بَعْدِي أَبَدًا‏.‏ قَالَ فَمَا أَتَتْ عَلَيْهِ إِلاَّ رَابِعَةٌ حَتَّى أُصِيبَ‏.‏ قَالَ إِنِّي لَقَائِمٌ مَا بَيْنِي وَبَيْنَهُ إِلاَّ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ غَدَاةَ أُصِيبَ، وَكَانَ إِذَا مَرَّ بَيْنَ الصَّفَّيْنِ قَالَ اسْتَوُوا‏.‏ حَتَّى إِذَا لَمْ يَرَ فِيهِنَّ خَلَلاً تَقَدَّمَ فَكَبَّرَ، وَرُبَّمَا قَرَأَ سُورَةَ يُوسُفَ، أَوِ النَّحْلَ، أَوْ نَحْوَ ذَلِكَ، فِي الرَّكْعَةِ الأُولَى حَتَّى يَجْتَمِعَ النَّاسُ، فَمَا هُوَ إِلاَّ أَنْ كَبَّرَ فَسَمِعْتُهُ يَقُولُ قَتَلَنِي ـ أَوْ أَكَلَنِي ـ الْكَلْبُ‏.‏ حِينَ طَعَنَهُ، فَطَارَ الْعِلْجُ بِسِكِّينٍ ذَاتِ طَرَفَيْنِ لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ يَمِينًا وَلاَ شِمَالاً إِلاَّ طَعَنَهُ حَتَّى طَعَنَ ثَلاَثَةَ عَشَرَ رَجُلاً، مَاتَ مِنْهُمْ سَبْعَةٌ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ، طَرَحَ عَلَيْهِ بُرْنُسًا، فَلَمَّا ظَنَّ الْعِلْجُ أَنَّهُ مَأْخُوذٌ نَحَرَ نَفْسَهُ، وَتَنَاوَلَ عُمَرُ يَدَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَدَّمَهُ، فَمَنْ يَلِي عُمَرَ فَقَدْ رَأَى الَّذِي أَرَى، وَأَمَّا نَوَاحِي الْمَسْجِدِ فَإِنَّهُمْ لاَ يَدْرُونَ غَيْرَ أَنَّهُمْ قَدْ فَقَدُوا صَوْتَ عُمَرَ وَهُمْ يَقُولُونَ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ‏.‏ فَصَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ صَلاَةً خَفِيفَةً، فَلَمَّا انْصَرَفُوا‏.‏ قَالَ يَا ابْنَ عَبَّاسٍ، انْظُرْ مَنْ قَتَلَنِي‏.‏ فَجَالَ سَاعَةً، ثُمَّ جَاءَ، فَقَالَ غُلاَمُ الْمُغِيرَةِ‏.‏ قَالَ الصَّنَعُ قَالَ نَعَمْ‏.‏ قَالَ قَاتَلَهُ اللَّهُ لَقَدْ أَمَرْتُ بِهِ مَعْرُوفًا، الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَجْعَلْ مَنِيَّتِي بِيَدِ رَجُلٍ يَدَّعِي الإِسْلاَمَ، قَدْ كُنْتَ أَنْتَ وَأَبُوكَ تُحِبَّانِ أَنْ تَكْثُرَ الْعُلُوجُ بِالْمَدِينَةِ وَكَانَ ‏{‏الْعَبَّاسُ‏}‏ أَكْثَرَهُمْ رَقِيقًا‏.‏ فَقَالَ إِنْ شِئْتَ فَعَلْتُ‏.‏ أَىْ إِنْ شِئْتَ قَتَلْنَا‏.‏ قَالَ كَذَبْتَ، بَعْدَ مَا تَكَلَّمُوا بِلِسَانِكُمْ، وَصَلَّوْا قِبْلَتَكُمْ وَحَجُّوا حَجَّكُمْ فَاحْتُمِلَ إِلَى بَيْتِهِ فَانْطَلَقْنَا مَعَهُ، وَكَأَنَّ النَّاسَ لَمْ تُصِبْهُمْ مُصِيبَةٌ قَبْلَ يَوْمَئِذٍ، فَقَائِلٌ يَقُولُ لاَ بَأْسَ‏.‏ وَقَائِلٌ يَقُولُ أَخَافُ عَلَيْهِ، فَأُتِيَ بِنَبِيذٍ فَشَرِبَهُ فَخَرَجَ مِنْ جَوْفِهِ، ثُمَّ أُتِيَ بِلَبَنٍ فَشَرِبَهُ فَخَرَجَ مِنْ جُرْحِهِ، فَعَلِمُوا أَنَّهُ مَيِّتٌ، فَدَخَلْنَا عَلَيْهِ، وَجَاءَ النَّاسُ يُثْنُونَ عَلَيْهِ، وَجَاءَ رَجُلٌ شَابٌّ، فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدَمٍ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ، ثُمَّ شَهَادَةٌ‏.‏ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لاَ عَلَىَّ وَلاَ لِي‏.‏ فَلَمَّا أَدْبَرَ، إِذَا إِزَارُهُ يَمَسُّ الأَرْضَ‏.‏ قَالَ رُدُّوا عَلَىَّ الْغُلاَمَ قَالَ ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ، فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ، يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ انْظُرْ مَا عَلَىَّ مِنَ الدَّيْنِ‏.‏ فَحَسَبُوهُ فَوَجَدُوهُ سِتَّةً وَثَمَانِينَ أَلْفًا أَوْ نَحْوَهُ، قَالَ إِنْ وَفَى لَهُ مَالُ آلِ عُمَرَ، فَأَدِّهِ مِنْ أَمْوَالِهِمْ، وَإِلاَّ فَسَلْ فِي بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ، فَإِنْ لَمْ تَفِ أَمْوَالُهُمْ فَسَلْ فِي قُرَيْشٍ، وَلاَ تَعْدُهُمْ إِلَى غَيْرِهِمْ، فَأَدِّ عَنِّي هَذَا الْمَالَ، انْطَلِقْ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فَقُلْ يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ السَّلاَمَ‏.‏ وَلاَ تَقُلْ أَمِيرُ الْمُؤْمِنِينَ‏.‏ فَإِنِّي لَسْتُ الْيَوْمَ لِلْمُؤْمِنِينَ أَمِيرًا، وَقُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ‏.‏ فَسَلَّمَ وَاسْتَأْذَنَ، ثُمَّ دَخَلَ عَلَيْهَا، فَوَجَدَهَا قَاعِدَةً تَبْكِي فَقَالَ يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ بْنُ الْخَطَّابِ السَّلاَمَ وَيَسْتَأْذِنُ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ‏.‏ فَقَالَتْ كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي، وَلأُوثِرَنَّ بِهِ الْيَوْمَ عَلَى نَفْسِي‏.‏ فَلَمَّا أَقْبَلَ قِيلَ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَدْ جَاءَ‏.‏ قَالَ ارْفَعُونِي، فَأَسْنَدَهُ رَجُلٌ إِلَيْهِ، فَقَالَ مَا لَدَيْكَ قَالَ الَّذِي تُحِبُّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَذِنَتْ‏.‏ قَالَ الْحَمْدُ لِلَّهِ، مَا كَانَ مِنْ شَىْءٍ أَهَمُّ إِلَىَّ مِنْ ذَلِكَ، فَإِذَا أَنَا قَضَيْتُ فَاحْمِلُونِي ثُمَّ سَلِّمْ فَقُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَإِنْ أَذِنَتْ لِي فَأَدْخِلُونِي، وَإِنْ رَدَّتْنِي رُدُّونِي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ‏.‏ وَجَاءَتْ أُمُّ الْمُؤْمِنِينَ حَفْصَةُ وَالنِّسَاءُ تَسِيرُ مَعَهَا، فَلَمَّا رَأَيْنَاهَا قُمْنَا، فَوَلَجَتْ عَلَيْهِ فَبَكَتْ عِنْدَهُ سَاعَةً، وَاسْتَأْذَنَ الرِّجَالُ، فَوَلَجَتْ دَاخِلاً لَهُمْ، فَسَمِعْنَا بُكَاءَهَا مِنَ الدَّاخِلِ‏.‏ فَقَالُوا أَوْصِ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اسْتَخْلِفْ‏.‏ قَالَ مَا أَجِدُ أَحَقَّ بِهَذَا الأَمْرِ مِنْ هَؤُلاَءِ النَّفَرِ أَوِ الرَّهْطِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ عَنْهُمْ رَاضٍ‏.‏ فَسَمَّى عَلِيًّا وَعُثْمَانَ وَالزُّبَيْرَ وَطَلْحَةَ وَسَعْدًا وَعَبْدَ الرَّحْمَنِ وَقَالَ يَشْهَدُكُمْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَلَيْسَ لَهُ مِنَ الأَمْرِ شَىْءٌ ـ كَهَيْئَةِ التَّعْزِيَةِ لَهُ ـ فَإِنْ أَصَابَتِ الإِمْرَةُ سَعْدًا فَهْوَ ذَاكَ، وَإِلاَّ فَلْيَسْتَعِنْ بِهِ أَيُّكُمْ مَا أُمِّرَ، فَإِنِّي لَمْ أَعْزِلْهُ عَنْ عَجْزٍ وَلاَ خِيَانَةٍ وَقَالَ أُوصِي الْخَلِيفَةَ مِنْ بَعْدِي بِالْمُهَاجِرِينَ الأَوَّلِينَ أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ، وَيَحْفَظَ لَهُمْ حُرْمَتَهُمْ، وَأُوصِيهِ بِالأَنْصَارِ خَيْرًا، الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ مِنْ قَبْلِهِمْ، أَنْ يُقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ، وَأَنْ يُعْفَى عَنْ مُسِيئِهِمْ، وَأُوصِيهِ بِأَهْلِ الأَمْصَارِ خَيْرًا فَإِنَّهُمْ رِدْءُ الإِسْلاَمِ، وَجُبَاةُ الْمَالِ، وَغَيْظُ الْعَدُوِّ، وَأَنْ لاَ يُؤْخَذَ مِنْهُمْ إِلاَّ فَضْلُهُمْ عَنْ رِضَاهُمْ، وَأُوصِيهِ بِالأَعْرَابِ خَيْرًا، فَإِنَّهُمْ أَصْلُ الْعَرَبِ وَمَادَّةُ الإِسْلاَمِ أَنْ يُؤْخَذَ مِنْ حَوَاشِي أَمْوَالِهِمْ وَتُرَدَّ عَلَى فُقَرَائِهِمْ، وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صلى الله عليه وسلم أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلاَّ طَاقَتَهُمْ‏.‏ فَلَمَّا قُبِضَ خَرَجْنَا بِهِ فَانْطَلَقْنَا نَمْشِي فَسَلَّمَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ‏.‏ قَالَتْ أَدْخِلُوهُ‏.‏ فَأُدْخِلَ، فَوُضِعَ هُنَالِكَ مَعَ صَاحِبَيْهِ، فَلَمَّا فُرِغَ مِنْ دَفْنِهِ اجْتَمَعَ هَؤُلاَءِ الرَّهْطُ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ اجْعَلُوا أَمْرَكُمْ إِلَى ثَلاَثَةٍ مِنْكُمْ‏.‏ فَقَالَ الزُّبَيْرُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَلِيٍّ‏.‏ فَقَالَ طَلْحَةُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عُثْمَانَ‏.‏ وَقَالَ سَعْدٌ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ‏.‏ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَيُّكُمَا تَبَرَّأَ مِنْ هَذَا الأَمْرِ فَنَجْعَلُهُ إِلَيْهِ، وَاللَّهُ عَلَيْهِ وَالإِسْلاَمُ لَيَنْظُرَنَّ أَفْضَلَهُمْ فِي نَفْسِهِ‏.‏ فَأُسْكِتَ الشَّيْخَانِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَفَتَجْعَلُونَهُ إِلَىَّ، وَاللَّهُ عَلَىَّ أَنْ لاَ آلُوَ عَنْ أَفْضَلِكُمْ قَالاَ نَعَمْ، فَأَخَذَ بِيَدِ أَحَدِهِمَا فَقَالَ لَكَ قَرَابَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالْقَدَمُ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، فَاللَّهُ عَلَيْكَ لَئِنْ أَمَّرْتُكَ لَتَعْدِلَنَّ، وَلَئِنْ أَمَّرْتُ عُثْمَانَ لَتَسْمَعَنَّ وَلَتُطِيعَنَّ‏.‏ ثُمَّ خَلاَ بِالآخَرِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ، فَلَمَّا أَخَذَ الْمِيثَاقَ قَالَ ارْفَعْ يَدَكَ يَا عُثْمَانُ‏.‏ فَبَايَعَهُ، فَبَايَعَ لَهُ عَلِيٌّ، وَوَلَجَ أَهْلُ الدَّارِ فَبَايَعُوهُ‏.‏
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் தாக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு மதீனாவில் நான் அவர்களைக் கண்டேன். அவர்கள் ஹுதைஃபா பின் அல்-யமான் (ரழி) மற்றும் உஸ்மான் பின் ஹுனைஃப் (ரழி) ஆகியோருடன் நின்று, "நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அந்த நிலத்தின் (ஈராக்கின்) மீது அது தாங்கக்கூடியதை விட அதிகமான வரியை நீங்கள் விதித்திருக்கிறீர்களோ என்று அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அது தாங்கக்கூடிய சுமையையே நாங்கள் அதன் மீது விதித்திருக்கிறோம். அதில் நிறைய உபரி (விளைச்சல்) உள்ளது" என்று பதிலளித்தார்கள். உமர் (ரழி) அவர்கள், "அந்த நிலத்தின் மீது அது தாங்க முடியாததை நீங்கள் விதிக்கவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள், "இல்லை (நாங்கள் அவ்வாறு செய்யவில்லை)" என்றார்கள். உமர் (ரழி) அவர்கள், "அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால், ஈராக்கின் விதவைகள் எனக்குப் பிறகு வேறெந்த ஆணின் உதவியையும் நாடாதவாறு அவர்களை (செழிப்பாக) ஆக்குவேன்" என்று கூறினார்கள்.

ஆனால், அதிலிருந்து நான்காவது நாளிலேயே அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்கள் தாக்கப்பட்ட அந்த அதிகாலையில் நான் (தொழுகை வரிசையில்) நின்று கொண்டிருந்தேன்; எனக்கும் அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. உமர் (ரழி) அவர்கள் இரு வரிசைகளுக்கு இடையே நடந்து செல்லும்போது, "வரிசைகளை நேராக்குங்கள்" என்று கூறுவார்கள். வரிசைகளில் எந்த இடைவெளியும் இல்லை என்பதைக் கண்டால், முன்னே சென்று தக்பீர் கூறுவார்கள். மக்கள் (தொழுகையில் வந்து இணைய) ஒன்றுசேர்வதற்காக முதல் ரக்அத்தில் 'சூரா யூஸுஃப்' அல்லது 'அன்-நஹ்ல்' அல்லது அது போன்ற அத்தியாயங்களை ஓதுவார்கள்.

அவர்கள் தக்பீர் கூறிய உடனேயே, "நாய் என்னைக் கொன்றுவிட்டது (அல்லது கடித்துவிட்டது)" என்று அவர்கள் கூறுவதைக் கேட்டேன்; அந்த (அபூ லுஃலுஆ எனும்) மஜூசி அவர்களைக் குத்திய நேரம் அது. அந்த இறைமறுப்பாளன் (விஷம்தோய்த்த) இருமுனைக் கத்தியை ஏந்தியபடி (வரிசைகளை ஊடுருவி) பாய்ந்து சென்றான். தனது வலப்பக்கமும் இடப்பக்கமும் இருந்த எவரையும் அவன் குத்தாமல் விடவில்லை. அவ்வாறு பதிமூன்று நபர்களை அவன் குத்தினான்; அவர்களில் ஏழு பேர் இறந்துவிட்டனர். முஸ்லிம்களில் ஒருவர் இதைக் கண்டபோது, (அவன் மீது) ஒரு போர்வையை வீசினார். தான் பிடிபட்டுவிட்டதை உணர்ந்த அந்த இறைமறுப்பாளன் (கத்தியால்) தன்னைத்தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான்.

உமர் (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களின் கையைப் பிடித்து (தொழுகை நடத்த) முன்னே நிறுத்தினார்கள். உமர் (ரழி) அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் (அதாவது நான் உள்ளிட்டவர்கள்) நடந்த சம்பவத்தைக் கண்டோம். ஆனால், பள்ளிவாசலின் மற்ற பகுதிகளில் இருந்தவர்களுக்கு, உமர் (ரழி) அவர்களின் குரல் நின்றது தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்கள் "சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மக்களுக்குச் சுருக்கமாகத் தொழுகை நடத்தினார்கள்.

அவர்கள் (தொழுது) திரும்பியதும், உமர் (ரழி) அவர்கள், "இப்னு அப்பாஸே! என்னைக் குத்தியவர் யார் என்று பாருங்கள்" என்றார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சிறிது நேரம் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, "முஃகீராவின் அடிமை" என்றார்கள். உமர் (ரழி) அவர்கள், "அந்தக் கைவினைஞனா?" என்று கேட்க, "ஆம்" என்றார்கள். உமர் (ரழி), "அல்லாஹ் அவனை அழிப்பானாக! அவனுக்கு நான் நன்மை செய்யவே நாடினேன். தன்னை ஒரு முஸ்லிம் என்று வாதிடுபவனின் கையில் என் மரணத்தை ஏற்படுத்தாத அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். (இப்னு அப்பாஸே!) மதீனாவில் (இது போன்ற) இறைமறுப்பாளர்கள் அதிகம் இருக்கவேண்டுமென்று நீங்களும் உங்கள் தந்தையும் (அப்பாஸ் (ரழி)) விரும்பினீர்கள்" என்று கூறினார்கள். அப்பாஸ் (ரழி) அவர்கள் அதிகமான அடிமைகளை வைத்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் (ரழி), "நீங்கள் விரும்பினால் நாங்கள் செய்துவிடுகிறோம் (அதாவது அவர்களைக் கொன்றுவிடுகிறோம்)" என்றார். உமர் (ரழி), "தவறாகச் சொன்னீர்; அவர்கள் உங்கள் மொழியைப் பேசி, உங்கள் கிப்லாவை முன்னோக்கித் தொழுது, உங்களைப் போன்று ஹஜ்ஜும் செய்த பிறகு (அவர்களை எப்படிக் கொல்ல முடியும்?)" என்று கூறினார்கள்.

பிறகு உமர் (ரழி) அவர்கள் அவர்களது வீட்டிற்குச் சுமந்து செல்லப்பட்டார்கள்; நாங்களும் அவர்களுடன் சென்றோம். இதற்கு முன் மக்களுக்கு எந்த ஒரு சோதனையும் ஏற்படாதது போன்ற (ஒரு துயர) நிலை அது. சிலர் "பரவாயில்லை (குணமாகிவிடுவார்)" என்றார்கள்; சிலர் "இவரைப் பற்றிப் பயப்படுகிறோம்" என்றார்கள். பேரீச்சம்பழ ஊறல் (நபித்) கொண்டுவரப்பட்டது; அதை அவர்கள் அருந்தினார்கள். அது அவர்களின் வயிற்றுக் காயத்தின் வழியாக வெளியேறியது. பிறகு பால் கொண்டுவரப்பட்டது; அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக வெளியேறியது. ஆகவே, அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள்.

நாங்கள் அவர்களிடம் சென்றோம்; மக்களும் வந்து அவர்களைப் புகழ்ந்தனர். ஒரு இளைஞர் வந்து, "அமீருல் மூமினீன் அவர்களே! நற்செய்தி பெறுங்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கொண்டிருந்த தோழமை, இஸ்லாத்தில் உங்களுக்கிருக்கும் முந்திய அந்தஸ்து ஆகியவற்றை அறிவீர்கள். பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றீர்கள்; நீதியுடன் நடந்தீர்கள். இறுதியில் இதோ ஷஹாதத் (வீரமரணம்) அடைகிறீர்கள்" என்று கூறினார். அதற்கு உமர் (ரழி), "இவையனைத்தும் எனக்குச் சாதகமாகவும் இல்லாமல், பாதகமாகவும் இல்லாமல் (சமமாக) முடிந்தால் போதும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்கள். அந்த இளைஞர் திரும்பும்போது, அவரது ஆடை தரையில் படுவதைக் கண்ட உமர் (ரழி), "அந்த இளைஞரை என்னிடம் அழையுங்கள்" என்றார்கள். (அவர் வந்ததும்) "என் சகோதரரின் மகனே! உன் ஆடையை உயர்த்திக் கட்டிக்கொள். அது உன் ஆடைக்கும் நீண்ட உழைப்பைத் தரும்; உன் இறைவனிடத்திலும் அதிகச்சிறந்த பயபக்தியாக அமையும்" என்றார்கள்.

பிறகு, "அப்துல்லாஹ் பின் உமரே! எனக்கு எவ்வளவு கடன் உள்ளது என்று பார்" என்றார்கள். கணக்கிடப்பட்டபோது, அது சுமார் எண்பத்தாறாயிரம் (திர்ஹம்கள்) என்று தெரியவந்தது. உமர் (ரழி), "உமர் குடும்பத்தினரின் சொத்து இதற்குப் போதுமானதாக இருந்தால், அவர்களின் சொத்திலிருந்து இதைச் செலுத்திவிடு. போதவில்லை என்றால், 'பனு அதீ பின் கஅப்' குலத்தாரிடம் கேள். அவர்களின் சொத்தும் போதவில்லை என்றால், குறைஷிகளிடம் கேள். அவர்களைத் தாண்டி வேறு யாரிடமும் கேட்காதே. என் சார்பாக இந்தக் கடனை அடைத்துவிடு" என்றார்கள்.

பிறகு (மகனிடம்), "நீ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் செல். 'உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று சொல். 'அமீருல் மூமினீன்' (நம்பிக்கையாளர்களின் தலைவர்) என்று சொல்லாதே; ஏனெனில் இன்று நான் நம்பிக்கையாளர்களுக்குத் தலைவன் அல்லன். 'உமர் பின் அல்-கத்தாப் தனது இரு தோழர்களுடன் (நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரழி)) அடக்கம் செய்யப்பட அனுமதி கோருகிறார்' என்று சொல்" என்றார்கள்.

அவர் சென்று சலாம் கூறி அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தார். ஆயிஷா (ரழி) அவர்கள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். "உமர் பின் அல்-கத்தாப் உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; தனது இரு தோழர்களுடன் அடக்கம் செய்யப்பட அனுமதி கோருகிறார்" என்றார். அதற்கு ஆயிஷா (ரழி), "அந்த இடத்தை எனக்காக (நான் இறப்பிற்குப் பின் அடக்கம் செய்யப்பட) விரும்பியிருந்தேன். ஆயினும், இன்று என்னை விட அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) திரும்பி வந்தபோது, "இதோ அப்துல்லாஹ் பின் உமர் வந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. உமர் (ரழி), "என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்" என்றார்கள். ஒரு நபர் அவர்களைத் தாங்கிப் பிடித்தார். "என்ன செய்தி?" என்று உமர் (ரழி) கேட்டார்கள். "அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் விரும்பியவாறே அனுமதி கிடைத்துவிட்டது" என்றார். உமர் (ரழி), "அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! இதைவிட எனக்கு முக்கியமான விஷயம் வேறெதுவும் இல்லை. என் உயிர் பிரிந்ததும் என்னைச் சுமந்து செல்லுங்கள். பிறகு (மீண்டும்) சலாம் கூறி, 'உமர் பின் அல்-கத்தாப் அனுமதி கேட்கிறார்' என்று கூறு. அனுமதி அளித்தால் என்னை உள்ளே கொண்டு செல்லுங்கள்; இல்லையெனில், பொது முஸ்லிம்களின் மையவாடிக்கு என்னைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள்.

பிறகு (அன்னை) ஹஃப்ஸா (ரழி) அவர்களும், அவருடன் சில பெண்களும் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நாங்கள் எழுந்து (விலகி) கொண்டோம். அவர் உமர் (ரழி) அவர்களிடம் சென்று சிறிது நேரம் அழுதார். பிறகு ஆண்கள் அனுமதி கேட்டபோது அவர் (திரைக்குள்) சென்றுவிட்டார். உள்ளே அவர் அழுவதை நாங்கள் கேட்டோம்.

மக்கள், "அமீருல் மூமினீன் அவர்களே! வசிய்யத் (மரண சாசனம்) செய்யுங்கள்; (அடுத்த) கலீஃபாவை நியமியுங்கள்" என்றார்கள். உமர் (ரழி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவர்களைக் குறித்துத் திருப்தி அடைந்திருந்த நிலையில் மரணத்தைத் தழுவினார்களோ, அந்தக் குழுவினரை (அல்லது அந்த நபர்களைத்) தவிர, இந்த ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள் என்று யாரையும் நான் காணவில்லை" என்று கூறி, அலீ, உஸ்மான், ஸுபைர், தல்ஹா, ஸஅத் மற்றும் அப்துர் ரஹ்மான் (பின் அவ்ஃப்) (ரழி அன்ஹும்) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்கள். மேலும், "அப்துல்லாஹ் பின் உமர் உங்களுக்கு (கண்காணிப்பாளராக/சாட்சியாக) இருப்பார்; ஆனால் ஆட்சியில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று கூறினார்கள் - இது அவருக்கு (அப்துல்லாஹ்வுக்கு) ஆறுதல் அளிப்பதற்காகக் கூறப்பட்டது. "ஸஅத் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் அவரே அதற்குத் தகுதியானவர்; இல்லையெனில், உங்களில் யார் பொறுப்பேற்றாலும் ஸஅத் உடைய உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் அவரைத் திறமையின்மைக்காகவோ, மோசடிக்காகவோ பதவி நீக்கம் செய்யவில்லை" (என்று கூறினார்கள்).

மேலும் கூறினார்கள்: "எனக்குப் பின் வரும் கலீஃபாவுக்கு நான் வசிய்யத் செய்கிறேன்: ஆரம்பகால முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைப் பேண வேண்டும். முஹாஜிர்களுக்கு முன்பே மதீனாவில் தங்கியிருந்து, ஈமானை ஏற்றுக்கொண்ட அன்ஸார்களிடமும் நன்முறையில் நடக்க வேண்டும்; அவர்களில் நன்மை புரிபவரை ஏற்று, தவறு செய்பவரை மன்னிக்க வேண்டும். நகரங்களின் (மாகாணங்களின்) மக்களுக்கும் நன்மை செய்யும்படி உபதேசிக்கிறேன்; ஏனெனில் அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள், செல்வத்தைச் சேகரிப்பவர்கள், மற்றும் எதிரிகளுக்கு ஆத்திரம் ஊட்டுபவர்கள். அவர்களின் விருப்பப்படியே தவிர, (வரி என்ற பெயரில்) அவர்களின் உபரிச் செல்வத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. அரபி நாட்டுப்புற மக்களிடமும் (பெடோயின்கள்) நன்முறையில் நடக்க உபதேசிக்கிறேன்; ஏனெனில் அவர்கள் அரபியர்களின் அசல் தோற்றமும், இஸ்லாத்தின் பக்கபலமும் ஆவர். அவர்களின் செல்வத்தில் (கால்நடைகளில்) நடுத்தரமானதை எடுத்து, அவர்களிலுள்ள ஏழைகளுக்கே அது திரும்ப வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் பாதுகாப்பில் உள்ளவர்களிடம் (திம்மிகளிடம்) செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், அவர்களுக்காகப் போரிடவும், அவர்களின் சக்திக்கு மீறிய சுமையை அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்றும் உபதேசிக்கிறேன்."

உமர் (ரழி) அவர்கள் உயிர் பிரிந்ததும், நாங்கள் அவர்களைச் சுமந்து சென்றோம். அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) (ஆயிஷா (ரழி) அவர்களிடம்) சலாம் கூறி, "உமர் பின் அல்-கத்தாப் அனுமதி கேட்கிறார்" என்றார். ஆயிஷா (ரழி), "அவரை உள்ளே கொண்டு வாருங்கள்" என்றார்கள். அவர்கள் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, தனது இரு தோழர்களுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அடக்கம் முடிந்ததும், (உமர் (ரழி) அவர்களால் நியமிக்கப்பட்ட) அந்தக் குழுவினர் ஒன்று கூடினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), "உங்கள் விவகாரத்தை (ஆட்சித் தேர்வை) உங்களில் மூன்று பேரிடம் ஒப்படைத்துவிடுங்கள் (சுருக்கிக்கொள்ளுங்கள்)" என்றார். ஸுபைர் (ரழி), "என் உரிமையை அலீயிடம் ஒப்படைக்கிறேன்" என்றார். தல்ஹா (ரழி), "என் உரிமையை உஸ்மானிடம் ஒப்படைக்கிறேன்" என்றார். ஸஅத் (ரழி), "என் உரிமையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம் ஒப்படைக்கிறேன்" என்றார்.

(இப்போது மூவர் மீதமிருந்தனர்: அப்துர் ரஹ்மான், அலீ, உஸ்மான்). அப்துர் ரஹ்மான் (ரழி) (மற்ற இருவரிடம்), "உங்களில் யார் இந்த ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறாரோ, அவருக்குத் தலைமைப் பொறுப்பைத் தேர்வு செய்யும் உரிமையை நாம் வழங்கலாம்; அவர் (மீதமுள்ள) இருவரில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வும் இஸ்லாமும் சாட்சியாக இருப்பார்கள்" என்று கூறினார். அந்த இருவரும் (அலீ மற்றும் உஸ்மான்) அமைதியாக இருந்தனர். அப்துர் ரஹ்மான் (ரழி), "இதைத் தேர்வு செய்யும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுகிறீர்களா? உங்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் எந்தக் குறையும் வைக்கமாட்டேன் என்று அல்லாஹ்வைச் சாட்சியாகக் கூறுகிறேன்" என்றார். இருவரும் "ஆம்" என்றனர்.

அவர் இருவரில் ஒருவரின் (அலீயின்) கையைப் பிடித்து, "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உறவுமுறை உள்ளது; இஸ்லாத்தில் உங்களுக்குள்ள முந்திய சிறப்பை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் நீதியுடன் நடப்பீர்களா? உஸ்மானை நான் தேர்ந்தெடுத்தால் நீங்கள் அவருக்குச் செவிசாய்த்து, கட்டுப்படுவீர்களா? இதற்கு அல்லாஹ்வே உங்கள் மீது சாட்சி" என்று கேட்டார். பிறகு மற்றவரை (உஸ்மானை) தனியாக அழைத்து அவரிடமும் அவ்வாறே கூறினார். (இருவரிடமிருந்தும்) உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டதும், "உஸ்மானே! உங்கள் கையை உயர்த்துங்கள்" என்று கூறி, அவருக்கு (பைஅத்) விசுவாசப் பிரமாணம் செய்தார். பிறகு அலீ (ரழி) அவர்களும் அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார். பிறகு (மதீனா) மக்கள் அனைவரும் வந்து அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3905ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، فَلَمَّا ابْتُلِيَ الْمُسْلِمُونُ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا نَحْوَ أَرْضِ الْحَبَشَةِ، حَتَّى بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ وَهْوَ سَيِّدُ الْقَارَةِ‏.‏ فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِي قَوْمِي، فَأُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ وَأَعْبُدَ رَبِّي‏.‏ قَالَ ابْنُ الدَّغِنَةِ فَإِنَّ مِثْلَكَ يَا أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ، إِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ، وَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ، فَأَنَا لَكَ جَارٌ، ارْجِعْ وَاعْبُدْ رَبَّكَ بِبَلَدِكَ‏.‏ فَرَجَعَ وَارْتَحَلَ مَعَهُ ابْنُ الدَّغِنَةِ، فَطَافَ ابْنُ الدَّغِنَةِ عَشِيَّةً فِي أَشْرَافِ قُرَيْشٍ، فَقَالَ لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ وَلاَ يُخْرَجُ، أَتُخْرِجُونَ رَجُلاً يَكْسِبُ الْمَعْدُومَ، وَيَصِلُ الرَّحِمَ، وَيَحْمِلُ الْكَلَّ، وَيَقْرِي الضَّيْفَ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ فَلَمْ تُكَذِّبْ قُرَيْشٌ بِجِوَارِ ابْنِ الدَّغِنَةِ، وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ، فَلْيُصَلِّ فِيهَا وَلْيَقْرَأْ مَا شَاءَ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ، فَإِنَّا نَخْشَى أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا‏.‏ فَقَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِي بَكْرٍ، فَلَبِثَ أَبُو بَكْرٍ بِذَلِكَ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ، وَلاَ يَسْتَعْلِنُ بِصَلاَتِهِ، وَلاَ يَقْرَأُ فِي غَيْرِ دَارِهِ، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ وَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَنْقَذِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ، وَهُمْ يَعْجَبُونَ مِنْهُ، وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً، لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، وَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ، فَقَدِمَ عَلَيْهِمْ‏.‏ فَقَالُوا إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ بِجِوَارِكَ، عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ، فَقَدْ جَاوَزَ ذَلِكَ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَأَعْلَنَ بِالصَّلاَةِ وَالْقِرَاءَةِ فِيهِ، وَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا فَانْهَهُ، فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَعَلَ، وَإِنْ أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ بِذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ، فَإِنَّا قَدْ كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِي بَكْرٍ الاِسْتِعْلاَنَ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِي عَاقَدْتُ لَكَ عَلَيْهِ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ، وَإِمَّا أَنْ تَرْجِعَ إِلَىَّ ذِمَّتِي، فَإِنِّي لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّي أُخْفِرْتُ فِي رَجُلٍ عَقَدْتُ لَهُ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ فَإِنِّي أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ عَزَّ وَجَلَّ‏.‏ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ بِمَكَّةَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلْمُسْلِمِينَ ‏"‏ إِنِّي أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ ذَاتَ نَخْلٍ بَيْنَ لاَبَتَيْنِ ‏"‏‏.‏ وَهُمَا الْحَرَّتَانِ، فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ الْمَدِينَةِ، وَرَجَعَ عَامَّةُ مَنْ كَانَ هَاجَرَ بِأَرْضِ الْحَبَشَةِ إِلَى الْمَدِينَةِ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ قِبَلَ الْمَدِينَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ عَلَى رِسْلِكَ، فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ وَهَلْ تَرْجُو ذَلِكَ بِأَبِي أَنْتَ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيَصْحَبَهُ، وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ وَهْوَ الْخَبَطُ أَرْبَعَةَ أَشْهُرٍ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَبَيْنَمَا نَحْنُ يَوْمًا جُلُوسٌ فِي بَيْتِ أَبِي بَكْرٍ فِي نَحْرِ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ لأَبِي بَكْرٍ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُتَقَنِّعًا ـ فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا ـ فَقَالَ أَبُو بَكْرٍ فِدَاءٌ لَهُ أَبِي وَأُمِّي، وَاللَّهِ مَا جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ أَمْرٌ‏.‏ قَالَتْ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَ، فَأُذِنَ لَهُ فَدَخَلَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي بَكْرٍ ‏"‏ أَخْرِجْ مَنْ عِنْدَكَ ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّمَا هُمْ أَهْلُكَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ فَإِنِّي قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ الصَّحَابَةُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ قَالَ أَبُو بَكْرٍ فَخُذْ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ إِحْدَى رَاحِلَتَىَّ هَاتَيْنِ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بِالثَّمَنِ ‏"‏‏.‏ قَالَتْ عَائِشَةُ فَجَهَّزْنَاهُمَا أَحَثَّ الْجَهَازِ، وَصَنَعْنَا لَهُمَا سُفْرَةً فِي جِرَابٍ، فَقَطَعَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ قِطْعَةً مَنْ نِطَاقِهَا فَرَبَطَتْ بِهِ عَلَى فَمِ الْجِرَابِ، فَبِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقِ ـ قَالَتْ ـ ثُمَّ لَحِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ بِغَارٍ فِي جَبَلِ ثَوْرٍ فَكَمَنَا فِيهِ ثَلاَثَ لَيَالٍ، يَبِيتُ عِنْدَهُمَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ وَهْوَ غُلاَمٌ شَابٌّ ثَقِفٌ لَقِنٌ، فَيُدْلِجُ مِنْ عِنْدِهِمَا بِسَحَرٍ، فَيُصْبِحُ مَعَ قُرَيْشٍ بِمَكَّةَ كَبَائِتٍ، فَلاَ يَسْمَعُ أَمْرًا يُكْتَادَانِ بِهِ إِلاَّ وَعَاهُ، حَتَّى يَأْتِيَهُمَا بِخَبَرِ ذَلِكَ حِينَ يَخْتَلِطُ الظَّلاَمُ، وَيَرْعَى عَلَيْهِمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ مِنْحَةً مِنْ غَنَمٍ، فَيُرِيحُهَا عَلَيْهِمَا حِينَ يَذْهَبُ سَاعَةٌ مِنَ الْعِشَاءِ، فَيَبِيتَانِ فِي رِسْلٍ وَهْوَ لَبَنُ مِنْحَتِهِمَا وَرَضِيفِهِمَا، حَتَّى يَنْعِقَ بِهَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ بِغَلَسٍ، يَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ تِلْكَ اللَّيَالِي الثَّلاَثِ، وَاسْتَأْجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ رَجُلاً مِنْ بَنِي الدِّيلِ، وَهْوَ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا ـ وَالْخِرِّيتُ الْمَاهِرُ بِالْهِدَايَةِ ـ قَدْ غَمَسَ حِلْفًا فِي آلِ الْعَاصِ بْنِ وَائِلٍ السَّهْمِيِّ، وَهْوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ فَأَمِنَاهُ، فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ بِرَاحِلَتَيْهِمَا صُبْحَ ثَلاَثٍ، وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ وَالدَّلِيلُ فَأَخَذَ بِهِمْ طَرِيقَ السَّوَاحِلِ‏.‏
ஆயிஷா (ரழி) (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் விபரமறியத் தொடங்கியது முதல் என் பெற்றோர் இருவரும் இந்த (இஸ்லாமிய) மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களாகவே அன்றி நான் பார்த்ததில்லை. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எங்களைச் சந்திக்க வராத ஒரு நாள் கூட எங்களைக் கடந்து சென்றதில்லை. முஸ்லிம்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூபக்கர் (ரழி) அவர்கள் எத்தியோப்பியா நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டார்கள். அவர்கள் 'பர்க் அல்-கிமாத்' என்ற இடத்தை அடைந்தபோது, 'காரா' கோத்திரத்தின் தலைவரான இப்னு அத்தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்து, “அபூபக்கர் அவர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அபூபக்கர் (ரழி) அவர்கள், “என் சமுதாயத்தார் என்னை வெளியேற்றிவிட்டார்கள்; எனவே நான் பூமியில் சுற்றித் திரிந்து என் இறைவனை வணங்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு இப்னு அத்தஃகினா, “அபூபக்கர் அவர்களே! உங்களைப் போன்ற ஒருவர் (ஊரை விட்டு) வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில், நீங்கள் இல்லாதவர்களுக்கு ஈட்டித் தருகிறீர்கள்; உறவினர்களுடன் நல்லுறவைப் பேணுகிறீர்கள்; சிரமப்படுபவர்களின் சுமையைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சோதனையான கட்டங்களில் சத்தியத்திற்குத் துணை நிற்கிறீர்கள். எனவே, நான் உங்களுக்குப் பாதுகாப்பளிக்கிறேன். திரும்பிச் சென்று உங்கள் ஊரில் உங்கள் இறைவனை வணங்குங்கள்” என்று கூறினார்.

எனவே, அபூபக்கர் (ரழி) அவர்கள் திரும்பினார்கள்; இப்னு அத்தஃகினாவும் அவர்களுடன் சென்றார். மாலையில், இப்னு அத்தஃகினா குறைஷிகளின் பிரமுகர்களைச் சந்தித்து அவர்களிடம், “அபூபக்கர் போன்ற ஒரு மனிதர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. இல்லாதவர்களுக்கு ஈட்டித் தருகிற, உறவினர்களுடன் நல்லுறவைப் பேணுகிற, சிரமப்படுபவர்களின் சுமையைச் சுமக்கிற, விருந்தினர்களை உபசரிக்கிற, சோதனையான கட்டங்களில் சத்தியத்திற்குத் துணை நிற்கிற ஒரு மனிதரையா நீங்கள் வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்டார். குறைஷிகள் இப்னு அத்தஃகினாவின் பாதுகாப்பை மறுக்கவில்லை. அவர்கள் இப்னு அத்தஃகினாவிடம், “அபூபக்கர் தம் வீட்டில் தம் இறைவனை வணங்கட்டும். அவர் விரும்பியதை அங்கே தொழுது ஓதலாம். ஆனால் அதன் மூலம் எங்களுக்குத் தொல்லை தரக்கூடாது; அதை பகிரங்கப்படுத்தவும் கூடாது. ஏனென்றால், அவர் எங்கள் பெண்களையும் பிள்ளைகளையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள். இப்னு அத்தஃகினா அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் இதையெல்லாம் கூறினார். அபூபக்கர் (ரழி) அவர்கள் (சில காலம்) அந்த நிலையிலேயே தம் வீட்டில் தம் இறைவனை வணங்கி வந்தார்கள். அவர்கள் பகிரங்கமாகத் தொழவில்லை; தம் வீட்டிற்கு வெளியே குர்ஆனையும் ஓதவில்லை.

பின்னர், அபூபக்கர் (ரழி) அவர்களுக்குத் தம் வீட்டின் முற்றத்தில் ஒரு தொழுமிடத்தை (மஸ்ஜிதை) அமைத்துக்கொள்ளும் எண்ணம் தோன்றியது. (அவ்வாறு அமைத்து) அங்கே அவர்கள் தொழவும் குர்ஆன் ஓதவும் ஆரம்பித்தார்கள். (இதைக் கண்ட) இணைவைப்பாளர்களின் பெண்களும் பிள்ளைகளும் வியப்புடன் அவர்களைச் சுற்றி வேடிக்கை பார்க்கக் கூடினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் அதிகம் அழக்கூடிய மனிதராக இருந்தார்கள்; குர்ஆன் ஓதும்போது அவர்களால் தம் கண்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த நிலைமை குறைஷித் தலைவர்களைப் பயமுறுத்தியது. எனவே அவர்கள் இப்னு அத்தஃகினாவை அழைத்து வர ஆளனுப்பினார்கள்.

அவர் இவர்களிடம் வந்தபோது, இவர்கள், “அபூபக்கர் தம் வீட்டில் தம் இறைவனை வணங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் உங்கள் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டோம். ஆனால் அவர் அந்த வரம்பை மீறி, தம் வீட்டின் முற்றத்தில் ஒரு மஸ்ஜிதைக் கட்டியுள்ளார்; அங்கே அவர் பகிரங்கமாகத் தொழுது குர்ஆன் ஓதுகிறார். அவர் எங்கள் பெண்களையும் பிள்ளைகளையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவரைத் தடுத்து விடுங்கள். அவர் தம் இறை வழிபாட்டைத் தம் வீட்டிற்குள் மறைவாகச் செய்ய விரும்பினால், அவ்வாறு செய்யலாம். ஆனால், அவர் அதை வெளிப்படையாகச் செய்ய மறுத்தால், உமது பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவரிடம் கேளுங்கள். ஏனென்றால், உமது உடன்படிக்கையை முறிக்க நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூபக்கர் (ரழி) அவர்கள் (வழிபாட்டை) பகிரங்கப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்” என்று கூறினார்கள்.

(ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:) இப்னு அத்தஃகினா அபூபக்கர் (ரழி) அவர்களிடம் சென்று, “நான் உங்களுக்காகச் செய்த ஒப்பந்தத்தை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் அந்த வரம்பிற்குள் நின்று கொள்ளுங்கள்; அல்லது என் பொறுப்பை என்னிடமே திருப்பித் தந்துவிடுங்கள். ஏனெனில், நான் பாதுகாப்பு அளித்த ஒரு மனிதரின் விஷயத்தில் எனது ஒப்பந்தம் முறிக்கப்பட்டதாக அரேபியர்கள் பேசுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு அபூபக்கர் (ரழி) அவர்கள், “உமது பாதுகாப்பை உன்னிடமே திருப்பித் தந்துவிடுகிறேன்; அல்லாஹ்வின் பாதுகாப்பையே நான் பொருந்திக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.

அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களிடம், “நீங்கள் ஹிஜ்ரத் செய்யுமிடம் எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; அது பேரீச்சை மரங்கள் நிறைந்த, இரண்டு எரிமலைக் கற்களாலான மலைகளுக்கு இடைப்பட்ட பூமி” என்று கூறினார்கள். எனவே, மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்பவர்கள் சென்றார்கள்; எத்தியோப்பியா நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களும் மதீனாவிற்குப் புறப்படத் தயாரானார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “(அவசரப்பட வேண்டாம்) பொறுத்திருங்கள்; எனக்கும் அனுமதி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள், “என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் இதை எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று கூறினார்கள். எனவே, அபூபக்கர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்வதற்காகத் தம்மையே தடுத்துக் கொண்டார்கள். அவர்கள் தம்மிடம் இருந்த இரண்டு பெண் ஒட்டகங்களுக்கு நான்கு மாதங்களாக 'ஸமூர்' மரத்தின் இலைகளைக் குச்சியால் தட்டிப் போட்டு உணவளித்து (தயார் செய்து) வந்தார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நாள், நாங்கள் அபூபக்கர் (ரழி) அவர்களின் வீட்டில் நண்பகலில் அமர்ந்திருந்தபோது, ஒருவர் அபூபக்கர் (ரழி) அவர்களிடம், "இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையைத் துணியால் மறைத்தவர்களாக வருகிறார்கள்; இதற்கு முன் ஒருபோதும் அவர்கள் எங்களைச் சந்திக்க வராத நேரம் இது" என்று கூறினார். அபூபக்கர் (ரழி) அவர்கள், "என் தந்தையும் தாயும் அவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுவார்களாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஏதோவொரு முக்கிய விவகாரத்திற்காகவே தவிர இந்த நேரத்தில் அவர்கள் வந்திருக்க மாட்டார்கள்" என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள்; அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவர்கள் உள்ளே நுழைந்ததும், அபூபக்கர் (ரழி) அவர்களிடம், "உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றி விடுங்கள்" என்று கூறினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இங்கே இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தினர் (என் இரு மகள்கள்) மட்டுமே" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "நான் (வெளியேற) அனுமதிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் தங்களுடன் வரலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இதோ, தயார் நிலையில் உள்ள இந்த இரண்டு ஒட்டகங்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விலைக்கு மட்டுமே (பெற்றுக் கொள்வேன்)" என்று பதிலளித்தார்கள்.

நாங்கள் அவர்களுக்கான பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்தோம்; ஒரு தோல் பையில் அவர்களுக்காக உணக்கட்டைக் கட்டி வைத்தோம். அபூபக்கர் (ரழி) அவர்களின் மகள் அஸ்மா (ரழி) அவர்கள், தங்கள் இடுப்புப் பட்டையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, அதைக் கொண்டு அந்தப் பையின் வாயைக் கட்டினார்கள். அந்தக் காரணத்திற்காகவே அவர்கள் 'தாத் அந்-நிதாகைன்' (இரண்டு கச்சைகளை உடையவர்) என்று அழைக்கப்பட்டார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரழி) அவர்களும் (மக்காவிலிருந்து வெளியேறி) 'தவ்ர்' மலையில் உள்ள ஒரு குகையை அடைந்து, அங்கு மூன்று இரவுகள் தங்கினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களின் மகனான அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவர்களுடன் இரவில் தங்குபவராக இருந்தார். அவர் புத்திசாலியான, விவேகமான இளைஞர். அவர் விடியற்காலையில் அவர்களை விட்டுப் பிரிந்து சென்று, மக்காவில் குறைஷிகளுடன் இரவைக் கழித்தவர் போலக் காலையில் காணப்படுவார். (அங்கே) நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் அவர்களுக்கும் எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகள் எதைக்கேட்டாலும் அதை மனதில் பதிய வைத்துக்கொண்டு, இருட்டியதும் அவர்கள் இருக்குமிடம் சென்று அதை அவர்களுக்குத் தெரிவிப்பார்.

அபூபக்கர் (ரழி) அவர்களின் அடிமையாக இருந்து விடுதலையான ஆமிர் பின் ஃபுஹைரா, பால் தரும் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, இரவு நேரம் சிறிது கழிந்த பிறகு அவர்களிடம் ஓட்டிச் செல்வார். அவர்கள் இருவரும் ஆமிர் பின் ஃபுஹைரா கறந்து தரும் புத்தம் புதிய பாலை அருந்திவிட்டு இரவைக் கழிப்பார்கள். பின்னர் விடியற்காலையில் இருள் பிரியும் முன்னரே ஆமிர் பின் ஃபுஹைரா ஆடுகளை ஓட்டிச் சென்றுவிடுவார். அந்த மூன்று இரவுகளிலும் அவர் இவ்வாறே செய்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரழி) அவர்களும் 'பனூ தில்' கோத்திரத்தைச் சேர்ந்த (அதன் கிளைக் குடும்பமான) 'பனூ அப்த் பின் அதீ'யைச் சார்ந்த ஒருவரைத் தேர்ந்த வழிகாட்டியாக நியமித்திருந்தார்கள். அவர் அந்தப் பாதைகளை நன்கு அறிந்த திறமைசாலியாக (கிர்ரீத்) இருந்தார். அவர் 'ஆஸ் பின் வாயில் அஸ்-ஸஹ்மீ' குடும்பத்தினருடன் ஒப்பந்தத் தோழராகவும், குறைஷி இறைமறுப்பாளர்களின் மார்க்கத்திலும் இருந்தார். எனினும் நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரழி) அவர்களும் அவரை நம்பி, அவரிடம் தங்கள் இரண்டு ஒட்டகங்களையும் ஒப்படைத்து, மூன்று இரவுகளுக்குப் பிறகு 'தவ்ர்' குகையடிவாரத்திற்கு அந்த ஒட்டகங்களுடன் வருமாறு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். (மூன்றாம் நாள் விடியலில்) அவர் வந்து சேர்ந்தார். ஆமிர் பின் ஃபுஹைராவும் வழிகாட்டியும் அவர்களுடன் சென்றார்கள். அந்த வழிகாட்டி அவர்களைக் கடற்கரை வழியாக (மதீனாவிற்கு) அழைத்துச் சென்றார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4418ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ ـ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ ـ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنْ قِصَّةِ، تَبُوكَ قَالَ كَعْبٌ لَمْ أَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا إِلاَّ فِي غَزْوَةِ تَبُوكَ، غَيْرَ أَنِّي كُنْتُ تَخَلَّفْتُ فِي غَزْوَةِ بَدْرٍ، وَلَمْ يُعَاتِبْ أَحَدًا تَخَلَّفَ، عَنْهَا إِنَّمَا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ عِيرَ قُرَيْشٍ، حَتَّى جَمَعَ اللَّهُ بَيْنَهُمْ وَبَيْنَ عَدُوِّهِمْ عَلَى غَيْرِ مِيعَادٍ وَلَقَدْ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْعَقَبَةِ حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلاَمِ، وَمَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشْهَدَ بَدْرٍ، وَإِنْ كَانَتْ بَدْرٌ أَذْكَرَ فِي النَّاسِ مِنْهَا، كَانَ مِنْ خَبَرِي أَنِّي لَمْ أَكُنْ قَطُّ أَقْوَى وَلاَ أَيْسَرَ حِينَ تَخَلَّفْتُ عَنْهُ فِي تِلْكَ الْغَزْوَةِ، وَاللَّهِ مَا اجْتَمَعَتْ عِنْدِي قَبْلَهُ رَاحِلَتَانِ قَطُّ حَتَّى جَمَعْتُهُمَا فِي تِلْكَ الْغَزْوَةِ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ غَزْوَةً إِلاَّ وَرَّى بِغَيْرِهَا، حَتَّى كَانَتْ تِلْكَ الْغَزْوَةُ، غَزَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَرٍّ شَدِيدٍ، وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيدًا وَمَفَازًا وَعَدُوًّا كَثِيرًا، فَجَلَّى لِلْمُسْلِمِينَ أَمْرَهُمْ لِيَتَأَهَّبُوا أُهْبَةَ غَزْوِهِمْ، فَأَخْبَرَهُمْ بِوَجْهِهِ الَّذِي يُرِيدُ، وَالْمُسْلِمُونَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَثِيرٌ، وَلاَ يَجْمَعُهُمْ كِتَابٌ حَافِظٌ ـ يُرِيدُ الدِّيوَانَ ـ قَالَ كَعْبٌ فَمَا رَجُلٌ يُرِيدُ أَنْ يَتَغَيَّبَ إِلاَّ ظَنَّ أَنْ سَيَخْفَى لَهُ مَا لَمْ يَنْزِلْ فِيهِ وَحْىُ اللَّهِ، وَغَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تِلْكَ الْغَزْوَةَ حِينَ طَابَتِ الثِّمَارُ وَالظِّلاَلُ، وَتَجَهَّزَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ مَعَهُ، فَطَفِقْتُ أَغْدُو لِكَىْ أَتَجَهَّزَ مَعَهُمْ فَأَرْجِعُ وَلَمْ أَقْضِ شَيْئًا، فَأَقُولُ فِي نَفْسِي أَنَا قَادِرٌ عَلَيْهِ‏.‏ فَلَمْ يَزَلْ يَتَمَادَى بِي حَتَّى اشْتَدَّ بِالنَّاسِ الْجِدُّ، فَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ مَعَهُ وَلَمْ أَقْضِ مِنْ جَهَازِي شَيْئًا، فَقُلْتُ أَتَجَهَّزُ بَعْدَهُ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ ثُمَّ أَلْحَقُهُمْ، فَغَدَوْتُ بَعْدَ أَنْ فَصَلُوا لأَتَجَهَّزَ، فَرَجَعْتُ وَلَمْ أَقْضِ شَيْئًا، ثُمَّ غَدَوْتُ ثُمَّ رَجَعْتُ وَلَمْ أَقْضِ شَيْئًا، فَلَمْ يَزَلْ بِي حَتَّى أَسْرَعُوا وَتَفَارَطَ الْغَزْوُ، وَهَمَمْتُ أَنْ أَرْتَحِلَ فَأُدْرِكَهُمْ، وَلَيْتَنِي فَعَلْتُ، فَلَمْ يُقَدَّرْ لِي ذَلِكَ، فَكُنْتُ إِذَا خَرَجْتُ فِي النَّاسِ بَعْدَ خُرُوجِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَطُفْتُ فِيهِمْ، أَحْزَنَنِي أَنِّي لاَ أَرَى إِلاَّ رَجُلاً مَغْمُوصًا عَلَيْهِ النِّفَاقُ أَوْ رَجُلاً مِمَّنْ عَذَرَ اللَّهُ مِنَ الضُّعَفَاءِ، وَلَمْ يَذْكُرْنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَلَغَ تَبُوكَ، فَقَالَ وَهْوَ جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوكَ ‏"‏ مَا فَعَلَ كَعْبٌ ‏"‏‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ يَا رَسُولَ اللَّهِ، حَبَسَهُ بُرْدَاهُ وَنَظَرُهُ فِي عِطْفِهِ‏.‏ فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ بِئْسَ مَا قُلْتَ، وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، مَا عَلِمْنَا عَلَيْهِ إِلاَّ خَيْرًا‏.‏ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ قَالَ كَعْبُ بْنُ مَالِكٍ فَلَمَّا بَلَغَنِي أَنَّهُ تَوَجَّهَ قَافِلاً حَضَرَنِي هَمِّي، وَطَفِقْتُ أَتَذَكَّرُ الْكَذِبَ وَأَقُولُ بِمَاذَا أَخْرُجُ مِنْ سَخَطِهِ غَدًا وَاسْتَعَنْتُ عَلَى ذَلِكَ بِكُلِّ ذِي رَأْىٍ مِنْ أَهْلِي، فَلَمَّا قِيلَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَظَلَّ قَادِمًا زَاحَ عَنِّي الْبَاطِلُ، وَعَرَفْتُ أَنِّي لَنْ أَخْرُجَ مِنْهُ أَبَدًا بِشَىْءٍ فِيهِ كَذِبٌ، فَأَجْمَعْتُ صِدْقَهُ، وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَادِمًا، وَكَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَيَرْكَعُ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ لِلنَّاسِ، فَلَمَّا فَعَلَ ذَلِكَ جَاءَهُ الْمُخَلَّفُونَ، فَطَفِقُوا يَعْتَذِرُونَ إِلَيْهِ، وَيَحْلِفُونَ لَهُ، وَكَانُوا بِضْعَةً وَثَمَانِينَ رَجُلاً فَقَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلاَنِيَتَهُمْ، وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ، وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ، فَجِئْتُهُ فَلَمَّا سَلَّمْتُ عَلَيْهِ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ، ثُمَّ قَالَ ‏"‏ تَعَالَ ‏"‏‏.‏ فَجِئْتُ أَمْشِي حَتَّى جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ لِي ‏"‏ مَا خَلَّفَكَ أَلَمْ تَكُنْ قَدِ ابْتَعْتَ ظَهْرَكَ ‏"‏‏.‏ فَقُلْتُ بَلَى، إِنِّي وَاللَّهِ لَوْ جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أَهْلِ الدُّنْيَا، لَرَأَيْتُ أَنْ سَأَخْرُجُ مِنْ سَخَطِهِ بِعُذْرٍ، وَلَقَدْ أُعْطِيتُ جَدَلاً، وَلَكِنِّي وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذِبٍ تَرْضَى بِهِ عَنِّي لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يُسْخِطَكَ عَلَىَّ، وَلَئِنْ حَدَّثْتُكَ حَدِيثَ صِدْقٍ تَجِدُ عَلَىَّ فِيهِ إِنِّي لأَرْجُو فِيهِ عَفْوَ اللَّهِ، لاَ وَاللَّهِ مَا كَانَ لِي مِنْ عُذْرٍ، وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلاَ أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ عَنْكَ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ، فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ ‏"‏‏.‏ فَقُمْتُ وَثَارَ رِجَالٌ مِنْ بَنِي سَلِمَةَ فَاتَّبَعُونِي، فَقَالُوا لِي وَاللَّهِ مَا عَلِمْنَاكَ كُنْتَ أَذْنَبْتَ ذَنْبًا قَبْلَ هَذَا، وَلَقَدْ عَجَزْتَ أَنْ لاَ تَكُونَ اعْتَذَرْتَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا اعْتَذَرَ إِلَيْهِ الْمُتَخَلِّفُونَ، قَدْ كَانَ كَافِيَكَ ذَنْبَكَ اسْتِغْفَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَكَ، فَوَاللَّهِ مَا زَالُوا يُؤَنِّبُونِي حَتَّى أَرَدْتُ أَنْ أَرْجِعَ فَأُكَذِّبُ نَفْسِي، ثُمَّ قُلْتُ لَهُمْ هَلْ لَقِيَ هَذَا مَعِي أَحَدٌ قَالُوا نَعَمْ، رَجُلاَنِ قَالاَ مِثْلَ مَا قُلْتَ، فَقِيلَ لَهُمَا مِثْلُ مَا قِيلَ لَكَ‏.‏ فَقُلْتُ مَنْ هُمَا قَالُوا مُرَارَةُ بْنُ الرَّبِيعِ الْعَمْرِيُّ وَهِلاَلُ بْنُ أُمَيَّةَ الْوَاقِفِيُّ‏.‏ فَذَكَرُوا لِي رَجُلَيْنِ صَالِحَيْنِ قَدْ شَهِدَا بَدْرًا فِيهِمَا إِسْوَةٌ، فَمَضَيْتُ حِينَ ذَكَرُوهُمَا لِي، وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمِينَ عَنْ كَلاَمِنَا أَيُّهَا الثَّلاَثَةُ مِنْ بَيْنِ مَنْ تَخَلَّفَ عَنْهُ، فَاجْتَنَبَنَا النَّاسُ وَتَغَيَّرُوا لَنَا حَتَّى تَنَكَّرَتْ فِي نَفْسِي الأَرْضُ، فَمَا هِيَ الَّتِي أَعْرِفُ، فَلَبِثْنَا عَلَى ذَلِكَ خَمْسِينَ لَيْلَةً، فَأَمَّا صَاحِبَاىَ فَاسْتَكَانَا وَقَعَدَا فِي بُيُوتِهِمَا يَبْكِيَانِ، وَأَمَّا أَنَا فَكُنْتُ أَشَبَّ الْقَوْمِ وَأَجْلَدَهُمْ، فَكُنْتُ أَخْرُجُ فَأَشْهَدُ الصَّلاَةَ مَعَ الْمُسْلِمِينَ وَأَطُوفُ فِي الأَسْوَاقِ، وَلاَ يُكَلِّمُنِي أَحَدٌ، وَآتِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأُسَلِّمُ عَلَيْهِ وَهْوَ فِي مَجْلِسِهِ بَعْدَ الصَّلاَةِ، فَأَقُولُ فِي نَفْسِي هَلْ حَرَّكَ شَفَتَيْهِ بِرَدِّ السَّلاَمِ عَلَىَّ أَمْ لاَ ثُمَّ أُصَلِّي قَرِيبًا مِنْهُ فَأُسَارِقُهُ النَّظَرَ، فَإِذَا أَقْبَلْتُ عَلَى صَلاَتِي أَقْبَلَ إِلَىَّ، وَإِذَا الْتَفَتُّ نَحْوَهُ أَعْرَضَ عَنِّي، حَتَّى إِذَا طَالَ عَلَىَّ ذَلِكَ مِنْ جَفْوَةِ النَّاسِ مَشَيْتُ حَتَّى تَسَوَّرْتُ جِدَارَ حَائِطِ أَبِي قَتَادَةَ وَهْوَ ابْنُ عَمِّي وَأَحَبُّ النَّاسِ إِلَىَّ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَوَاللَّهِ مَا رَدَّ عَلَىَّ السَّلاَمَ، فَقُلْتُ يَا أَبَا قَتَادَةَ، أَنْشُدُكَ بِاللَّهِ هَلْ تَعْلَمُنِي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ فَسَكَتَ، فَعُدْتُ لَهُ فَنَشَدْتُهُ فَسَكَتَ، فَعُدْتُ لَهُ فَنَشَدْتُهُ‏.‏ فَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ فَفَاضَتْ عَيْنَاىَ وَتَوَلَّيْتُ حَتَّى تَسَوَّرْتُ الْجِدَارَ، قَالَ فَبَيْنَا أَنَا أَمْشِي بِسُوقِ الْمَدِينَةِ إِذَا نَبَطِيٌّ مِنْ أَنْبَاطِ أَهْلِ الشَّأْمِ مِمَّنْ قَدِمَ بِالطَّعَامِ يَبِيعُهُ بِالْمَدِينَةِ يَقُولُ مَنْ يَدُلُّ عَلَى كَعْبِ بْنِ مَالِكٍ فَطَفِقَ النَّاسُ يُشِيرُونَ لَهُ، حَتَّى إِذَا جَاءَنِي دَفَعَ إِلَىَّ كِتَابًا مِنْ مَلِكِ غَسَّانَ، فَإِذَا فِيهِ أَمَّا بَعْدُ فَإِنَّهُ قَدْ بَلَغَنِي أَنَّ صَاحِبَكَ قَدْ جَفَاكَ، وَلَمْ يَجْعَلْكَ اللَّهُ بِدَارِ هَوَانٍ وَلاَ مَضْيَعَةٍ، فَالْحَقْ بِنَا نُوَاسِكَ‏.‏ فَقُلْتُ لَمَّا قَرَأْتُهَا وَهَذَا أَيْضًا مِنَ الْبَلاَءِ‏.‏ فَتَيَمَّمْتُ بِهَا التَّنُّورَ فَسَجَرْتُهُ بِهَا، حَتَّى إِذَا مَضَتْ أَرْبَعُونَ لَيْلَةً مِنَ الْخَمْسِينَ إِذَا رَسُولُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِينِي فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُكَ أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ فَقُلْتُ أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ لاَ بَلِ اعْتَزِلْهَا وَلاَ تَقْرَبْهَا‏.‏ وَأَرْسَلَ إِلَى صَاحِبَىَّ مِثْلَ ذَلِكَ، فَقُلْتُ لاِمْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ فَتَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِي هَذَا الأَمْرِ‏.‏ قَالَ كَعْبٌ فَجَاءَتِ امْرَأَةُ هِلاَلِ بْنِ أُمَيَّةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ شَيْخٌ ضَائِعٌ لَيْسَ لَهُ خَادِمٌ فَهَلْ تَكْرَهُ أَنْ أَخْدُمَهُ قَالَ ‏"‏ لاَ وَلَكِنْ لاَ يَقْرَبْكِ ‏"‏‏.‏ قَالَتْ إِنَّهُ وَاللَّهِ مَا بِهِ حَرَكَةٌ إِلَى شَىْءٍ، وَاللَّهِ مَا زَالَ يَبْكِي مُنْذُ كَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ إِلَى يَوْمِهِ هَذَا‏.‏ فَقَالَ لِي بَعْضُ أَهْلِي لَوِ اسْتَأْذَنْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي امْرَأَتِكَ كَمَا أَذِنَ لاِمْرَأَةِ هِلاَلِ بْنِ أُمَيَّةَ أَنْ تَخْدُمَهُ فَقُلْتُ وَاللَّهِ لاَ أَسْتَأْذِنُ فِيهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا يُدْرِينِي مَا يَقُولُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اسْتَأْذَنْتُهُ فِيهَا وَأَنَا رَجُلٌ شَابٌّ فَلَبِثْتُ بَعْدَ ذَلِكَ عَشْرَ لَيَالٍ حَتَّى كَمَلَتْ لَنَا خَمْسُونَ لَيْلَةً مِنْ حِينِ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كَلاَمِنَا، فَلَمَّا صَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ صُبْحَ خَمْسِينَ لَيْلَةً، وَأَنَا عَلَى ظَهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا، فَبَيْنَا أَنَا جَالِسٌ عَلَى الْحَالِ الَّتِي ذَكَرَ اللَّهُ، قَدْ ضَاقَتْ عَلَىَّ نَفْسِي، وَضَاقَتْ عَلَىَّ الأَرْضُ بِمَا رَحُبَتْ، سَمِعْتُ صَوْتَ صَارِخٍ أَوْفَى عَلَى جَبَلِ سَلْعٍ بِأَعْلَى صَوْتِهِ يَا كَعْبُ بْنَ مَالِكٍ، أَبْشِرْ‏.‏ قَالَ فَخَرَرْتُ سَاجِدًا، وَعَرَفْتُ أَنْ قَدْ جَاءَ فَرَجٌ، وَآذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا حِينَ صَلَّى صَلاَةَ الْفَجْرِ، فَذَهَبَ النَّاسُ يُبَشِّرُونَنَا، وَذَهَبَ قِبَلَ صَاحِبَىَّ مُبَشِّرُونَ، وَرَكَضَ إِلَىَّ رَجُلٌ فَرَسًا، وَسَعَى سَاعٍ مِنْ أَسْلَمَ فَأَوْفَى عَلَى الْجَبَلِ وَكَانَ الصَّوْتُ أَسْرَعَ مِنَ الْفَرَسِ، فَلَمَّا جَاءَنِي الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَىَّ، فَكَسَوْتُهُ إِيَّاهُمَا بِبُشْرَاهُ، وَاللَّهِ مَا أَمْلِكُ غَيْرَهُمَا يَوْمَئِذٍ، وَاسْتَعَرْتُ ثَوْبَيْنِ فَلَبِسْتُهُمَا، وَانْطَلَقْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَتَلَقَّانِي النَّاسُ فَوْجًا فَوْجًا يُهَنُّونِي بِالتَّوْبَةِ، يَقُولُونَ لِتَهْنِكَ تَوْبَةُ اللَّهِ عَلَيْكَ‏.‏ قَالَ كَعْبٌ حَتَّى دَخَلْتُ الْمَسْجِدَ، فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ حَوْلَهُ النَّاسُ فَقَامَ إِلَىَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّانِي، وَاللَّهِ مَا قَامَ إِلَىَّ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ غَيْرُهُ، وَلاَ أَنْسَاهَا لِطَلْحَةَ، قَالَ كَعْبٌ فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُورِ ‏"‏ أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ ‏"‏‏.‏ قَالَ قُلْتُ أَمِنْ عِنْدِكَ يَا رَسُولَ اللَّهِ أَمْ مِنْ عِنْدِ اللَّهِ قَالَ ‏"‏ لاَ، بَلْ مِنْ عِنْدِ اللَّهِ ‏"‏‏.‏ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سُرَّ اسْتَنَارَ وَجْهُهُ حَتَّى كَأَنَّهُ قِطْعَةُ قَمَرٍ، وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ مِنْهُ، فَلَمَّا جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِ اللَّهِ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ ‏"‏‏.‏ قُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ إِنَّمَا نَجَّانِي بِالصِّدْقِ، وَإِنَّ مِنْ تَوْبَتِي أَنْ لاَ أُحَدِّثَ إِلاَّ صِدْقًا مَا بَقِيتُ، فَوَاللَّهِ مَا أَعْلَمُ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ أَبْلاَهُ اللَّهُ فِي صِدْقِ الْحَدِيثِ مُنْذُ ذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ مِمَّا أَبْلاَنِي، مَا تَعَمَّدْتُ مُنْذُ ذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى يَوْمِي هَذَا كَذِبًا، وَإِنِّي لأَرْجُو أَنْ يَحْفَظَنِي اللَّهُ فِيمَا بَقِيتُ وَأَنْزَلَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم ‏{‏لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏وَكُونُوا مَعَ الصَّادِقِينَ‏}‏ فَوَاللَّهِ مَا أَنْعَمَ اللَّهُ عَلَىَّ مِنْ نِعْمَةٍ قَطُّ بَعْدَ أَنْ هَدَانِي لِلإِسْلاَمِ أَعْظَمَ فِي نَفْسِي مِنْ صِدْقِي لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ أَكُونَ كَذَبْتُهُ، فَأَهْلِكَ كَمَا هَلَكَ الَّذِينَ كَذَبُوا، فَإِنَّ اللَّهَ قَالَ لِلَّذِينَ كَذَبُوا حِينَ أَنْزَلَ الْوَحْىَ شَرَّ مَا قَالَ لأَحَدٍ، فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى ‏{‏سَيَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ إِذَا انْقَلَبْتُمْ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏فَإِنَّ اللَّهَ لاَ يَرْضَى عَنِ الْقَوْمِ الْفَاسِقِينَ‏}‏‏.‏ قَالَ كَعْبٌ وَكُنَّا تَخَلَّفْنَا أَيُّهَا الثَّلاَثَةُ عَنْ أَمْرِ أُولَئِكَ الَّذِينَ قَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ حَلَفُوا لَهُ، فَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَأَرْجَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَمْرَنَا حَتَّى قَضَى اللَّهُ فِيهِ، فَبِذَلِكَ قَالَ اللَّهُ ‏{‏وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُوا‏}‏ وَلَيْسَ الَّذِي ذَكَرَ اللَّهُ مِمَّا خُلِّفْنَا عَنِ الْغَزْوِ إِنَّمَا هُوَ تَخْلِيفُهُ إِيَّانَا وَإِرْجَاؤُهُ أَمْرَنَا عَمَّنْ حَلَفَ لَهُ وَاعْتَذَرَ إِلَيْهِ، فَقَبِلَ مِنْهُ‏.‏
அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

கஅப் பின் மாலிக் (ரழி) அவர்களின் புதல்வர்களில், அவர்களுக்குப் பார்வைத்திறன் மங்கியபோது அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் அப்துல்லாஹ் பின் கஅப் ஆவார். அவர் அறிவிப்பதாவது:

தபூக் போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கி விட்டதைப் பற்றி கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் விவரித்ததை நான் செவியுற்றேன். கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் பின்தங்கியதில்லை; தபூக் போரைத் தவிர. இருப்பினும் நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. (ஆனால்) பத்ருப் போரில் கலந்து கொள்ளாத எவரையும் நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. ஏனெனில், (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை நாடியே (மதீனாவிலிருந்து) புறப்பட்டார்கள். ஆனால், எவ்வித முன்னேற்பாடுமின்றியே அவர்களையும் அவர்களுடைய எதிரிகளையும் அல்லாஹ் (பத்ரு களத்தில்) ஒன்று சேர்த்துவிட்டான்.

நாங்கள் இஸ்லாத்தின் மீது உறுதியாக இருப்போம் என்று வாக்குறுதியளித்த ‘அகபா’ இரவில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். பத்ருப் போர் மக்களிடையே இதைவிடப் பிரபலமாக இருந்தாலும், அதற்குப் பகரமாக பத்ருப் போரில் கலந்து கொண்டிருப்பதை நான் விரும்பமாட்டேன்.

(தபூக் போரில்) என்னுடைய செய்தி யாதெனில், அப்போரில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டும் பின்தங்கியிருந்தபோது இருந்ததை விட உடல் வலிமை மிக்கவனாகவும், வசதி படைத்தவனாகவும் வேறெப்போதும் இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்கு முன் என்னிடம் ஒருபோதும் இரண்டு வாகனங்கள் (ஒட்டகங்கள்) சேர்ந்திருந்ததில்லை. அப்போருக்காகத் தயாரானபோதுதான் என்னிடம் இரண்டு வாகனங்கள் சேர்ந்திருந்தன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்குச் செல்ல நாடினால், வேறொன்றை நாடுவதாகக் கூறி (தம் இலக்கை) மறைக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் போரோ (தபூக் போர்), கடுமையான வெப்பத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட போராகும். மிக நீண்ட பயணத்தையும், பெரும் பாலைவனத்தையும், பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, முஸ்லிம்கள் தங்களின் போருக்கானத் தயாரிப்புகளைச் செய்துகொள்ளும் பொருட்டு, அவர்களுக்குத் தம் பயணத்தின் நோக்கத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். அவர்கள் செல்லவிருந்த திசையையும் அவர்களுக்கு அறிவித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய எந்தப் பதிவேடும் (ரிஜிஸ்டர்) இருக்கவில்லை.

(போருக்கு வராமல்) மறைந்து கொள்ள விரும்பும் மனிதர், அல்லாஹ்விடமிருந்து வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டாலே தவிர, தாம் மறைந்து கொள்வது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்று கருதிக் கொண்டிருப்பார். பழங்கள் கனிந்து, நிழல்கள் இதமாக இருக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்போர் பயணத்தை மேற்கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து (பயண) ஏற்பாடுகளைச் செய்வதற்காகச் செல்வேன். ஆனால், எவ்வித ஏற்பாடும் செய்யாமல் திரும்பி விடுவேன். ‘என்னால் நினைத்தவுடன் தயாராகிவிட முடியும்’ என்று என் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன். இவ்வாறே நான் (காலம் தாழ்த்திக் கொண்டே) இருந்தேன். மக்களும் முழு முயற்சியுடன் பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் ஒரு காலையில் புறப்பட்டு விட்டார்கள். நானோ எனது பயணத்திற்காக எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. ‘இன்றோ நாளையோ நான் தயாராகிவிட்டு அவர்களைச் சென்றடைந்து விடுவேன்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

அவர்கள் சென்ற பிறகு பயண ஏற்பாடுகளைச் செய்வதற்காக நான் புறப்பட்டேன். ஆனால், எதுவும் செய்யாமலேயே திரும்பினேன். பிறகு (மறுநாளும்) சென்றேன்; எதுவும் செய்யாமலேயே திரும்பினேன். இப்படியே எனக்குத் தாமதமேற்பட்டுக் கொண்டே இருந்தது. (படை சென்ற) வேகம் அதிகரித்து போரும் கை நழுவிவிட்டது. நான் புறப்பட்டுச் சென்று அவர்களை அடைந்துவிடலாமா என்று நினைத்தேன் – அவ்வாறு செய்திருக்கலாமே! – ஆனால், அது எனக்கு விதியில் எழுதப்படவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்களிடையே நடமாடியபோது, நிஃபாக்கின் (நயவஞ்சகத்தின்) முத்திரை குத்தப்பட்டவர் அல்லது பலவீனமானவர்கள் என்று அல்லாஹ் சலுகையளித்தவர்களைத் தவிர வேறு யாரையும் (ஊரில்) பார்க்க முடியாதிருந்தது எனக்குக் கவலையளித்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கை அடையும் வரை என்னைப் பற்றி நினைவுகூரவில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்திருந்தபோது, ‘கஅப் என்ன செய்தார்?’ என்று கேட்டார்கள். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! அவருடைய (அழகிய) இரண்டு ஆடைகளும், அவர் தமது தோற்றத்தை (கர்வம் கொண்டு) பார்த்துக் கொண்டதும் அவரைத் தடுத்துவிட்டன’ என்று கூறினார். உடனே முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள், ‘நீர் சொன்னது தவறு! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறியவில்லை’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

(கஅப் (ரழி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது எனக்குக் கவலை வந்துவிட்டது. ‘நாளை அவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்பிப்பேன்?’ என்று பொய்யான காரணங்களை ஜோடிக்கலானேன். இது குறித்து என் குடும்பத்தாரில் கருத்த் ஆழமிக்க ஒவ்வொருவரிடமும் நான் உதவி தேடிக் கொண்டிருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கிவிட்டார்கள் என்று கூறப்பட்டபோது, (நான் கற்பனை செய்து வைத்திருந்த) பொய்யான காரணங்கள் அனைத்தும் என்னை விட்டு அகன்றுவிட்டன. ‘பொய்யைக் கொண்டு ஒருபோதும் அவர்களின் கோபத்திலிருந்து நான் தப்ப முடியாது’ என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே, உண்மையையே பேசுவதென்று நான் முடிவு செய்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்கள் ஒரு பயணத்திலிருந்து ஊர் திரும்பினால், முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவதையும், பிறகு மக்களைச் சந்திப்பதற்காக அமருவதையும் வழமையாகக் கொண்டிருந்தார்கள். அதன்படியே அவர்கள் செய்தபோது, போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்கள் அவர்களிடம் வந்து, (தாம் வராததற்கான) காரணங்களைக் கூறி சத்தியம் செய்யலானார்கள். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட ஆண்களாக இருந்தனர். அவர்கள் வெளிப்படையாகக் கூறிய காரணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவர்களிடமிருந்து விசுவாசப் பிரமாணமும் பெற்றுக் கொண்டு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் உள்ளத்தில் உள்ளவற்றை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

பிறகு நான் அவர்களிடம் சென்றேன். நான் அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னபோது, கோபத்திலிருப்பவர் புன்னகைப்பதைப் போன்று புன்னகைத்தார்கள். பிறகு, ‘இங்கே வா!’ என்றார்கள். நான் நடந்து சென்று அவர்களுக்கு முன்னால் அமர்ந்தேன். ‘நீர் ஏன் பின்தங்கிவிட்டீர்? உமது வாகனத்தை நீர் வாங்கியிருக்கவில்லையா?’ என்று என்னிடம் கேட்டார்கள்.

அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களைத் தவிர உலகியல் சார்ந்த வேறொருவரிடம் நான் அமர்ந்திருந்தால், ஏதேனும் காரணத்தைச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்திருப்பேன். (வாதிட்டுப் பேசும்) வாக்கு வன்மை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்று தங்களிடம் நான் பொய்யான காரணத்தைச் சொல்லி, (அதன் மூலம்) தங்களை நான் திருப்திப்படுத்தினாலும்கூட, (உண்மையை அறிவித்து) என் மீது தாங்கள் கோபப்படும்படி அல்லாஹ் செய்துவிடுவான் என்பதை நான் அறிவேன். தங்களிடம் நான் உண்மையைச் சொன்னால், தாங்கள் என் மீது கோபப்படுவீர்கள்; இருப்பினும் (நான் உண்மையைச் சொல்வதன் மூலம்) அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! (போருக்கு வராமல் இருந்ததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. நான் தங்களை விட்டும் பின்தங்கியிருந்த அந்த நேரத்தில் இருந்ததை விட, உடல் வலிமை மிக்கவனாகவும் வசதி படைத்தவனாகவும் நான் ஒருபோதும் இருந்ததில்லை’ என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை பேசினார். நீர் எழுந்து செல்லும்! உமது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுத்திரும்’ என்று கூறினார்கள்.

நான் எழுந்தேன். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன் நீர் எந்தக் குற்றமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை. போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிய மற்றவர்கள் சொன்னது போன்று ஏதேனும் ஒரு காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்கு உமக்கு என்ன தடையிருந்தது? உமது பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவதே உமக்குப் போதுமானதாக இருந்திருக்குமே!’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் திரும்பிச் சென்று, (முதலில் நான் சொன்னதை மாற்றி) ‘நான் சொன்னது பொய்’ என்று (நபியவர்களிடம்) சொல்லலாமா என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் என்னைக் கண்டித்துக் கொண்டேயிருந்தார்கள்.

பிறகு நான் அவர்களிடம், ‘என்னுடன் சேர்த்து வேறு யாருக்கேனும் இவ்வாறு நேர்ந்துள்ளதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்! இரண்டு நபர்களுக்கு நீர் சொன்னது போன்றே நேர்ந்தது. உமக்குச் சொல்லப்பட்டது போன்றே அவர்களுக்கும் சொல்லப்பட்டது’ என்றார்கள். ‘அவர்கள் யார்?’ என்று நான் கேட்டேன். ‘முராரா பின் அர்பீஉ அல்-அம்ரீ மற்றும் ஹிலால் பின் உமைய்யா அல்-வாக்கிஃபீ’ என்று அவர்கள் பதிலளித்தார்கள். பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் அவர்கள் கூறினார்கள். அவர்கள் இருவரிடமும் (எனக்கு) முன்மாதிரி இருந்தது. அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டதும் நான் (எனது முடிவில்) உறுதியாகிவிட்டேன்.

போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்களில், எங்களைத் தவிர மற்றவர்களிடம் பேசுவதை விட்டும் முஸ்லிம்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள். எனவே, மக்கள் எங்களைவிட்டு விலகிக் கொண்டார்கள். அல்லது ‘எங்களிடம் அவர்கள் மாறிவிட்டார்கள்’ என்று கூறினார்கள். எனக்குப் பழக்கமான பூமி அந்நியமாகிவிட்டது போல் எனக்குத் தோன்றியது. அந்த நிலையில் நாங்கள் ஐம்பது இரவுகள் கழித்தோம்.

என் இரு தோழர்களும் தளர்ந்து போய், அழுது கொண்டே தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிவிட்டனர். நானோ, மக்களில் மிகவும் வலுவான இளைஞனாக இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வேன்; கடைவீதிகளில் சுற்றித் திரிவேன்; ஆனால் என்னுடன் யாரும் பேசமாட்டார்கள். தொழுகைக்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது அவர்களிடம் சென்று ‘சலாம்’ சொல்வேன். ‘என் சலாமுக்குப் பதில் சொல்வதற்காக அவர்கள் தங்கள் உதடுகளை அசைத்தார்களா இல்லையா?’ என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன். பிறகு அவர்களுக்கு அருகிலேயே நின்று தொழுவேன். அவர்களை ஓரக்கண்ணால் திருட்டுத்தனமாகப் பார்ப்பேன். நான் தொழுகையில் ஈடுபடும்போது அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்; நான் அவர்களைப் பார்க்கும்போது என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

மக்களின் புறக்கணிப்பு என் மீது நீடித்தபோது, நான் (என் தோட்டத்தின்) சுவர் ஏறிச் சென்று அபூ கதாதா (ரழி) அவர்களிடம் சென்றேன். அவர் என் தந்தையின் சகோதரர் மகனும், மக்களில் எனக்கு மிக விருப்பமானவரும் ஆவார். அவருக்கு நான் ‘சலாம்’ சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எனக்கு ‘சலாம்’ பதில் சொல்லவில்லை.

‘அபூ கதாதாவே! அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்கிறேன்; நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாயா?’ என்று கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார். மீண்டும் அவரிடம் அவ்வாறே கேட்டேன்; அவர் அமைதியாக இருந்தார். மீண்டும் அவரிடம் அவ்வாறே கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்’ என்று கூறினார். உடனே என் கண்கள் குளமாகின. வந்த வழியே சுவர் ஏறித் திரும்பிவிட்டேன்.

நான் மதீனாவின் கடைவீதியில் நடந்து கொண்டிருந்தபோது, உணவுப் பொருட்களை விற்பதற்காக மதீனாவிற்கு வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயி ஒருவன், ‘கஅப் பின் மாலிக்கை எனக்கு யார் அடையாளம் காட்டுவது?’ என்று கேட்டான். மக்கள் என்னை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்கள். அவன் என்னிடம் வந்து, ‘கஸ்ஸான்’ மன்னனிடமிருந்து ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தான்.

அதில், ‘அம்மா பஅத்! உமது தோழர் (முஹம்மத்) உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்ற செய்தி எமக்கு எட்டியது. இழிவு தரும் இடத்திலும், உமது உரிமைகள் பாழாகும் இடத்திலும் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம். நீர் எம்மிடம் வந்து சேரும்; உமக்கு நாம் ஆறுதல் அளிப்போம்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதை நான் படித்தபோது, ‘இதுவும் ஒரு சோதனையே’ என்று கூறிவிட்டு, அதை எடுத்துச் சென்று அடுப்பில் போட்டு எரித்துவிட்டேன்.

ஐம்பது இரவுகளில் நாற்பது இரவுகள் கழிந்த நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதுவர் என்னிடம் வந்து, ‘நீர் உமது மனைவியை விட்டு விலகி இருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள்’ என்று கூறினார். ‘நான் அவளை விவாகரத்துச் செய்ய வேண்டுமா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். ‘இல்லை! அவளை விட்டு விலகி இரும்; அவளை நெருங்கவேண்டாம்’ என்று அவர் கூறினார். என் இரு தோழர்களுக்கும் இது போன்றே ஆளனுப்பிச் செய்தி சொன்னார்கள். எனவே நான் என் மனைவியிடம், ‘அல்லாஹ் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்கும் வரை நீ உன் தாய் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் தங்கியிரு’ என்று சொன்னேன்.

ஹிலால் பின் உமைய்யாவின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஹிலால் பின் உமைய்யா முதியவர்; அவருக்குப் பணிவிடை செய்ய ஆளில்லை. அவருக்கு நான் பணிவிடை செய்வதை வெறுக்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை! (பணிவிடை செய்யலாம்). ஆனால், அவர் உம்மை நெருங்கக் கூடாது’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு எதிலும் நாட்டமில்லை. அவருக்கு இந்நிலை ஏற்பட்டது முதல் இன்றுவரை அவர் அழுது கொண்டே இருக்கிறார்’ என்று கூறினார்.

என் குடும்பத்தாரில் சிலர் என்னிடம், ‘ஹிலால் பின் உமைய்யாவின் மனைவி அவருக்குப் பணிவிடை செய்ய நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியது போன்று, நீங்களும் உங்கள் மனைவி உங்களுக்குப் பணிவிடை செய்ய அனுமதி கேட்கக் கூடாதா?’ என்று கேட்டனர். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன். நான் ஓர் இளைஞன். நான் அனுமதி கேட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்வார்களோ என்று எனக்குத் தெரியாது’ என்று கூறிவிட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் எங்களோடு பேசுவதைத் தடை செய்ததிலிருந்து ஐம்பது இரவுகள் நிறைவடையும் வரை, (மேலும்) பத்து இரவுகள் நான் இவ்வாறே கழித்தேன்.

ஐம்பதாவது இரவின் காலையில், நான் எனது வீடுகளில் ஒன்றின் மாடியில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழுதேன். அல்லாஹ் (குர்ஆனில் 9:118) எங்களை வருணித்திருந்தவாறு, பூமி விசாலமாக இருந்தும் எனக்கு அது சுருங்கிப்போய், என் உயிர் எனக்குப் பெரும் சுமையாகிப்போன நிலையில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது ‘ஸல்உ’ மலை மீது ஏறிய ஒருவர், தமது முழுச் சப்தத்தையும் கூட்டி, ‘கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெறவும்’ என்று கூவி அழைப்பதை நான் செவியுற்றேன். உடனே (நன்றியறிவிப்பாக) சஜ்தாவில் விழுந்தேன். ‘நிம்மதி வந்துவிட்டது’ என்பதை நான் அறிந்து கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுதபோது, அல்லாஹ் எங்கள் தவ்பாவை (பாவமன்னிப்பை) ஏற்றுக்கொண்டதை அறிவித்தார்கள். உடனே மக்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்ல விரைந்தார்கள். என் இரு தோழர்களை நோக்கி நற்செய்தியாளர்கள் சென்றனர். என்னிடம் ஒரு மனிதர் குதிரையை விரட்டிக் கொண்டு வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடி வந்து மலை மீது ஏறிக் குரல் கொடுத்தார். குதிரையை விட சப்தம் விரைவாக (என்னை) அடைந்தது. எவருடைய சப்தத்தை நான் கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி கூறுவதற்காக வந்தபோது, என்னுடைய இரண்டு ஆடைகளையும் கழற்றி அவருக்குப் பரிசளித்தேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்நாளில் அவ்விரண்டைத் தவிர வேறு ஆடை என்னிடமில்லை. பிறகு நான் இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன்.

மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தனர்; எனது தவ்பா அங்கீகரிக்கப்பட்டதற்காக எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ‘அல்லாஹ் உமது தவ்பாவை ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு நல்வாழ்த்துக்கள்’ என்று கூறினர். நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீற்றிருந்தார்கள்; அவர்களைச் சுற்றி மக்கள் இருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்து, எனக்குக் கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹாஜிர்களில் அவரைத் தவிர வேறு யாரும் (எனக்காக) எழுந்து வரவில்லை. தல்ஹா (ரழி) அவர்கள் செய்ததை நான் மறக்க மாட்டேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்க, ‘உம்மை உமது தாய் ஈன்றெடுத்த நாள் முதல் உம்மைக் கடந்து சென்ற நாட்களிலேயே மிகச் சிறந்த நாளிது; நற்செய்தி பெற்றுக்கொள்வீராக!’ என்று கூறினார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே! இது தங்களிடமிருந்தா? அல்லது அல்லாஹ்விடமிருந்தா?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை! அல்லாஹ்விடமிருந்து தான்’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடையும்போது அவர்களுடைய முகம் சந்திரனின் துண்டைப் போன்று பிரகாசிக்கும். அதை நாங்கள் நன்கறிவோம்.

அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! என் தவ்பா அங்கீகரிக்கப்பட்டதற்கு நன்றியாக, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் (அர்ப்பணமாக) என் செல்வத்தையெல்லாம் தர்மமாக வழங்கி விடுகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உமது செல்வத்தில் சிலவற்றை உமக்காக வைத்துக் கொள்ளும்; அதுவே உமக்குச் சிறந்தது’ என்று கூறினார்கள். நான், ‘கைபரில் எனக்குக் கிடைத்த பங்கை மட்டும் வைத்துக் கொள்கிறேன்’ என்று கூறினேன்.

பிறகு, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் உண்மை பேசியதால்தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். நான் உயிரோடு இருக்கும் வரை உண்மையே பேசுவேன் என்பது என் தவ்பாவின் (பாவமன்னிப்பின்) ஒரு பகுதியாகும்’ என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைச் சொன்னது முதல் இன்று வரை, உண்மையைப் பேசியதற்காக அல்லாஹ் எனக்கு அருளியதைப் போன்று முஸ்லிம்களில் வேறு எவருக்கும் அருளியதாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னது முதல் இன்று வரை நான் பொய்யே பேசியதில்லை. மீதமுள்ள காலங்களிலும் அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கஅப் (ரழி) கூறினார்.

மேலும், அல்லாஹ் தனது தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்வரும் வசனங்களை அருளினான்:

لَقَد تَّابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ...
(லக்கத் தாபல்லாஹு அலன்-நபிய்யி வல்-முஹாஜிரீன வல்-அன்ஸாரி...)
“நிச்சயமாக அல்லாஹ் நபியையும், முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் மன்னித்தான்...” (அல்குர்ஆன் 9:117)

அல்லாஹ்வின் வாக்கு எதுவரை எனில்:
...وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
(...வ கூனூ மஅஸ்-ஸாதிகீன்)
“...மேலும், உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்” (அல்குர்ஆன் 9:119) என்பது வரை.

(கஅப் (ரழி) தொடர்ந்தார்:) “அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழிகாட்டிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் பொய் சொல்லாமல் இருந்ததை விடப் பெரிய அருட்கொடை எதையும் என் வாழ்வில் அல்லாஹ் எனக்கு வழங்கியதாக நான் கருதவில்லை. நான் பொய் சொல்லியிருந்தால், பொய் சொன்னவர்கள் அழிந்து போனது போன்று நானும் அழிந்திருப்பேன். ஏனெனில் வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டபோது, பொய் சொன்னவர்களைப் பற்றிக் கூறியது போன்று மிக மோசமாக அல்லாஹ் வேறு யாரைப் பற்றியும் கூறவில்லை.

அல்லாஹ் (அவர்களைப் பற்றிக்) கூறும்போது:
سَيَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ إِذَا انقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا عَنْهُمْ...
(ஸயஹ்லிஃபூன பில்லாஹி லகும் இதன்கலப்தும் இலைஹிம் லிதுஃரிளூ அன்ஹும்...)
“நீங்கள் அவர்களிடம் திரும்பியபோது, அவர்களை நீங்கள் புறக்கணித்துவிட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்மீது ஆணையிடுவார்கள்...” (அல்குர்ஆன் 9:95)

எதுவரை எனில்:
...فَإِنَّ اللَّهَ لَا يَرْضَىٰ عَنِ الْقَوْمِ الْفَاسِقِينَ
(...ஃபஇன்னல்லாஹ லா யர்ளா அனில்-கவ்மில் ஃபாஸிகீன்)
“...நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்” (அல்குர்ஆன் 9:96) என்பது வரை.

கஅப் (ரழி) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்:
“எங்கள் மூவரின் விவகாரம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சத்தியம் செய்து, அதனை நபியவர்கள் ஏற்றுக்கொண்டு, விசுவாசப் பிரமாணம் பெற்று, பாவமன்னிப்பும் தேடினார்களே... அத்தகையோரின் விவகாரத்தை விட்டும் பிற்படுத்தப்பட்டது. எங்கள் விவகாரத்தை அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிற்படுத்தினார்கள். இதைக் குறித்தே அல்லாஹ்,

وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا...
(வ அலத்-தலாதி தில்லதீன குல்லிஃபூ...)
“இன்னும், (தீர்ப்பு) பிற்படுத்தப்பட்ட அந்த மூன்று நபர்களையும் (அல்லாஹ் மன்னித்தான்)” (அல்குர்ஆன் 9:118) என்று கூறினான்.

இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ‘பிற்படுத்தப்பட்டார்கள்’ (குல்லிஃபூ) என்பது, போருக்கு வராமல் பின்தங்கியதைக் குறிக்காது. மாறாக, எங்களுடைய விவகாரத்தை (உடனே முடிவு செய்யாமல்) தாமதப்படுத்தி, பிற்படுத்தியதையே குறிக்கும். சத்தியம் செய்து, காரணங்கள் கூறி, அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்களே... அவர்களின் விஷயத்திற்கு மாற்றமாக (எங்கள் விஷயம் அமைந்தது).”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4725ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبَكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى صَاحِبَ الْخَضِرِ لَيْسَ هُوَ مُوسَى صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ‏.‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ كَذَبَ عَدُوُّ اللَّهِ حَدَّثَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِنَّ مُوسَى قَامَ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ إِنَّ لِي عَبْدًا بِمَجْمَعِ الْبَحْرَيْنِ، هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ مُوسَى يَا رَبِّ فَكَيْفَ لِي بِهِ قَالَ تَأْخُذُ مَعَكَ حُوتًا فَتَجْعَلُهُ فِي مِكْتَلٍ، فَحَيْثُمَا فَقَدْتَ الْحُوتَ فَهْوَ ثَمَّ، فَأَخَذَ حُوتًا فَجَعَلَهُ فِي مِكْتَلٍ ثُمَّ انْطَلَقَ، وَانْطَلَقَ مَعَهُ بِفَتَاهُ يُوشَعَ بْنِ نُونٍ، حَتَّى إِذَا أَتَيَا الصَّخْرَةَ وَضَعَا رُءُوسَهُمَا فَنَامَا، وَاضْطَرَبَ الْحُوتُ فِي الْمِكْتَلِ، فَخَرَجَ مِنْهُ، فَسَقَطَ فِي الْبَحْرِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، وَأَمْسَكَ اللَّهُ عَنِ الْحُوتِ جِرْيَةَ الْمَاءِ فَصَارَ عَلَيْهِ مِثْلَ الطَّاقِ فَلَمَّا اسْتَيْقَظَ، نَسِيَ صَاحِبُهُ أَنْ يُخْبِرَهُ بِالْحُوتِ، فَانْطَلَقَا بَقِيَّةَ يَوْمِهِمَا وَلَيْلَتَهُمَا، حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ قَالَ مُوسَى لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قَالَ وَلَمْ يَجِدْ مُوسَى النَّصَبَ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أَمَرَ اللَّهُ بِهِ فَقَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ، وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا قَالَ فَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَلِمُوسَى وَلِفَتَاهُ عَجَبًا فَقَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا قَالَ رَجَعَا يَقُصَّانِ آثَارَهُمَا حَتَّى انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، فَإِذَا رَجُلٌ مُسَجًّى ثَوْبًا، فَسَلَّمَ عَلَيْهِ مُوسَى‏.‏ فَقَالَ الْخَضِرُ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ قَالَ أَنَا مُوسَى‏.‏ قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ أَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا‏.‏ قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِي صَبْرًا، يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ أَنْتَ وَأَنْتَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَ اللَّهُ لاَ أَعْلَمُهُ‏.‏ فَقَالَ مُوسَى سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا، وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا‏.‏ فَقَالَ لَهُ الْخَضِرُ، فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَىْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ، فَمَرَّتْ سَفِينَةٌ فَكَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمْ، فَعَرَفُوا الْخَضِرَ، فَحَمَلُوهُ بِغَيْرِ نَوْلٍ فَلَمَّا رَكِبَا فِي السَّفِينَةِ، لَمْ يَفْجَأْ إِلاَّ وَالْخَضِرُ قَدْ قَلَعَ لَوْحًا مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ بِالْقَدُومِ‏.‏ فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِي صَبْرًا‏.‏ قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا ‏"‏‏.‏ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا قَالَ وَجَاءَ عُصْفُورٌ فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ فَنَقَرَ فِي الْبَحْرِ نَقْرَةً، فَقَالَ لَهُ الْخَضِرُ مَا عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ مِثْلُ مَا نَقَصَ هَذَا الْعُصْفُورُ مِنْ هَذَا الْبَحْرِ ثُمَّ خَرَجَا مِنَ السَّفِينَةِ، فَبَيْنَا هُمَا يَمْشِيَانِ عَلَى السَّاحِلِ، إِذْ أَبْصَرَ الْخَضِرُ غُلاَمًا يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ، فَأَخَذَ الْخَضِرُ رَأْسَهُ بِيَدِهِ فَاقْتَلَعَهُ بِيَدِهِ فَقَتَلَهُ‏.‏ فَقَالَ لَهُ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَاكِيَةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِي صَبْرًا قَالَ وَهَذَا أَشَدُّ مِنَ الأُولَى، قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي عُذْرًا فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ ـ قَالَ مَائِلٌ ـ فَقَامَ الْخَضِرُ فَأَقَامَهُ بِيَدِهِ فَقَالَ مُوسَى قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُطْعِمُونَا، وَلَمْ يُضَيِّفُونَا، لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا‏.‏ قَالَ ‏{‏هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِعْ عَلَيْهِ صَبْرًا‏}‏‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَدِدْنَا أَنَّ مُوسَى كَانَ صَبَرَ حَتَّى يَقُصَّ اللَّهُ عَلَيْنَا مِنْ خَبَرِهِمَا ‏"‏‏.‏ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا، وَكَانَ يَقْرَأُ وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا وَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ‏.‏
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம், “அல்-கழிர் அவர்களின் தோழரான மூஸா, பனூ இஸ்ராயீல்களின் மூஸா அல்லர் (அவர் வேறொருவர்) என்று நௌஃப் அல்-பிகாலீ வாதிடுகிறார்” என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் எதிரி பொய் சொல்லிவிட்டான்” என்று கூறினார்கள்.

(பிறகு) உபை பின் கஅப் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்:
“மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களிடையே ஒரு சொற்பொழிவை நிகழ்த்த எழுந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘மக்களில் மிகவும் அறிந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு மூஸா (அலை), ‘நான்(தான்)’ என்று பதிலளித்தார்கள். அறிவை அல்லாஹ்விடம் இணைத்துக் கூறாததால் அல்லாஹ் அவரைக் கண்டித்தான். ‘இரண்டு கடல்கள் சங்கமிக்குமிடத்தில் என்னுடைய அடியார்களில் ஒருவர் இருக்கிறார்; அவர் உங்களை விட அதிகம் அறிந்தவர்’ என்று அல்லாஹ் அவருக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தான்.

மூஸா (அலை), ‘இறைவா! அவரை நான் எவ்வாறு சந்திப்பது?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ‘நீங்கள் ஒரு மீனை எடுத்து, அதை ஒரு கூடையில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று கூறினான்.

ஆகவே, மூஸா (அலை) அவர்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு கூடையில் இட்டுக்கொண்டு (பயணத்தை) மேற்கொண்டார்கள். அவர்களுடன் அவர்களுடைய இளம் உதவியாளர் யூஷா பின் நூன் அவர்களும் சென்றார்கள். அவர்கள் இருவரும் ஒரு பாறையருகே சென்றடைந்தபோது, தங்கள் தலைகளை (பாறையில்) வைத்து உறங்கினார்கள். அப்போது அந்தக் கூடையில் இருந்த மீன் துள்ளிக்குதித்து வெளியேறி கடலுக்குள் விழுந்தது. அது கடலில் (சுரங்கப்பாதை போன்று) தன் வழியை அமைத்துக்கொண்டது. அல்லாஹ் மீனின் மீது நீரோட்டத்தைத் தடுத்துவிட்டான். ஆகவே, நீர் வளைந்து ஒரு குகையைப் போன்று நின்றது.

மூஸா (அலை) அவர்கள் கண் விழித்தபோது, மீனைப் பற்றிய செய்தியை அவரிடம் கூற அவருடைய தோழர் மறந்துவிட்டார். ஆகவே, அன்றைய பகலிலும் இரவிலும் அவர்கள் நடந்தார்கள். மறுநாள் காலை வந்தபோது மூஸா (அலை) தம் இளம் உதவியாளரிடம், ‘நமது காலை உணவைக் கொண்டு வா! இந்தப் பயணத்தினால் நாம் பெரும் களைப்பைச் சந்தித்துவிட்டோம்’ என்று கூறினார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட அந்த இடத்தைக் கடந்து செல்லும் வரை மூஸா (அலை) அவர்கள் எவ்விதக் களைப்பையும் உணரவில்லை.

அப்போது அந்த உதவியாளர் அவரிடம், ‘நாம் அந்தப் பாறையருகே ஒதுங்கியபோது (நடந்தது) உங்களுக்குத் தெரியுமா? நான் அந்த மீனை மறந்துவிட்டேன். அதை நினைவுபடுத்துவதை விட்டும் ஷைத்தானே என்னை மறக்கடித்துவிட்டான். அது கடலில் வியக்கத்தக்க வகையில் தன் வழியை அமைத்துக்கொண்டது’ என்று கூறினார். மீனுக்கு அது ஒரு சுரங்கப்பாதையாகவும், மூஸாவுக்கும் அவருடைய உதவியாளருக்கும் அது ஒரு வியப்பாகவும் அமைந்தது.

மூஸா (அலை) அவர்கள், ‘அதைத்தான் நாம் தேடிக்கொண்டிருந்தோம்’ என்று கூறிவிட்டு, வந்த வழியே தங்கள் காலடிச் சுவடுகளைப் பின்பற்றித் திரும்பினார்கள். அவர்கள் இருவரும் தங்கள் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி அந்தப் பாறையருகே வந்தபோது, அங்கே ஒரு மனிதர் போர்வையால் மூடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். மூஸா (அலை) அவருக்கு ஸலாம் சொன்னார்கள். அதற்கு அல்-கழிர், ‘உமது பூமியில் ஏது ஸலாம் (சாந்தி)?’ என்று கேட்டார். மூஸா (அலை), ‘நான்தான் மூஸா’ என்றார். அவர், ‘பனூ இஸ்ராயீல்களின் மூஸாவா?’ என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை), ‘ஆம்; தங்களுக்குக் கற்றுத்தரப்பட்டிருக்கும் நல்வழியை எனக்கு நீர் கற்றுத்தருவதற்காக உம்மிடம் வந்துள்ளேன்’ என்றார்.

அதற்கு அவர், ‘என்னுடன் இருக்க உம்மால் பொறுமையாக இருக்க முடியாது. மூஸா! அல்லாஹ் எனக்கு அவனது அறிவிலிருந்து ஒன்றைக் கற்றுத்தந்துள்ளான்; அதை நீர் அறியமாட்டீர். மேலும் அல்லாஹ் உமக்கு அவனது அறிவிலிருந்து ஒன்றைக் கற்றுத்தந்துள்ளான்; அதை நான் அறியமாட்டேன்’ என்று கூறினார். மூஸா (அலை), ‘அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாக நீர் காண்பீர்; எந்த விஷயத்திலும் உமக்கு நான் மாறுசெய்யமாட்டேன்’ என்று கூறினார்கள்.

அல்-கழிர் அவரிடம், ‘நீர் என்னைப் பின்பற்றி வருவதானால், நானாக உமக்குச் சொல்லாத வரை எதைப் பற்றியும் என்னிடம் கேட்கக் கூடாது’ என்று கூறினார்.

பிறகு இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றனர். அப்போது கப்பல் ஒன்று சென்றது. தங்களை அதில் ஏற்றிக்கொள்ளும்படி அக்கப்பலாரிடம் பேசினார்கள். அவர்கள் அல்-கழிர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு, கூலி ஏதுமின்றி அவர்களை ஏற்றிக்கொண்டனர். அவர்கள் இருவரும் கப்பலில் ஏறியதும், திடீரென அல்-கழிர் கோடரியால் கப்பலின் பலகைகளில் ஒன்றை கழற்றிவிட்டார்.

மூஸா (அலை) அவரிடம், ‘கூலி ஏதுமின்றி நம்மை இவர்கள் ஏற்றிக்கொண்டார்கள். ஆனால், நீர் இக்கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிக்க வேண்டும் என்பதற்காக இதில் ஓட்டையிட்டுவிட்டீரே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான காரியத்தைச் செய்துவிட்டீர்’ என்று கூறினார். அதற்கு அல்-கழிர், ‘என்னுடன் இருக்க உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லையா?’ என்றார். அதற்கு மூஸா (அலை), ‘நான் மறந்துபோனது பற்றி என்னைப் பிடிக্কাதீர்; என் விஷயத்தில் சிரமத்தைக் கொடுக்காதீர்’ என்று கூறினார்கள்.”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூஸாவிடமிருந்து (ஏற்பட்ட) முதலாவது (குறுக்கீடு) மறதியால் நிகழ்ந்ததாகும்.”

(தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)
“அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் விளிம்பில் அமர்ந்து, கடலில் தன் அலகால் ஒரு முறை கொத்தியது. அல்-கழிர் அவர்கள் மூஸாவிடம், ‘அல்லாஹ்வின் அறிவிலிருந்து என்னுடைய அறிவும் உன்னுடைய அறிவும் (எதையும்) குறைக்கவில்லை; இந்தச் சிட்டுக்குருவி இந்தக் கடலிலிருந்து (தன் அலகால் நீர் அருந்தி) குறைத்ததைத் தவிர’ என்று கூறினார்.

பிறகு இருவரும் கப்பலிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அல்-கழிர் ஒரு சிறுவன் மற்றச் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அல்-கழிர் அவனது தலையைப் பிடித்து, தன் கையாலேயே அதைப்பிடுங்கி அவனைக் கொன்றுவிட்டார்.

மூஸா (அலை) அவரிடம், ‘ஓர் உயிருக்கு ஈடாக இல்லாமல், தூய ஆத்மா ஒன்றை நீர் கொன்றுவிட்டீரே! நிச்சயமாக நீர் ஒரு தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்’ என்று கூறினார். அதற்கு அவர், ‘என்னுடன் இருக்க உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் உமக்குச் சொல்லவில்லையா?’ என்று கேட்டார்.” (இதற்கு முந்தையதை விட இது மிகவும் கடுமையானது என்று அறிவிப்பாளர் கூறுகிறார்).

“மூஸா (அலை), ‘இதற்குப் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால், என்னை நீர் உம் தோழமையில் வைத்துக்கொள்ள வேண்டாம். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) தக்க காரணத்தைப் பெற்றுவிட்டீர்’ என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் நடந்தார்கள். ஓர் ஊராரிடம் வந்து, தங்களுக்கும் உணவு தருமாறு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் இவர்களுக்கு விருந்தளிக்க மறுத்துவிட்டனர். அங்கு சாய்ந்து விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவர்கள் கண்டார்கள்.” (அறிவிப்பாளர் ‘மாயில்’ என்பதற்கு விழும் நிலையில் என்று விளக்கமளித்தார்). “உடனே அல்-கழிர் தம் கையாலேயே அதை நிமிர்த்தி வைத்தார். மூஸா (அலை), ‘நாம் இவர்களிடம் வந்தோம்; ஆனால் இவர்கள் நமக்கு உணவளிக்கவில்லை; நமக்கு விருந்தளிக்கவும் இல்லை. நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘இதுதான் எனக்கும் உமக்கும் இடையே பிரிவினை(க்கான நேரம்). உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றின் விளக்கத்தை உமக்குச் சொல்கிறேன்...’ என்று (விளக்கம்) கூறினார்.”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூஸா (அலை) அவர்கள் (இன்னும்) பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என நாம் விரும்பினோம். அவ்வாறிருந்திருந்தால், அவ்விருவரின் செய்திகள் நமக்கு (இன்னும் அதிகமாக) விவரிக்கப்பட்டிருக்கும்.”

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “(அந்தக் கப்பலுக்கு) முன்னால் ஒரு மன்னன் இருந்தான். அவன் பழுதுபடாத நல்ல கப்பல்களை எல்லாம் பலவந்தமாக அபகரித்துக்கொண்டிருந்தான்” என்றும், “அந்தச் சிறுவனைப் பொறுத்தவரை அவன் இறைமறுப்பாளனாக (காஃபிராக) இருந்தான்; அவனது பெற்றோரோ இறைநம்பிக்கையாளர்களாக இருந்தனர்” என்றும் ஓதுபவர்களாய் இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2380 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ،
وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - حَدَّثَنَا سُفْيَانُ،
بْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ
يَزْعُمُ أَنَّ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ لَيْسَ هُوَ مُوسَى صَاحِبَ الْخَضِرِ عَلَيْهِ
السَّلاَمُ ‏.‏ فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ سَمِعْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم يَقُولُ ‏"‏ قَامَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ
فَقَالَ أَنَا أَعْلَمُ ‏.‏ قَالَ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ
عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ مُوسَى أَىْ رَبِّ كَيْفَ لِي بِهِ فَقِيلَ لَهُ احْمِلْ حُوتًا
فِي مِكْتَلٍ فَحَيْثُ تَفْقِدُ الْحُوتَ فَهُوَ ثَمَّ ‏.‏ فَانْطَلَقَ وَانْطَلَقَ مَعَهُ فَتَاهُ وَهُوَ يُوشَعُ بْنُ نُونٍ فَحَمَلَ
مُوسَى عَلَيْهِ السَّلاَمُ حُوتًا فِي مِكْتَلٍ وَانْطَلَقَ هُوَ وَفَتَاهُ يَمْشِيَانِ حَتَّى أَتَيَا الصَّخْرَةَ فَرَقَدَ
مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَفَتَاهُ فَاضْطَرَبَ الْحُوتُ فِي الْمِكْتَلِ حَتَّى خَرَجَ مِنَ الْمِكْتَلِ فَسَقَطَ فِي
الْبَحْرِ - قَالَ - وَأَمْسَكَ اللَّهُ عَنْهُ جِرْيَةَ الْمَاءِ حَتَّى كَانَ مِثْلَ الطَّاقِ فَكَانَ لِلْحُوتِ سَرَبًا
وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا فَانْطَلَقَا بَقِيَّةَ يَوْمِهِمَا وَلَيْلَتِهِمَا وَنَسِيَ صَاحِبُ مُوسَى أَنْ يُخْبِرَهُ
فَلَمَّا أَصْبَحَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا
- قَالَ - وَلَمْ يَنْصَبْ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ ‏.‏ قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ
فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا
‏.‏ قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا ‏.‏ قَالَ يَقُصَّانِ آثَارَهُمَا حَتَّى
أَتَيَا الصَّخْرَةَ فَرَأَى رَجُلاً مُسَجًّى عَلَيْهِ بِثَوْبٍ فَسَلَّمَ عَلَيْهِ مُوسَى ‏.‏ فَقَالَ لَهُ الْخَضِرُ أَنَّى
بِأَرْضِكَ السَّلاَمُ قَالَ أَنَا مُوسَى ‏.‏ قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ إِنَّكَ عَلَى عِلْمٍ
مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ وَأَنَا عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ ‏.‏ قَالَ لَهُ مُوسَى
عَلَيْهِ السَّلاَمُ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا
وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلاَ أَعْصِي لَكَ
أَمْرًا ‏.‏ قَالَ لَهُ الْخَضِرُ فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَىْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ‏.‏ قَالَ
نَعَمْ ‏.‏ فَانْطَلَقَ الْخَضِرُ وَمُوسَى يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ فَكَلَّمَاهُمْ
أَنْ يَحْمِلُوهُمَا فَعَرَفُوا الْخَضِرَ فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ
فَنَزَعَهُ فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا
لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا ‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ
وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا ثُمَّ خَرَجَا مِنَ السَّفِينَةِ فَبَيْنَمَا هُمَا يَمْشِيَانِ عَلَى السَّاحِلِ إِذَا
غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ فَاقْتَلَعَهُ بِيَدِهِ فَقَتَلَهُ ‏.‏ فَقَالَ مُوسَى أَقَتَلْتَ
نَفْسًا زَاكِيَةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا ‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا
قَالَ وَهَذِهِ أَشَدُّ مِنَ الأُولَى ‏.‏ قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ
مِنْ لَدُنِّي عُذْرًا ‏.‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا
فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ ‏.‏ يَقُولُ مَائِلٌ ‏.‏ قَالَ الْخَضِرُ بِيَدِهِ هَكَذَا فَأَقَامَهُ
‏.‏ قَالَ لَهُ مُوسَى قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُضَيِّفُونَا وَلَمْ يُطْعِمُونَا لَوْ شِئْتَ لَتَخِذْتَ عَلَيْهِ أَجْرًا ‏.‏
قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا ‏"‏ ‏.‏ قَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَرْحَمُ اللَّهُ مُوسَى لَوَدِدْتُ أَنَّهُ كَانَ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ
أَخْبَارِهِمَا ‏"‏ ‏.‏ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ كَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا
‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ وَجَاءَ عُصْفُورٌ حَتَّى وَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ ثُمَّ نَقَرَ فِي الْبَحْرِ ‏.‏ فَقَالَ لَهُ الْخَضِرُ
مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ مِثْلَ مَا نَقَصَ هَذَا الْعُصْفُورُ مِنَ الْبَحْرِ ‏"‏ ‏.‏ قَالَ
سَعِيدُ بْنُ جُبَيْرٍ وَكَانَ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا ‏.‏ وَكَانَ يَقْرَأُ
وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا ‏.‏
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "பனூ இஸ்ராயீல்களின் (தூதர்) மூஸா (அலை) அவர்கள் ஃகித்ருடைய தோழரான மூஸா அல்லர் என்று நவ்ஃப் அல்-பிகாலீ வாதிடுகிறார்" என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "அல்லாஹ்வின் எதிரி பொய்யுரைத்துவிட்டான்" என்று கூறிவிட்டு, "உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூற நான் செவியுற்றேன்" என்று (பின்வருமாறு) அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது அவரிடம், 'மக்களிலேயே மிக அதிகம் அறிந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நானே (மிக அதிகம் அறிந்தவன்)' என்று பதிலளித்தார்கள். அறிவை(ச் சார்ந்த விஷயத்தை) அல்லாஹ்விடம் அவர் ஒப்படைக்காததால் அல்லாஹ் அவரைக் கண்டித்தான். 'இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என்னுடைய அடியார்களில் ஒருவர் இருக்கிறார்; அவர் உங்களை விட அதிகம் அறிந்தவர்' என்று அல்லாஹ் அவருக்கு வஹீ அறிவித்தான்.

மூஸா (அலை) அவர்கள், 'இறைவா! அவரை நான் எவ்வாறு சந்திப்பேன்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஒரு மீனைப் பிடித்துப் பெரிய கூடை ஒன்றில் வைத்துக்கொண்டு செல்லுங்கள்; எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கே அவர் இருப்பார்' என்று அவருக்குச் சொல்லப்பட்டது.

உடனே மூஸா (அலை) அவர்களும், அவருடைய உதவியாளர் யூஷா பின் நூனும் புறப்பட்டார்கள். மூஸா (அலை) அவர்கள் ஒரு மீனைப் பிடித்துக் கூடையில் வைத்துக்கொண்டார்கள். அவரும் அவருடைய உதவியாளரும் நடந்தார்கள். அவர்கள் இருவரும் (கடற்பாறையான) 'சக்ரா'வை அடைந்ததும், மூஸா (அலை) அவர்களும் அவருடைய உதவியாளரும் (அயர்ந்து) உறங்கிவிட்டார்கள். அப்போது அந்தக் கூடையிலிருந்த மீன் துள்ளிக்குதித்து, கூடையிலிருந்து வெளியேறி கடலுக்குள் விழுந்தது. அல்லாஹ் நீரோட்டத்தை (மீன் சென்ற பாதையில்) ஒரு வளைவைப் (சுரங்கப் பாதை) போல தடுத்து நிறுத்தினான். மீன் சென்ற பாதை ஒரு சுரங்கமாகவும், மூஸாவுக்கும் அவருடைய உதவியாளருக்கும் அது ஆச்சரியமாகவும் அமைந்தது.

அவர்கள் இருவரும் அன்றைய பகலின் எஞ்சிய நேரமும், இரவும் நடந்தார்கள். மூஸாவுடைய தோழர் (யூஷா) மீன் விஷயத்தை அவருக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார். காலை விடிந்ததும் மூஸா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், 'நமது காலை உணவைக் கொண்டு வா! நாம் மேற்கொண்ட இந்தப் பயணத்தினால் களைப்படைந்து விட்டோம்' என்று கூறினார்கள். (ஃகித்ரைச் சந்திக்குமாறு) கட்டளையிடப்பட்ட இடத்தைக் கடந்து செல்லும் வரை அவர்களுக்கு அந்தக் களைப்பு ஏற்படவில்லை.

அப்போது உதவியாளர், 'பார்த்தீர்களா! நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது நான் மீனை மறந்துவிட்டேன்; அதை நினைவுபடுத்துவதை விட்டும் ஷைத்தானே என்னை மறக்கச் செய்துவிட்டான்; அது கடலில் ஆச்சரியமான வகையில் தன் பாதையை அமைத்துக்கொண்டது' என்று கூறினார்.

அதற்கு மூஸா (அலை), 'அதைத்தான் நாமும் தேடிக் கொண்டிருந்தோம்' என்று கூறிவிட்டு, வந்த சுவடுகளின் வழியே இருவரும் (பின்னால்) திரும்பிச் சென்றார்கள். அவர்கள் இருவரும் அந்தப் பாறையை அடைந்தபோது, அங்கே துணியால் போர்த்தப்பட்டிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். மூஸா (அலை) அவருக்கு ஸலாம் சொன்னார்கள். ஃகித்ர் (அலை) அவர்கள், 'உமது பூமியில் ஏது ஸலாம்?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், 'நான் தான் மூஸா' என்றார்கள். ஃகித்ர், 'பனூ இஸ்ராயீல்களின் மூஸாவா?' என்று கேட்டார். மூஸா (அலை), 'ஆம்' என்றார்கள். மேலும், 'அல்லாஹ் உமக்குக் கற்றுத் தந்திருப்பவற்றிலிருந்து, எனக்கும் ஒரு நல்வழியை நீர் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்தொடரலாமா?' என்று கேட்டார்கள். ஃகித்ர் கூறினார்: 'நிச்சயமாக நீர் என்னுடன் இருக்கப் பொறுமை கொள்ளமாட்டீர். உமக்கு முழுமையாகத் தெரியாத (உமது அறிவுக்கு எட்டாத) விஷயத்தில் உம்மால் எப்படிப் பொறுமையாக இருக்க முடியும்?'

அதற்கு மூஸா (அலை), 'அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்; எந்த விஷயத்திலும் நான் உமக்கு மாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். ஃகித்ர், 'நீர் என்னைப் பின் தொடர்வதானால், நானாக உமக்கு எதைப் பற்றியாவது சொல்லும் வரை என்னிடம் எதைப்பற்றியும் கேட்கக் கூடாது' என்றார். மூஸா (அலை), 'சரி' என்றார்கள்.

பிறகு ஃகித்ரும் மூஸாவும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது அவர்களைக் கடந்து கப்பல் ஒன்று சென்றது. தங்களை (கப்பலில்) ஏற்றிக்கொள்ளுமாறு அவர்கள் கப்பல்காரர்களிடம் பேசினார்கள். அவர்கள் ஃகித்ரை அடையாளம் கண்டுகொண்டு, கூலி ஏதும் வாங்காமலேயே அவர்களை ஏற்றிக்கொண்டார்கள்.

அப்போது ஃகித்ர், கப்பலின் பலகைகளில் ஒன்றை நோக்கிச் சென்று அதை கழற்றிவிட்டார். இதைக் கண்ட மூஸா (அலை), 'இம்மக்கள் நம்மை கூலி ஏதுமின்றி (இலவசமாக) ஏற்றிக்கொண்டார்கள். ஆனால், நீர் இவர்களுடைய கப்பலை, இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிப்பதற்காக ஓட்டையிட்டுவிட்டீரே! நிச்சயமாக நீர் விபரீதமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்' என்று கூறினார்கள்.

அதற்கு ஃகித்ர், 'நிச்சயமாக நீர் என்னுடன் இருக்கப் பொறுமை கொள்ளமாட்டீர் என்று நான் சொல்லவில்லையா?' என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை), 'நான் மறந்துவிட்டதற்காக என்னைக் குற்றம் பிடிக்காதீர்; என் விஷயத்தில் சிரமத்தைக் கொடுக்காதீர்' என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் கப்பலிலிருந்து இறங்கி, (கடற்கரையில்) நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். ஃகித்ர் அவனது தலையைப் பிடித்து, தன் கையாலேயே அதை (உடலிலிருந்து) துண்டித்து அவனைக் கொன்றுவிட்டார்.

உடனே மூஸா (அலை), '(கொலைக்குப் பரிகாரமாக) ஒரு உயிருக்கு பகரமாக இல்லாமல், ஒரு தூய ஆத்மாவை நீர் கொன்றுவிட்டீரே! நிச்சயமாக நீர் வெறுக்கத்தக்க ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்' என்று கேட்டார்கள். அதற்கு ஃகித்ர், 'நிச்சயமாக நீர் என்னுடன் இருக்கப் பொறுமை கொள்ளமாட்டீர் என்று நான் உமக்குச் சொல்லவில்லையா?' என்று கேட்டார். மூஸா (அலை), 'இது (முந்தையதை விட) மிகக் கடுமையானது' என்று (எண்ணிக்) கொண்டார்.

'இதற்குப் பிறகு நான் உம்மிடம் எதைப் பற்றியாவது கேட்டால், நீர் என்னை உம்முடன் தோழமை கொள்ளச் செய்ய வேண்டாம்; என்னிடமிருந்து (பிரிய) தகுந்த காரணத்தை நீர் அடைந்துவிட்டீர்' என்று மூஸா (அலை) கூறினார்கள்.

பிறகு இருவரும் நடந்தார்கள். ஒரு கிராமத்தாரிடம் வந்து, தங்களுக்க்கு உணவளிக்குமாறு கேட்டார்கள். ஆனால் அக்கிராமத்தினர் இவர்களுக்கு விருந்தளிக்க மறுத்துவிட்டார்கள். அங்கு சாய்ந்து விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவர்கள் கண்டார்கள். (அறிவிப்பாளர் சயீத் பின் ஜுபைர், 'அது சாய்ந்திருந்தது' என்பதைத் தன் கையால் சைகை செய்து காட்டினார்கள்). ஃகித்ர் அதைத் தன் கையால் நிமிர்த்திச் சரிசெய்தார்.

மூஸா (அலை) அவரிடம், 'நாம் இவர்களிடம் வந்தோம்; ஆனால் இவர்கள் நமக்கு விருந்தளிக்கவுமில்லை; நமக்கு உணவளிக்கவும் இல்லை. நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே' என்று கூறினார்கள்.

அதற்கு ஃகித்ர், 'இதுதான் எனக்கும் உமக்குமிடையே உள்ள பிரிவு (பிரியும் நேரம்). உம்மால் பொறுமை கொள்ள முடியாதவற்றின் விளக்கத்தை உமக்கு நான் அறிவிக்கிறேன்' என்று கூறினார்."

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதை விவரித்த பின்) கூறினார்கள்: "அல்லாஹ் மூஸாவுக்கு அருள் புரிவானாக! அவர் பொறுமையாக இருந்திருந்தால், அவர்கள் இருவருடைய (மேலும் பல) செய்திகள் நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும் என்று நான் ஆசைப்படுகிறேன்."

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூஸா (அலை) செய்த முதல் தவறு மறதியினால் ஏற்பட்டது."

மேலும் (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்): "சிட்டுக்குருவி ஒன்று வந்து கப்பலின் விளிம்பில் அமர்ந்து, கடலிலிருந்து (தன் அலகால்) கொத்தியது. அப்போது ஃகித்ர் அவரிடம், 'அல்லாஹ்வின் அறிவுக்கு முன்னால், என்னுடைய அறிவும் உன்னுடைய அறிவும் இந்தக் குருவி கடலிலிருந்து குறைத்த (நீரின்) அளவேயன்றி வேறில்லை' என்று கூறினார்."

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (இந்த வசனங்களை ஓதும்போது), "அவர்களுக்கு முன்னால் ஒரு மன்னன் இருந்தான்; அவன் நல்ல கப்பல்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக் கொள்வான்" என்றும், "அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக (காஃபிர்) இருந்தான்" என்றும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2380 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِنَّهُ
بَيْنَمَا مُوسَى عَلَيْهِ السَّلاَمُ فِي قَوْمِهِ يُذَكِّرُهُمْ بِأَيَّامِ اللَّهِ وَأَيَّامُ اللَّهِ نَعْمَاؤُهُ وَبَلاَؤُهُ إِذْ قَالَ
مَا أَعْلَمُ فِي الأَرْضِ رَجُلاً خَيْرًا أَوْ أَعْلَمَ مِنِّي ‏.‏ قَالَ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ إِنِّي أَعْلَمُ بِالْخَيْرِ
مِنْهُ أَوْ عِنْدَ مَنْ هُوَ إِنَّ فِي الأَرْضِ رَجُلاً هُوَ أَعْلَمُ مِنْكَ ‏.‏ قَالَ يَا رَبِّ فَدُلَّنِي عَلَيْهِ ‏.‏ قَالَ
فَقِيلَ لَهُ تَزَوَّدْ حُوتًا مَالِحًا فَإِنَّهُ حَيْثُ تَفْقِدُ الْحُوتَ ‏.‏ قَالَ فَانْطَلَقَ هُوَ وَفَتَاهُ حَتَّى انْتَهَيَا
إِلَى الصَّخْرَةِ فَعُمِّيَ عَلَيْهِ فَانْطَلَقَ وَتَرَكَ فَتَاهُ فَاضْطَرَبَ الْحُوتُ فِي الْمَاءِ فَجَعَلَ لاَ يَلْتَئِمُ
عَلَيْهِ صَارَ مِثْلَ الْكُوَّةِ قَالَ فَقَالَ فَتَاهُ أَلاَ أَلْحَقُ نَبِيَّ اللَّهِ فَأُخْبِرَهُ قَالَ فَنُسِّيَ ‏.‏ فَلَمَّا تَجَاوَزَا
قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا ‏.‏ قَالَ وَلَمْ يُصِبْهُمْ نَصَبٌ حَتَّى تَجَاوَزَا
‏.‏ قَالَ فَتَذَكَّرَ قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلاَّ الشَّيْطَانُ
أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا ‏.‏ قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِي ‏.‏ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا
قَصَصًا فَأَرَاهُ مَكَانَ الْحُوتِ قَالَ هَا هُنَا وُصِفَ لِي ‏.‏ قَالَ فَذَهَبَ يَلْتَمِسُ فَإِذَا هُوَ بِالْخَضِرِ
مُسَجًّى ثَوْبًا مُسْتَلْقِيًا عَلَى الْقَفَا أَوْ قَالَ عَلَى حَلاَوَةِ الْقَفَا قَالَ السَّلاَمُ عَلَيْكُمْ ‏.‏ فَكَشَفَ
الثَّوْبَ عَنْ وَجْهِهِ قَالَ وَعَلَيْكُمُ السَّلاَمُ مَنْ أَنْتَ قَالَ أَنَا مُوسَى ‏.‏ قَالَ وَمَنْ مُوسَى قَالَ
مُوسَى بَنِي إِسْرَائِيلَ ‏.‏ قَالَ مَجِيءٌ مَا جَاءَ بِكَ قَالَ جِئْتُ لِتُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا ‏.‏ قَالَ
إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا ‏.‏ شَىْءٌ أُمِرْتُ بِهِ أَنْ
أَفْعَلَهُ إِذَا رَأَيْتَهُ لَمْ تَصْبِرْ ‏.‏ قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا ‏.‏ قَالَ
فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَىْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ‏.‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا رَكِبَا
فِي السَّفِينَةِ خَرَقَهَا ‏.‏ قَالَ انْتَحَى عَلَيْهَا ‏.‏ قَالَ لَهُ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ
أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا ‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي
بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا ‏.‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا لَقِيَا غِلْمَانًا يَلْعَبُونَ ‏.‏ قَالَ
فَانْطَلَقَ إِلَى أَحَدِهِمْ بَادِيَ الرَّأْىِ فَقَتَلَهُ فَذُعِرَ عِنْدَهَا مُوسَى عَلَيْهِ السَّلاَمُ ذَعْرَةً مُنْكَرَةً ‏.‏
قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَاكِيَةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم عِنْدَ هَذَا الْمَكَانِ ‏"‏ رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى مُوسَى لَوْلاَ أَنَّهُ عَجَّلَ لَرَأَى الْعَجَبَ وَلَكِنَّهُ
أَخَذَتْهُ مِنْ صَاحِبِهِ ذَمَامَةٌ ‏.‏ قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ
لَدُنِّي عُذْرًا ‏.‏ وَلَوْ صَبَرَ لَرَأَى الْعَجَبَ - قَالَ وَكَانَ إِذَا ذَكَرَ أَحَدًا مِنَ الأَنْبِيَاءِ بَدَأَ بِنَفْسِهِ
‏"‏ رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى أَخِي كَذَا رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا - ‏"‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ
لِئَامًا فَطَافَا فِي الْمَجَالِسِ فَاسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا
يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ ‏.‏ قَالَ لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا ‏.‏ قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ
وَأَخَذَ بِثَوْبِهِ ‏.‏ قَالَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ
يَعْمَلُونَ فِي الْبَحْرِ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ فَإِذَا جَاءَ الَّذِي يُسَخِّرُهَا وَجَدَهَا مُنْخَرِقَةً فَتَجَاوَزَهَا
فَأَصْلَحُوهَا بِخَشَبَةٍ وَأَمَّا الْغُلاَمُ فَطُبِعَ يَوْمَ طُبِعَ كَافِرًا وَكَانَ أَبَوَاهُ قَدْ عَطَفَا عَلَيْهِ فَلَوْ
أَنَّهُ أَدْرَكَ أَرْهَقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا فَأَرَدْنَا أَنْ يُبَدِّلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا
‏.‏ وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلاَمَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ ‏"‏ ‏.‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏
உபய் இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்:

"மூஸா (அலை) அவர்கள் தம் சமூகத்தினரிடையே 'அல்லாஹ்வின் நாட்களை' (அய்யாமுல்லாஹ்) நினைவூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் - 'அல்லாஹ்வின் நாட்கள்' என்பது அவனது அருட்கொடைகளையும் அவனது சோதனைகளையும் குறிக்கும் - அப்போது அவர், 'பூமியில் என்னை விடச் சிறந்த அல்லது என்னை விட அதிகம் அறிந்த ஒருவரை நான் அறியவில்லை' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ் அவருக்கு வஹி அறிவித்தான்: 'அவரை விடச் சிறந்தவர் யார் என்பதை அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்பதை நான் நன்கு அறிவேன்; பூமியில் உன்னை விட அதிக அறிவுடைய ஒரு மனிதர் இருக்கிறார்.'

அதற்கு மூஸா (அலை), 'என் இறைவா! அவரை நான் அடைவது எப்படி (எனக்குக் காட்டு)?' என்று கேட்டார்.

அதற்கு, 'உப்புக்கண்டம் போடப்பட்ட ஒரு மீனை உணவாக எடுத்துக்கொள். எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறாயோ அங்கே (அவர் இருப்பார்)' என்று கூறப்பட்டது.

எனவே அவரும் அவருடைய உதவியாளரும் (பயணப்பட்டு) அந்தப் பாறையை அடைந்தனர். அங்கே அவருக்கு (அந்த இடம்) மறைக்கப்பட்டது. அவர் (மூஸா) தம் உதவியாளரை விட்டுவிட்டுச் சென்றார். அப்போது அந்த மீன் தண்ணீரில் துடித்தது. தண்ணீர் அதன் மீது மூடாமல் ஒரு சுரங்கப்பாதையைப் போல (வழியமைத்து) நின்றது.

அப்போது அவரது உதவியாளர், 'நான் அல்லாஹ்வின் நபியைச் சந்தித்து இதைத் தெரிவிக்க வேண்டுமே' என்று (நினைத்தார்). ஆனால் (பிறகு) மறக்கடிக்கப்பட்டார்.

அவர்கள் அந்த இடத்தைக் கடந்த பிறகு, அவர் (மூஸா) தம் உதவியாளரிடம், 'நமது காலை உணவைக் கொண்டு வா. இப்பயணத்தினால் நாம் களைப்படைந்து விட்டோம்' என்றார். அவர் (மூஸா), கிள்ரைச் சந்திக்க வேண்டிய அந்த (குறிப்பிட்ட) இடத்தைக் கடக்கும் வரை களைப்படையவில்லை.

அப்போது (உதவியாளர்) நினைவு கூர்ந்தார். 'நாம் அந்தப் பாறையில் தங்கியபோது (நடந்ததை) கவனித்தீர்களா? நான் அந்த மீனை மறந்துவிட்டேன். அதை நான் நினைவுகூருவதை சைத்தானே மறக்கடித்துவிட்டான். அது ஆச்சரியமான வகையில் கடலில் தனது பாதையை அமைத்துக் கொண்டது' என்று கூறினார்.

அதற்கு மூஸா (அலை), 'அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்' என்றார். உடனே அவர்கள் தங்கள் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தார்கள்.

அவர் (உதவியாளர்) மீன் இருந்த இடத்தைக் காட்டினார். 'எனக்கு விவரிக்கப்பட்ட இடம் இதுதான்' என்று மூஸா (அலை) கூறினார். அவர் தேடியபோது, அங்கே கிள்ர் (அலை) அவர்கள் ஒரு துணியால் போர்த்தப்பட்ட நிலையில் மல்லாந்து - அல்லது பிடரியின் மீது - படுத்திருப்பதைக் கண்டார்.

மூஸா (அலை), 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றார். அவர் முகத்திலிருந்து துணியை விலக்கி, 'வ அலைக்குமுஸ்ஸலாம், நீர் யார்?' என்று கேட்டார். 'நான் மூஸா' என்றார். 'பனூ இஸ்ராயீல் சமூகத்து மூஸாவா?' என்று கேட்டார். (அதற்கு) 'மூஸா பனூ இஸ்ராயீல் (ஆம், பனூ இஸ்ராயீல் சமூகத்து மூஸா)' என்று பதிலளித்தார்.

'என்ன விஷயமாக இங்கு வந்தீர்?' என்று கிள்ர் கேட்டார். 'உங்களுக்குக் கற்றுத் தரப்பட்ட நல்வழியிலிருந்து எனக்கும் நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் வந்துள்ளேன்' என்று கூறினார்.

அதற்கு அவர், 'நிச்சயமாக நீர் என்னுடன் இருக்கையில் பொறுமையாக இருக்க உம்மால் முடியாது. உமக்கு முழு விபரம் தெரியாத விஷயத்தில் உம்மால் எப்படிப் பொறுமையாக இருக்க முடியும்? நான் செய்யும்படி ஏவப்பட்ட ஒரு காரியத்தை நான் செய்வதை நீர் பார்த்தால் உம்மால் பொறுக்க முடியாது' என்று கூறினார்.

மூஸா (அலை), 'அல்லாஹ் நாடினால், நீங்கள் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்; எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்.

கிள்ர், 'நீர் என்னைப் பின்பற்றி வருவதானால், நானாக உமக்குச் சொல்லும் வரை எதைப் பற்றியும் என்னிடம் கேட்கக் கூடாது' என்று கூறினார்.

பிறகு இருவரும் நடந்தனர். ஒரு கப்பலில் ஏறியபோது, கிள்ர் அதில் ஓட்டையிட்டார். அவர் அதன் மீது சாய்ந்து (சேதப்படுத்தினார்). மூஸா (அலை) அவரிடம், 'கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காகவா அதில் ஓட்டையிட்டீர்? விபரீதமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீரே!' என்று கேட்டார்.

அதற்கு அவர், 'நீர் என்னுடன் இருக்கையில் பொறுமையாக இருக்க உம்மால் முடியாது என்று நான் முன்பே சொல்லவில்லையா?' என்றார்.

மூஸா (அலை), 'நான் மறந்துவிட்டதற்காக என்னைக் குற்றம் பிடிக்காதீர்கள்; என் விஷயத்தில் கண்டிப்பு காட்டாதீர்கள்' என்று கூறினார்.

பிறகு இருவரும் நடந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். கிள்ர் அவர்களில் ஒருவனிடம் சென்று, திடீரென அவனைப் பிடித்துக் கொன்றுவிட்டார்.

இதைக் கண்ட மூஸா (அலை) கடும் அதிர்ச்சியடைந்தார். 'எந்த உயிருக்கும் பகரமாக இல்லாமல், ஒரு தூய ஆத்மாவையா நீர் கொன்றுவிட்டீர்? மிகக் கடுமையான ஒரு செயலைச் செய்துவிட்டீரே!' என்று கேட்டார்.

(இச்சம்பவத்தை விவரிக்கும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் நம்மீதும் மூஸா மீதும் கருணை புரிவானாக! அவர் அவசரப்படாமல் இருந்திருந்தால் ஆச்சரியமான பலவற்றைக் கண்டிருப்பார். ஆனால், தனது தோழரிடம் (கிள்ரிடம்) ஏற்பட்ட அச்சம் (பிரிந்துவிடுவாரோ என்ற கவலை) அவரைப் பற்றிக்கொண்டது.'

(தொடர்ந்து மூஸா கூறினார்:) 'இதற்குப் பிறகு நான் உம்மிடம் எதையேனும் கேட்டால், நீர் என்னை உம்முடன் வைத்துக் கொள்ள வேண்டாம்; (என்னை விலக்கிவிட) என்னிடமிருந்து உமக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது' என்று கூறினார்.

(நபி (ஸல்) கூறினார்கள்:) 'அவர் பொறுமையாக இருந்திருந்தால் ஆச்சரியமானவற்றைக் கண்டிருப்பார்.' - நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு நபியைப் பற்றிக் கூறினால், தம்மைக்கொண்டே ஆரம்பிப்பார்கள்: 'அல்லாஹ்வின் ரஹ்மத் நம்மீதும் என் சகோதரர் (இன்னார்) மீதும் உண்டாவதாக...' (என்று கூறுவார்கள்) -

பிறகு இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஒரு ஊர் மக்களிடம் வந்து உணவளிக்குமாறு கேட்டார்கள் - அவர்கள் மிகவும் கஞ்சத்தனம் உடையவர்களாக இருந்தனர். அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்துவிட்டனர். அவ்வூரில் சாய்ந்து விழும் நிலையில் இருந்த ஒரு சுவரை அவர்கள் கண்டனர். கிள்ர் அதை நிமிர்த்தி வைத்தார்.

மூஸா (அலை), 'நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே!' என்றார்.

அதற்கு அவர், 'இதுதான் எனக்கும் உமக்குமிடையே உள்ள பிரிவு (பிரியும் நேரம்). உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கத்தை உமக்குச் சொல்கிறேன்' என்று கூறி, அவரது ஆடையைப் பிடித்துக் கொண்டார்.

'கப்பலைப் பொறுத்தவரை, அது கடலில் வேலை செய்யும் ஏழைகளுக்குச் சொந்தமானது...' (என்று ஆரம்பித்து) அந்த வசனத்தின் இறுதி வரை ஓதினார்கள். 'அந்தக் கப்பலைப் அபகரித்துக் கொள்பவன் (ஒரு அரசன்) வரும்போது, அது ஓட்டையுள்ளதாக இருந்தால் அதை விட்டுச் செல்வான்; பிறகு அவர்கள் அதை மரப்பலகை வைத்துச் சரிசெய்து கொள்வார்கள்.'

'அந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவன் படைக்கப்படும்போதே காஃபிராக (இறைமறுப்பாளனாக) முத்திரை குத்தப்பட்டவன். அவனது பெற்றோர் அவன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். அவன் வளர்ந்தால், தன் பெற்றோரை வழிகேட்டிலும் இறைமறுப்பிலும் சேர்த்துவிடுவான் (என்று அஞ்சினோம்). எனவே, அவர்களுக்குச் சிறந்த, பரிசுத்தமான, இன்னும் நெருக்கமான பாசமுள்ள ஒரு குழந்தையை அவர்களுடைய இறைவன் அவனுக்குப் பகரமாகக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம்.'

'அந்தச் சுவரைப் பொறுத்தவரை, அது அந்த நகரத்திலுள்ள அனாதைச் சிறுவர்கள் இருவருக்குச் சொந்தமானது; அதற்கு அடியில்...' - என்று அந்த வசனத்தின் இறுதி வரை (விளக்கினார்)."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2473 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ،
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ أَبُو ذَرٍّ خَرَجْنَا مِنْ قَوْمِنَا غِفَارٍ وَكَانُوا يُحِلُّونَ الشَّهْرَ
الْحَرَامَ فَخَرَجْتُ أَنَا وَأَخِي أُنَيْسٌ وَأُمُّنَا فَنَزَلْنَا عَلَى خَالٍ لَنَا فَأَكْرَمَنَا خَالُنَا وَأَحْسَنَ
إِلَيْنَا فَحَسَدَنَا قَوْمُهُ فَقَالُوا إِنَّكَ إِذَا خَرَجْتَ عَنْ أَهْلِكَ خَالَفَ إِلَيْهِمْ أُنَيْسٌ فَجَاءَ خَالُنَا
فَنَثَا عَلَيْنَا الَّذِي قِيلَ لَهُ فَقُلْتُ لَهُ أَمَّا مَا مَضَى مِنْ مَعْرُوفِكَ فَقَدْ كَدَّرْتَهُ وَلاَ جِمَاعَ لَكَ فِيمَا
بَعْدُ ‏.‏ فَقَرَّبْنَا صِرْمَتَنَا فَاحْتَمَلْنَا عَلَيْهَا وَتَغَطَّى خَالُنَا ثَوْبَهُ فَجَعَلَ يَبْكِي فَانْطَلَقْنَا حَتَّى
نَزَلْنَا بِحَضْرَةِ مَكَّةَ فَنَافَرَ أُنَيْسٌ عَنْ صِرْمَتِنَا وَعَنْ مِثْلِهَا فَأَتَيَا الْكَاهِنَ فَخَيَّرَ أُنَيْسًا فَأَتَانَا
أُنَيْسٌ بِصِرْمَتِنَا وَمِثْلِهَا مَعَهَا - قَالَ - وَقَدْ صَلَّيْتُ يَا ابْنَ أَخِي قَبْلَ أَنْ أَلْقَى رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم بِثَلاَثِ سِنِينَ ‏.‏ قُلْتُ لِمَنْ قَالَ لِلَّهِ ‏.‏ قُلْتُ فَأَيْنَ تَوَجَّهُ قَالَ أَتَوَجَّهُ حَيْثُ
يُوَجِّهُنِي رَبِّي أُصَلِّي عِشَاءً حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ أُلْقِيتُ كَأَنِّي خِفَاءٌ حَتَّى تَعْلُوَنِي
الشَّمْسُ ‏.‏ فَقَالَ أُنَيْسٌ إِنَّ لِي حَاجَةً بِمَكَّةَ فَاكْفِنِي ‏.‏ فَانْطَلَقَ أُنَيْسٌ حَتَّى أَتَى مَكَّةَ فَرَاثَ
عَلَىَّ ثُمَّ جَاءَ فَقُلْتُ مَا صَنَعْتَ قَالَ لَقِيتُ رَجُلاً بِمَكَّةَ عَلَى دِينِكَ يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ ‏.‏ قُلْتُ
فَمَا يَقُولُ النَّاسُ قَالَ يَقُولُونَ شَاعِرٌ كَاهِنٌ سَاحِرٌ ‏.‏ وَكَانَ أُنَيْسٌ أَحَدَ الشُّعَرَاءِ ‏.‏ قَالَ
أُنَيْسٌ لَقَدْ سَمِعْتُ قَوْلَ الْكَهَنَةِ فَمَا هُوَ بِقَوْلِهِمْ وَلَقَدْ وَضَعْتُ قَوْلَهُ عَلَى أَقْرَاءِ الشِّعْرِ فَمَا
يَلْتَئِمُ عَلَى لِسَانِ أَحَدٍ بَعْدِي أَنَّهُ شِعْرٌ وَاللَّهِ إِنَّهُ لَصَادِقٌ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ ‏.‏ قَالَ قُلْتُ فَاكْفِنِي
حَتَّى أَذْهَبَ فَأَنْظُرَ ‏.‏ قَالَ فَأَتَيْتُ مَكَّةَ فَتَضَعَّفْتُ رَجُلاً مِنْهُمْ فَقُلْتُ أَيْنَ هَذَا الَّذِي تَدْعُونَهُ
الصَّابِئَ فَأَشَارَ إِلَىَّ فَقَالَ الصَّابِئَ ‏.‏ فَمَالَ عَلَىَّ أَهْلُ الْوَادِي بِكُلِّ مَدَرَةٍ وَعَظْمٍ حَتَّى خَرَرْتُ
مَغْشِيًّا عَلَىَّ - قَالَ - فَارْتَفَعْتُ حِينَ ارْتَفَعْتُ كَأَنِّي نُصُبٌ أَحْمَرُ - قَالَ - فَأَتَيْتُ زَمْزَمَ
فَغَسَلْتُ عَنِّي الدِّمَاءَ وَشَرِبْتُ مِنْ مَائِهَا وَلَقَدْ لَبِثْتُ يَا ابْنَ أَخِي ثَلاَثِينَ بَيْنَ لَيْلَةٍ وَيَوْمٍ مَا
كَانَ لِي طَعَامٌ إِلاَّ مَاءُ زَمْزَمَ فَسَمِنْتُ حَتَّى تَكَسَّرَتْ عُكَنُ بَطْنِي وَمَا وَجَدْتُ عَلَى كَبِدِي سُخْفَةَ
جُوعٍ - قَالَ - فَبَيْنَا أَهْلُ مَكَّةَ فِي لَيْلَةٍ قَمْرَاءَ إِضْحِيَانَ إِذْ ضُرِبَ عَلَى أَسْمِخَتِهِمْ فَمَا
يَطُوفُ بِالْبَيْتِ أَحَدٌ وَامْرَأَتَيْنِ مِنْهُمْ تَدْعُوَانِ إِسَافًا وَنَائِلَةَ - قَالَ - فَأَتَتَا عَلَىَّ فِي طَوَافِهِمَا
فَقُلْتُ أَنْكِحَا أَحَدَهُمَا الأُخْرَى - قَالَ - فَمَا تَنَاهَتَا عَنْ قَوْلِهِمَا - قَالَ - فَأَتَتَا عَلَىَّ
فَقُلْتُ هَنٌ مِثْلُ الْخَشَبَةِ غَيْرَ أَنِّي لاَ أَكْنِي ‏.‏ فَانْطَلَقَتَا تُوَلْوِلاَنِ وَتَقُولاَنِ لَوْ كَانَ هَا هُنَا أَحَدٌ
مِنْ أَنْفَارِنَا ‏.‏ قَالَ فَاسْتَقْبَلَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَهُمَا هَابِطَانِ
قَالَ ‏"‏ مَا لَكُمَا ‏"‏ ‏.‏ قَالَتَا الصَّابِئُ بَيْنَ الْكَعْبَةِ وَأَسْتَارِهَا قَالَ ‏"‏ مَا قَالَ لَكُمَا ‏"‏ ‏.‏ قَالَتَا
إِنَّهُ قَالَ لَنَا كَلِمَةً تَمْلأُ الْفَمَ ‏.‏ وَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى اسْتَلَمَ الْحَجَرَ
وَطَافَ بِالْبَيْتِ هُوَ وَصَاحِبُهُ ثُمَّ صَلَّى فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ أَبُو ذَرٍّ ‏.‏ فَكُنْتُ أَنَا أَوَّلُ مَنْ
حَيَّاهُ بِتَحِيَّةِ الإِسْلاَمِ - قَالَ - فَقُلْتُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ ‏"‏ وَعَلَيْكَ وَرَحْمَةُ
اللَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ مَنْ أَنْتَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ مِنْ غِفَارٍ - قَالَ - فَأَهْوَى بِيَدِهِ فَوَضَعَ أَصَابِعَهُ
عَلَى جَبْهَتِهِ فَقُلْتُ فِي نَفْسِي كَرِهَ أَنِ انْتَمَيْتُ إِلَى غِفَارٍ ‏.‏ فَذَهَبْتُ آخُذُ بِيَدِهِ فَقَدَعَنِي صَاحِبُهُ
وَكَانَ أَعْلَمَ بِهِ مِنِّي ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ قَالَ ‏"‏ مَتَى كُنْتَ هَا هُنَا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ قَدْ كُنْتُ هَا
هُنَا مُنْذُ ثَلاَثِينَ بَيْنَ لَيْلَةٍ وَيَوْمٍ قَالَ ‏"‏ فَمَنْ كَانَ يُطْعِمُكَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ مَا كَانَ لِي طَعَامٌ
إِلاَّ مَاءُ زَمْزَمَ ‏.‏ فَسَمِنْتُ حَتَّى تَكَسَّرَتْ عُكَنُ بَطْنِي وَمَا أَجِدُ عَلَى كَبِدِي سُخْفَةَ جُوعٍ قَالَ
‏"‏ إِنَّهَا مُبَارَكَةٌ إِنَّهَا طَعَامُ طُعْمٍ ‏"‏ ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِي طَعَامِهِ اللَّيْلَةَ
‏.‏ فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَانْطَلَقْتُ مَعَهُمَا فَفَتَحَ أَبُو بَكْرٍ بَابًا
فَجَعَلَ يَقْبِضُ لَنَا مِنْ زَبِيبِ الطَّائِفِ وَكَانَ ذَلِكَ أَوَّلَ طَعَامٍ أَكَلْتُهُ بِهَا ثُمَّ غَبَرْتُ مَا غَبَرْتُ
ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنَّهُ قَدْ وُجِّهَتْ لِي أَرْضٌ ذَاتُ نَخْلٍ لاَ
أُرَاهَا إِلاَّ يَثْرِبَ فَهَلْ أَنْتَ مُبَلِّغٌ عَنِّي قَوْمَكَ عَسَى اللَّهُ أَنْ يَنْفَعَهُمْ بِكَ وَيَأْجُرَكَ فِيهِمْ ‏"‏
‏.‏ فَأَتَيْتُ أُنَيْسًا فَقَالَ مَا صَنَعْتَ قُلْتُ صَنَعْتُ أَنِّي قَدْ أَسْلَمْتُ وَصَدَّقْتُ ‏.‏ قَالَ مَا بِي رَغْبَةٌ
عَنْ دِينِكَ فَإِنِّي قَدْ أَسْلَمْتُ وَصَدَّقْتُ ‏.‏ فَأَتَيْنَا أُمَّنَا فَقَالَتْ مَا بِي رَغْبَةٌ عَنْ دِينِكُمَا فَإِنِّي
قَدْ أَسْلَمْتُ وَصَدَّقْتُ ‏.‏ فَاحْتَمَلْنَا حَتَّى أَتَيْنَا قَوْمَنَا غِفَارًا فَأَسْلَمَ نِصْفُهُمْ وَكَانَ يَؤُمُّهُمْ إِيمَاءُ
بْنُ رَحَضَةَ الْغِفَارِيُّ وَكَانَ سَيِّدَهُمْ ‏.‏ وَقَالَ نِصْفُهُمْ إِذَا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
الْمَدِينَةَ أَسْلَمْنَا ‏.‏ فَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَأَسْلَمَ نِصْفُهُمُ الْبَاقِي وَجَاءَتْ
أَسْلَمُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِخْوَتُنَا نُسْلِمُ عَلَى الَّذِي أَسْلَمُوا عَلَيْهِ ‏.‏ فَأَسْلَمُوا فَقَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ ‏"‏ ‏.‏
அப்துல்லாஹ் பின் அஸ்-ஸாமித் (ரஹ்) அவர்கள், அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

புனித மாதங்களின் புனிதம் பேணாத (அவற்றை ஆகுமாக்கிக் கொள்ளும்) எங்கள் ஃகிஃபார் கூட்டத்தாரிலிருந்து நாங்கள் வெளியேறினோம். நானும், என் சகோதரர் உனைஸும், எங்கள் தாயாரும் வெளியேறி எங்களுக்குரிய தாய்மாமன் ஒருவரிடம் சென்று தங்கினோம். அந்தத் தாய்மாமன் எங்களை கண்ணியப்படுத்தினார்; எங்களுக்கு உபகாரம் செய்தார். இதைக் கண்ட அவருடைய கூட்டத்தார் எங்கள் மீது பொறாமை கொண்டனர். அவர்கள் (எங்கள் மாமாவிடம்), "நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு வெளியே சென்றால், உனைஸ் அவர்களுக்கு மத்தியில் (தவறான நோக்கில்) செல்கிறார்" என்று கூறினார்கள். எங்கள் தாய்மாமன் வந்து தன்னிடம் சொல்லப்பட்டதை எங்களிடம் எடுத்துரைத்தார். நான் அவரிடம், "நீங்கள் (முன்பு) செய்த நன்மையை (இச்சொல்லின் மூலம்) பாழாக்கிவிட்டீர்கள்; இனி உங்களோடு நாங்கள் ஒன்றாக இருக்க முடியாது" என்று கூறினேன்.

நாங்கள் எங்கள் ஒட்டகங்களை நெருங்கி, (எங்கள்) சாமான்களை அவற்றின் மீது ஏற்றினோம். எங்கள் தாய்மாமன் ஆடையால் தன்னை மூடிக்கொண்டு அழலானார். நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு மக்காவிற்கு அருகே வந்து இறங்கினோம். (அங்கே) உனைஸ் எங்கள் ஒட்டகங்கள் மீதும், அதே அளவுள்ள (வேறு ஒட்டகங்கள்) மீதும் பந்தயம் வைத்து (குறிசொல்லும்) ஒருவரிடம் சென்றார். அவர் உனைஸை வெற்றி பெறச் செய்தார். உனைஸ் எங்கள் ஒட்டகங்களையும், அதனோடு அதே அளவுள்ள (வெற்றி பெற்ற) ஒட்டகங்களையும் கொண்டு வந்தார்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் சகோதரரின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொழுது வந்தேன்." நான், "யாருக்காக (தொழுதீர்கள்)?" என்று கேட்டேன். அவர்கள், "அல்லாஹ்விற்காக" என்றார்கள். "எந்தத் திசையை முன்னோக்கித் தொழுதீர்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், "என் இறைவன் என்னைத் திருப்பிய திசையை முன்னோக்கித் தொழுவேன். இரவின் இறுதியில் நான் ஓர் ஆடையைப் போன்று (தரையில்) வீசப்படும் வரை (அயர்ந்து விழும் வரை) இஷா (இரவுத்) தொழுகையைத் தொழுவேன். சூரியன் என் மீது உதிக்கும் வரை (இப்படியே கிடப்பேன்)" என்று கூறினார்கள்.

உனைஸ் (என்னிடம்), "எனக்கு மக்காவில் ஒரு தேவையுள்ளது. (நான் திரும்பும் வரை) எனக்குப் பகரமாக நீர் பார்த்துக் கொள்வீராக!" என்று கூறிவிட்டு மக்காவிற்குச் சென்றார். அவர் என்னிடம் திரும்ப தாமதமானது. பிறகு அவர் வந்ததும், "என்ன செய்தீர்?" என்று கேட்டேன். அவர், "மக்காவில் உம்முடைய மார்க்கத்தில் உள்ள ஒருவரைச் சந்தித்தேன்; அல்லாஹ் தன்னைத் தூதராக அனுப்பியிருப்பதாக அவர் வாதிடுகிறார்" என்று கூறினார். "மக்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கவர், "அவர்கள் (அவரை) கவிஞர், குறிசொல்பவர், சூனியக்காரர் என்றெல்லாம் சொல்கிறார்கள்" என்றார். உனைஸ் கவிஞர்களில் ஒருவராக இருந்தார். உனைஸ் கூறினார்: "நான் குறிசொல்பவர்களின் சொல்லைக் கேட்டுள்ளேன்; ஆனால் இவர் சொல்வது அவர்களுடைய சொல் போன்றில்லை. இவருடைய சொல்லை கவிதை வகைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். எனக்குப் பின் யாரும் இதை கவிதை என்று சொல்லாத அளவுக்கு (அது கவிதையிலிருந்து வேறுபட்டிருக்கிறது). அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் உண்மையாளர்; அவர்கள் (மக்கள்) பொய்யர்கள்."

நான், "நான் சென்று அவரைப் பார்க்கும் வரை எனக்குப் பகரமாக (இவற்றை) நீர் பார்த்துக் கொள்வீராக" என்று கூறிவிட்டு மக்காவிற்கு வந்தேன். அவர்களில் பலவீனமான ஒருவரைக் கண்டறிந்து, "நீங்கள் 'ஸாபி' (மதம் மாறியவர்) என்று அழைக்கிறாரே அவர் எங்கே?" என்று கேட்டேன். அவர் என்னைச் சுட்டிக்காட்டி, "இதோ ஸாபி!" என்று கூறினார். உடனே பள்ளத்தாக்கின் மக்கள் மண்கட்டிகளாலும், எலும்புகளாலும் என் மீது பாய்ந்தார்கள். நான் மயங்கி விழுந்தேன். நான் எழுந்தபோது, (இரத்தம் வழிந்ததால்) சிவந்த சிலையைப்போல் இருந்தேன். நான் ஜம்ஜம் கிணற்றுக்கு வந்து என் இரத்தத்தைக் கழுவி, அந்நீரைக் குடித்தேன். என் சகோதரரின் மகனே! முப்பது நாட்கள் (அல்லது நாட்கள் இரவுகள்) அங்கே தங்கினேன். ஜம்ஜம் நீரைத் தவிர எனக்கு வேறு உணவு இருக்கவில்லை. என் வயிற்றுச் சதை மடிப்புகள் விழும் அளவுக்கு நான் பருமனானேன். என் ஈரலில் பசியின் சோர்வை நான் காணவில்லை.

ஒரு நிலவுள்ள இரவில் மக்காவாசிகள் (தூங்கிக் கொண்டிருந்ததால்) கஅபாவைச் சுற்றி வருபவர் எவருமில்லை. அப்போது அவர்களிலுள்ள இரண்டு பெண்கள் 'இஸாஃப்', 'நாயிலா' (எனும் இரு சிலைகளை) அழைத்துப் பிரார்த்தித்தவாறு வந்தனர். அவர்கள் தவாஃப் செய்து கொண்டு என்னிடம் வந்தபோது, "அவ்விரண்டில் ஒன்றை மற்றொன்றோடு திருமணம் செய்து வையுங்கள்" என்று (கேலியாகக்) கூறினேன். அவர்கள் தங்கள் பேச்சை நிறுத்தவில்லை. மீண்டும் என்னிடம் வந்தபோது, "மரக்கட்டை போன்றது தான் (அதுவும்)..." என்று சொல்லி, நான் மறைமுகமாக அல்லாமல், வெளிப்படையாகவே (அச்சிலைகளின் மர்ம உறுப்பில் மரக்கட்டையைச் செருகுமாறு) வசைபாடினேன். அப்பெண்கள், "நம்மவர்களில் யாரேனும் இங்கே இருந்திருக்கக் கூடாதா?" என்று அலறியவாறு சென்றனர்.

அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் மலையிலிருந்து இறங்கி வரும்போது சந்தித்தனர். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் இருவருக்கும் என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அவர்கள், "கஅபாவிற்கும் அதன் திரைக்கும் இடையில் ஒரு மதமாறி (ஸாபி) இருக்கிறான்" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவன் உங்களிடம் என்ன சொன்னான்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவன் எங்களிடம் வாய்விட்டுச் சொல்ல முடியாத (கேவலமான) ஒரு வார்த்தையைச் சொன்னான்" என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு, தம் தோழருடன் கஅபாவைச் சுற்றி வந்து (தவாஃப் செய்து) தொழுதார்கள். தொழுகையை முடித்ததும் (அபூதர் ஆகிய) நான் தான் இஸ்லாமிய முறைப்படி முகமன் (சலாம்) கூறிய முதல் நபராவேன். "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் (அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்)" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் உண்டாகட்டும் (வ அலைக்க வ ரஹ்மத்துல்லாஹ்). நீர் யார்?" என்று கேட்டார்கள். "நான் ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்தவன்" என்றேன். உடனே அவர்கள் தம் கையைத் தூக்கி தம் விரல்களை நெற்றியில் வைத்தார்கள். "நான் ஃகிஃபார் குலத்தைச் சார்ந்தவன் என்பதை அவர்கள் விரும்பவில்லையோ" என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். நான் அவர்களின் கையைப் பிடிக்கச் சென்றேன். அவர்களைப் பற்றி என்னை விட நன்கு அறிந்த அவர்களின் தோழர் (அபூபக்கர்) என்னைத் தடுத்தார். பிறகு நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, "எவ்வளவு காலமாக இங்கே இருக்கிறீர்?" என்று கேட்டார்கள். "முப்பது இரவும் பகலும் இங்கே இருக்கிறேன்" என்றேன். "உமக்கு உணவளித்தவர் யார்?" என்று கேட்டார்கள். நான், "ஜம்ஜம் நீரைத் தவிர எனக்கு வேறு உணவு இல்லை; என் வயிற்றுச் சதை மடிப்புகள் விழும் அளவுக்கு நான் பருமனாகிவிட்டேன்; என் ஈரலில் பசியின் சோர்வை நான் காணவில்லை" என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அது பாக்கியம் நிறைந்தது; அது பசியாற்றும் உணவாகும்" என்று கூறினார்கள்.

அப்போது அபூபக்கர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! இன்றிரவு அவருக்கு உணவளிக்க எனக்கு அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் புறப்பட, நானும் அவர்களுடன் சென்றேன். அபூபக்கர் (ரலி) ஒரு கதவைத் திறந்து, தாயிஃப் நகர உலர்திராட்சைகளை எங்களுக்காக அள்ளிப் போட்டார்கள். அதுதான் நான் அங்கே உண்ட முதல் உணவாகும். பிறகு நான் தங்க வேண்டிய காலம் வரை அங்கே தங்கினேன்.

பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், "பேரீச்ச மரங்கள் உள்ள ஒரு பூமி எனக்கு (ஹிஜ்ரத் தளமாக) உணர்த்தப்பட்டுள்ளது. அது 'யஸ்ரிப்' (மதீனா) ஆகத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். நீர் என் சார்பாக உம் கூட்டத்தாரிடம் (இச்செய்தியை) எத்திவைப்பீரா? உம்மைக் கொண்டு அல்லாஹ் அவர்களுக்கு பயனளிக்கலாம்; அதற்காக உமக்குக் கூலி வழங்கலாம்" என்று கூறினார்கள்.

நான் உனைஸிடம் வந்தேன். அவர், "என்ன செய்தீர்?" என்று கேட்டார். "நான் இஸ்லாத்தைத் தழுவி, (நபிமொழியை) உண்மைப்படுத்தினேன்" என்று கூறினேன். அதற்கு அவர், "உம்முடைய மார்க்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை; நானும் இஸ்லாத்தைத் தழுவி, உண்மைப்படுத்துகிறேன்" என்றார். பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் வந்தோம். அவரும், "உங்கள் இருவரின் மார்க்கத்தின் மீதும் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை; நானும் இஸ்லாத்தைத் தழுவி, உண்மைப்படுத்துகிறேன்" என்று கூறினார்.

பிறகு நாங்கள் (எங்கள் உடமைகளை) ஏற்றிக்கொண்டு எங்கள் ஃகிஃபார் கூட்டத்தாரிடம் வந்தோம். அவர்களில் பாதிப் பேர் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களின் தலைவர் ஈமாஉ பின் ரஹளா அல்-ஃகிஃபாரி அவர்களுக்குத் தலைமை தாங்கினார். மீதமுள்ள பாதிப் பேர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மீதமுள்ள பாதிப் பேரும் இஸ்லாத்தைத் தழுவினர். மேலும் அஸ்லம் கூட்டத்தினர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரர்கள் (ஃகிஃபார் குலத்தினர்) இஸ்லாத்தை ஏற்றது போல் நாங்களும் ஏற்கிறோம்" என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: "ஃகிஃபார் (குலத்தார்) - அவர்களுக்கு அல்லாஹ் பிழை பொறுப்பானாக (மன்னிப்பானாக)! அஸ்லம் (குலத்தார்) - அவர்களை அல்லாஹ் ஈடேற்றுவானாக (சாந்தியை அளிப்பானாக)!" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2769 a, bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ مَوْلَى بَنِي
أُمَيَّةَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ثُمَّ غَزَا رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم غَزْوَةَ تَبُوكَ وَهُوَ يُرِيدُ الرُّومَ وَنَصَارَى الْعَرَبِ بِالشَّامِ ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي
عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ كَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ
حِينَ عَمِيَ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ قَالَ كَعْبُ بْنُ مَالِكٍ لَمْ أَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا قَطُّ إِلاَّ فِي غَزْوَةِ تَبُوكَ غَيْرَ أَنِّي قَدْ تَخَلَّفْتُ فِي غَزْوَةِ بَدْرٍ وَلَمْ
يُعَاتِبْ أَحَدًا تَخَلَّفَ عَنْهُ إِنَّمَا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ يُرِيدُونَ
عِيرَ قُرَيْشٍ حَتَّى جَمَعَ اللَّهُ بَيْنَهُمْ وَبَيْنَ عَدُوِّهُمْ عَلَى غَيْرِ مِيعَادٍ وَلَقَدْ شَهِدْتُ مَعَ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْعَقَبَةِ حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلاَمِ وَمَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشْهَدَ
بَدْرٍ وَإِنْ كَانَتْ بَدْرٌ أَذْكَرَ فِي النَّاسِ مِنْهَا وَكَانَ مِنْ خَبَرِي حِينَ تَخَلَّفْتُ عَنْ رَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ أَنِّي لَمْ أَكُنْ قَطُّ أَقْوَى وَلاَ أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ
عَنْهُ فِي تِلْكَ الْغَزْوَةِ وَاللَّهِ مَا جَمَعْتُ قَبْلَهَا رَاحِلَتَيْنِ قَطُّ حَتَّى جَمَعْتُهُمَا فِي تِلْكَ الْغَزْوَةِ
فَغَزَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَرٍّ شَدِيدٍ وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيدًا وَمَفَازًا وَاسْتَقْبَلَ
عَدُوًّا كَثِيرًا فَجَلاَ لِلْمُسْلِمِينَ أَمْرَهُمْ لِيَتَأَهَّبُوا أُهْبَةَ غَزْوِهِمْ فَأَخْبَرَهُمْ بِوَجْهِهِمُ الَّذِي يُرِيدُ
وَالْمُسْلِمُونَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَثِيرٌ وَلاَ يَجْمَعُهُمْ كِتَابُ حَافِظٍ - يُرِيدُ
بِذَلِكَ الدِّيوَانَ - قَالَ كَعْبٌ فَقَلَّ رَجُلٌ يُرِيدُ أَنْ يَتَغَيَّبَ يَظُنُّ أَنَّ ذَلِكَ سَيَخْفَى لَهُ مَا لَمْ يَنْزِلْ
فِيهِ وَحْىٌ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَغَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تِلْكَ الْغَزْوَةَ حِينَ طَابَتِ
الثِّمَارُ وَالظِّلاَلُ فَأَنَا إِلَيْهَا أَصْعَرُ فَتَجَهَّزَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ مَعَهُ
وَطَفِقْتُ أَغْدُو لِكَىْ أَتَجَهَّزَ مَعَهُمْ فَأَرْجِعُ وَلَمْ أَقْضِ شَيْئًا ‏.‏ وَأَقُولُ فِي نَفْسِي أَنَا قَادِرٌ
عَلَى ذَلِكَ إِذَا أَرَدْتُ ‏.‏ فَلَمْ يَزَلْ ذَلِكَ يَتَمَادَى بِي حَتَّى اسْتَمَرَّ بِالنَّاسِ الْجِدُّ فَأَصْبَحَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم غَادِيًا وَالْمُسْلِمُونَ مَعَهُ وَلَمْ أَقْضِ مِنْ جَهَازِي شَيْئًا ثُمَّ غَدَوْتُ
فَرَجَعْتُ وَلَمْ أَقْضِ شَيْئًا فَلَمْ يَزَلْ ذَلِكَ يَتَمَادَى بِي حَتَّى أَسْرَعُوا وَتَفَارَطَ الْغَزْوُ فَهَمَمْتُ
أَنْ أَرْتَحِلَ فَأُدْرِكَهُمْ فَيَا لَيْتَنِي فَعَلْتُ ثُمَّ لَمْ يُقَدَّرْ ذَلِكَ لِي فَطَفِقْتُ إِذَا خَرَجْتُ فِي النَّاسِ
بَعْدَ خُرُوجِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَحْزُنُنِي أَنِّي لاَ أَرَى لِي أُسْوَةً إِلاَّ رَجُلاً مَغْمُوصًا
عَلَيْهِ فِي النِّفَاقِ أَوْ رَجُلاً مِمَّنْ عَذَرَ اللَّهُ مِنَ الضُّعَفَاءِ وَلَمْ يَذْكُرْنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم حَتَّى بَلَغَ تَبُوكًا فَقَالَ وَهُوَ جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوكَ ‏"‏ مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ ‏"‏ ‏.‏
قَالَ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ يَا رَسُولَ اللَّهِ حَبَسَهُ بُرْدَاهُ وَالنَّظَرُ فِي عِطْفَيْهِ ‏.‏ فَقَالَ لَهُ مُعَاذُ
بْنُ جَبَلٍ بِئْسَ مَا قُلْتَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ إِلاَّ خَيْرًا ‏.‏ فَسَكَتَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم فَبَيْنَمَا هُوَ عَلَى ذَلِكَ رَأَى رَجُلاً مُبَيِّضًا يَزُولُ بِهِ السَّرَابُ فَقَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ كُنْ أَبَا خَيْثَمَةَ ‏"‏ ‏.‏ فَإِذَا هُو أَبُو خَيْثَمَةَ الأَنْصَارِيُّ وَهُوَ الَّذِي
تَصَدَّقَ بِصَاعِ التَّمْرِ حِينَ لَمَزَهُ الْمُنَافِقُونَ ‏.‏ فَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ فَلَمَّا بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم قَدْ تَوَجَّهَ قَافِلاً مِنْ تَبُوكَ حَضَرَنِي بَثِّي فَطَفِقْتُ أَتَذَكَّرُ الْكَذِبَ وَأَقُولُ
بِمَ أَخْرُجُ مِنْ سَخَطِهِ غَدًا وَأَسْتَعِينُ عَلَى ذَلِكَ كُلَّ ذِي رَأْىٍ مِنْ أَهْلِي فَلَمَّا قِيلَ لِي إِنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَظَلَّ قَادِمًا زَاحَ عَنِّي الْبَاطِلُ حَتَّى عَرَفْتُ أَنِّي لَنْ أَنْجُوَ مِنْهُ
بِشَىْءٍ أَبَدًا فَأَجْمَعْتُ صِدْقَهُ وَصَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَادِمًا وَكَانَ إِذَا قَدِمَ
مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ لِلنَّاسِ فَلَمَّا فَعَلَ ذَلِكَ جَاءَهُ الْمُخَلَّفُونَ
فَطَفِقُوا يَعْتَذِرُونَ إِلَيْهِ وَيَحْلِفُونَ لَهُ وَكَانُوا بِضْعَةً وَثَمَانِينَ رَجُلاً فَقَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم عَلاَنِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ حَتَّى جِئْتُ فَلَمَّا
سَلَّمْتُ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ ثُمَّ قَالَ ‏"‏ تَعَالَ ‏"‏ ‏.‏ فَجِئْتُ أَمْشِي حَتَّى جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ فَقَالَ
لِي ‏"‏ مَا خَلَّفَكَ ‏"‏ ‏.‏ أَلَمْ تَكُنْ قَدِ ابْتَعْتَ ظَهْرَكَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَوْ
جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أَهْلِ الدُّنْيَا لَرَأَيْتُ أَنِّي سَأَخْرُجُ مِنْ سَخَطِهِ بِعُذْرٍ وَلَقَدْ أُعْطِيتُ جَدَلاً
وَلَكِنِّي وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذِبٍ تَرْضَى بِهِ عَنِّي لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يُسْخِطَكَ
عَلَىَّ وَلَئِنْ حَدَّثْتُكَ حَدِيثَ صِدْقٍ تَجِدُ عَلَىَّ فِيهِ إِنِّي لأَرْجُو فِيهِ عُقْبَى اللَّهِ وَاللَّهِ مَا كَانَ لِي
عُذْرٌ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلاَ أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ عَنْكَ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم ‏"‏ أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ ‏"‏ ‏.‏ فَقُمْتُ وَثَارَ رِجَالٌ مِنْ بَنِي
سَلِمَةَ فَاتَّبَعُونِي فَقَالُوا لِي وَاللَّهِ مَا عَلِمْنَاكَ أَذْنَبْتَ ذَنْبًا قَبْلَ هَذَا لَقَدْ عَجَزْتَ فِي أَنْ لاَ
تَكُونَ اعْتَذَرْتَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا اعْتَذَرَ بِهِ إِلَيْهِ الْمُخَلَّفُونَ فَقَدْ كَانَ
كَافِيَكَ ذَنْبَكَ اسْتِغْفَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَكَ ‏.‏ قَالَ فَوَاللَّهِ مَا زَالُوا يُؤَنِّبُونَنِي
حَتَّى أَرَدْتُ أَنْ أَرْجِعَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأُكَذِّبَ نَفْسِي - قَالَ - ثُمَّ
قُلْتُ لَهُمْ هَلْ لَقِيَ هَذَا مَعِي مِنْ أَحَدٍ قَالُوا نَعَمْ لَقِيَهُ مَعَكَ رَجُلاَنِ قَالاَ مِثْلَ مَا قُلْتَ فَقِيلَ
لَهُمَا مِثْلُ مَا قِيلَ لَكَ - قَالَ - قُلْتُ مَنْ هُمَا قَالُوا مُرَارَةُ بْنُ رَبِيعَةَ الْعَامِرِيُّ وَهِلاَلُ بْنُ
أُمَيَّةَ الْوَاقِفِيُّ - قَالَ - فَذَكَرُوا لِي رَجُلَيْنِ صَالِحَيْنِ قَدْ شِهِدَا بَدْرًا فِيهِمَا أُسْوَةٌ - قَالَ
- فَمَضَيْتُ حِينَ ذَكَرُوهُمَا لِي ‏.‏ قَالَ وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمِينَ عَنْ
كَلاَمِنَا أَيُّهَا الثَّلاَثَةُ مِنْ بَيْنِ مَنْ تَخَلَّفَ عَنْهُ - قَالَ - فَاجْتَنَبَنَا النَّاسُ - وَقَالَ - تَغَيَّرُوا
لَنَا حَتَّى تَنَكَّرَتْ لِي فِي نَفْسِيَ الأَرْضُ فَمَا هِيَ بِالأَرْضِ الَّتِي أَعْرِفُ فَلَبِثْنَا عَلَى ذَلِكَ خَمْسِينَ
لَيْلَةً فَأَمَّا صَاحِبَاىَ فَاسْتَكَانَا وَقَعَدَا فِي بُيُوتِهِمَا يَبْكِيَانِ وَأَمَّا أَنَا فَكُنْتُ أَشَبَّ الْقَوْمِ وَأَجْلَدَهُمْ
فَكُنْتُ أَخْرُجُ فَأَشْهَدُ الصَّلاَةَ وَأَطُوفُ فِي الأَسْوَاقِ وَلاَ يُكَلِّمُنِي أَحَدٌ وَآتِي رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم فَأُسَلِّمُ عَلَيْهِ وَهُوَ فِي مَجْلِسِهِ بَعْدَ الصَّلاَةِ فَأَقُولُ فِي نَفْسِي هَلْ حَرَّكَ شَفَتَيْهِ
بِرَدِّ السَّلاَمِ أَمْ لاَ ثُمَّ أُصَلِّي قَرِيبًا مِنْهُ وَأُسَارِقُهُ النَّظَرَ فَإِذَا أَقْبَلْتُ عَلَى صَلاَتِي نَظَرَ إِلَىَّ
وَإِذَا الْتَفَتُّ نَحْوَهُ أَعْرَضَ عَنِّي حَتَّى إِذَا طَالَ ذَلِكَ عَلَىَّ مِنْ جَفْوَةِ الْمُسْلِمِينَ مَشَيْتُ حَتَّى
تَسَوَّرْتُ جِدَارَ حَائِطِ أَبِي قَتَادَةَ وَهُوَ ابْنُ عَمِّي وَأَحَبُّ النَّاسِ إِلَىَّ فَسَلَّمْتُ عَلَيْهِ فَوَاللَّهِ
مَا رَدَّ عَلَىَّ السَّلاَمَ فَقُلْتُ لَهُ يَا أَبَا قَتَادَةَ أَنْشُدُكَ بِاللَّهِ هَلْ تَعْلَمَنَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ
قَالَ فَسَكَتَ فَعُدْتُ فَنَاشَدْتُهُ فَسَكَتَ فَعُدْتُ فَنَاشَدْتُهُ فَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ فَفَاضَتْ
عَيْنَاىَ وَتَوَلَّيْتُ حَتَّى تَسَوَّرْتُ الْجِدَارَ فَبَيْنَا أَنَا أَمْشِي فِي سُوقِ الْمَدِينَةِ إِذَا نَبَطِيٌّ مِنْ نَبَطِ
أَهْلِ الشَّامِ مِمَّنْ قَدِمَ بِالطَّعَامِ يَبِيعُهُ بِالْمَدِينَةِ يَقُولُ مَنْ يَدُلُّ عَلَى كَعْبِ بْنِ مَالِكٍ - قَالَ
- فَطَفِقَ النَّاسُ يُشِيرُونَ لَهُ إِلَىَّ حَتَّى جَاءَنِي فَدَفَعَ إِلَىَّ كِتَابًا مِنْ مَلِكِ غَسَّانَ وَكُنْتُ كَاتِبًا
فَقَرَأْتُهُ فَإِذَا فِيهِ أَمَّا بَعْدُ فَإِنَّهُ قَدْ بَلَغَنَا أَنَّ صَاحِبَكَ قَدْ جَفَاكَ وَلَمْ يَجْعَلْكَ اللَّهُ بِدَارِ هَوَانٍ
وَلاَ مَضْيَعَةٍ فَالْحَقْ بِنَا نُوَاسِكَ ‏.‏ قَالَ فَقُلْتُ حِينَ قَرَأْتُهَا وَهَذِهِ أَيْضًا مِنَ الْبَلاَءِ ‏.‏ فَتَيَامَمْتُ
بِهَا التَّنُّورَ فَسَجَرْتُهَا بِهَا حَتَّى إِذَا مَضَتْ أَرْبَعُونَ مِنَ الْخَمْسِينَ وَاسْتَلْبَثَ الْوَحْىُ إِذَا رَسُولُ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِينِي فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُكَ
أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ ‏.‏ قَالَ فَقُلْتُ أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ لاَ بَلِ اعْتَزِلْهَا فَلاَ تَقْرَبَنَّهَا -
قَالَ - فَأَرْسَلَ إِلَى صَاحِبَىَّ بِمِثْلِ ذَلِكَ - قَالَ - فَقُلْتُ لاِمْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي عِنْدَهُمْ
حَتَّى يَقْضِيَ اللَّهُ فِي هَذَا الأَمْرِ - قَالَ - فَجَاءَتِ امْرَأَةُ هِلاَلِ بْنِ أُمَيَّةَ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ شَيْخٌ ضَائِعٌ لَيْسَ لَهُ خَادِمٌ فَهَلْ
تَكْرَهُ أَنْ أَخْدُمَهُ قَالَ ‏"‏ لاَ وَلَكِنْ لاَ يَقْرَبَنَّكِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ إِنَّهُ وَاللَّهِ مَا بِهِ حَرَكَةٌ إِلَى شَىْءٍ وَوَاللَّهِ
مَا زَالَ يَبْكِي مُنْذُ كَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ إِلَى يَوْمِهِ هَذَا ‏.‏ قَالَ فَقَالَ لِي بَعْضُ أَهْلِي لَوِ اسْتَأْذَنْتَ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي امْرَأَتِكَ فَقَدْ أَذِنَ لاِمْرَأَةِ هِلاَلِ بْنِ أُمَيَّةَ أَنْ تَخْدُمَهُ -
قَالَ - فَقُلْتُ لاَ أَسْتَأْذِنُ فِيهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا يُدْرِينِي مَاذَا يَقُولُ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اسْتَأْذَنْتُهُ فِيهَا وَأَنَا رَجُلٌ شَابٌّ - قَالَ - فَلَبِثْتُ
بِذَلِكَ عَشْرَ لَيَالٍ فَكَمُلَ لَنَا خَمْسُونَ لَيْلَةً مِنْ حِينَ نُهِيَ عَنْ كَلاَمِنَا - قَالَ - ثُمَّ صَلَّيْتُ صَلاَةَ
الْفَجْرِ صَبَاحَ خَمْسِينَ لَيْلَةً عَلَى ظَهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا فَبَيْنَا أَنَا جَالِسٌ عَلَى الْحَالِ الَّتِي
ذَكَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَّا قَدْ ضَاقَتْ عَلَىَّ نَفْسِي وَضَاقَتْ عَلَىَّ الأَرْضُ بِمَا رَحُبَتْ سَمِعْتُ
صَوْتَ صَارِخٍ أَوْفَى عَلَى سَلْعٍ يَقُولُ بِأَعْلَى صَوْتِهِ يَا كَعْبَ بْنَ مَالِكٍ أَبْشِرْ - قَالَ - فَخَرَرْتُ
سَاجِدًا وَعَرَفْتُ أَنْ قَدْ جَاءَ فَرَجٌ ‏.‏ - قَالَ - فَآذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ
بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا حِينَ صَلَّى صَلاَةَ الْفَجْرِ فَذَهَبَ النَّاسُ يُبَشِّرُونَنَا فَذَهَبَ قِبَلَ صَاحِبَىَّ مُبَشِّرُونَ
وَرَكَضَ رَجُلٌ إِلَىَّ فَرَسًا وَسَعَى سَاعٍ مِنْ أَسْلَمَ قِبَلِي وَأَوْفَى الْجَبَلَ فَكَانَ الصَّوْتُ أَسْرَعَ
مِنَ الْفَرَسِ فَلَمَّا جَاءَنِي الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي فَنَزَعْتُ لَهُ ثَوْبَىَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ
بِبِشَارَتِهِ وَاللَّهِ مَا أَمْلِكُ غَيْرَهُمَا يَوْمَئِذٍ وَاسْتَعَرْتُ ثَوْبَيْنِ ‏.‏ فَلَبِسْتُهُمَا فَانْطَلَقْتُ أَتَأَمَّمُ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم يَتَلَقَّانِي النَّاسُ فَوْجًا فَوْجًا يُهَنِّئُونِي بِالتَّوْبَةِ وَيَقُولُونَ لِتَهْنِئْكَ
تَوْبَةُ اللَّهِ عَلَيْكَ ‏.‏ حَتَّى دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ فِي
الْمَسْجِدِ وَحَوْلَهُ النَّاسُ فَقَامَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي وَاللَّهِ مَا
قَامَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ غَيْرُهُ ‏.‏ قَالَ فَكَانَ كَعْبٌ لاَ يَنْسَاهَا لِطَلْحَةَ ‏.‏ قَالَ كَعْبٌ فَلَمَّا سَلَّمْتُ
عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُورِ وَيَقُولُ ‏"‏ أَبْشِرْ
بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ أَمِنْ عِنْدِكَ يَا رَسُولَ اللَّهِ أَمْ مِنْ عِنْدِ
اللَّهِ فَقَالَ ‏"‏ لاَ بَلْ مِنْ عِنْدِ اللَّهِ ‏"‏ ‏.‏ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سُرَّ اسْتَنَارَ
وَجْهُهُ كَأَنَّ وَجْهَهُ قِطْعَةُ قَمَرٍ - قَالَ - وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ - قَالَ - فَلَمَّا جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صلى
الله عليه وسلم ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمْسِكْ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ
لَكَ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِيَ الَّذِي بِخَيْبَرَ - قَالَ - وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ
إِنَّمَا أَنْجَانِي بِالصِّدْقِ وَإِنَّ مِنْ تَوْبَتِي أَنْ لاَ أُحَدِّثَ إِلاَّ صِدْقًا مَا بَقِيتُ - قَالَ - فَوَاللَّهِ
مَا عَلِمْتُ أَنَّ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ أَبْلاَهُ اللَّهُ فِي صِدْقِ الْحَدِيثِ مُنْذُ ذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم إِلَى يَوْمِي هَذَا أَحْسَنَ مِمَّا أَبْلاَنِي اللَّهُ بِهِ وَاللَّهِ مَا تَعَمَّدْتُ كَذْبَةً مُنْذُ
قُلْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى يَوْمِي هَذَا وَإِنِّي لأَرْجُو أَنْ يَحْفَظَنِيَ اللَّهُ
فِيمَا بَقِيَ ‏.‏ قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ
الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ
إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ * وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الأَرْضُ بِمَا رَحُبَتْ
وَضَاقَتْ عَلَيْهِمْ أَنْفُسُهُمْ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ‏}‏
قَالَ كَعْبٌ وَاللَّهِ مَا أَنْعَمَ اللَّهُ عَلَىَّ مِنْ نِعْمَةٍ قَطُّ بَعْدَ إِذْ هَدَانِي اللَّهُ لِلإِسْلاَمِ أَعْظَمَ فِي نَفْسِي
مِنْ صِدْقِي رَسُولَ اللَّهُ صلى الله عليه وسلم أَنْ لاَ أَكُونَ كَذَبْتُهُ فَأَهْلِكَ كَمَا هَلَكَ الَّذِينَ كَذَبُوا
إِنَّ اللَّهَ قَالَ لِلَّذِينَ كَذَبُوا حِينَ أَنْزَلَ الْوَحْىَ شَرَّ مَا قَالَ لأَحَدٍ وَقَالَ اللَّهُ ‏{‏ سَيَحْلِفُونَ بِاللَّهِ
لَكُمْ إِذَا انْقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا عَنْهُمْ فَأَعْرِضُوا عَنْهُمْ إِنَّهُمْ رِجْسٌ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جَزَاءً
بِمَا كَانُوا يَكْسِبُونَ * يَحْلِفُونَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ فَإِنْ تَرْضَوْا عَنْهُمْ فَإِنَّ اللَّهَ لاَ يَرْضَى عَنِ
الْقَوْمِ الْفَاسِقِينَ‏}‏ قَالَ كَعْبٌ كُنَّا خُلِّفْنَا أَيُّهَا الثَّلاَثَةُ عَنْ أَمْرِ أُولَئِكَ الَّذِينَ قَبِلَ مِنْهُمْ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم حِينَ حَلَفُوا لَهُ فَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَأَرْجَأَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم أَمْرَنَا حَتَّى قَضَى اللَّهُ فِيهِ فَبِذَلِكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ
خُلِّفُوا‏}‏ وَلَيْسَ الَّذِي ذَكَرَ اللَّهُ مِمَّا خُلِّفْنَا تَخَلُّفَنَا عَنِ الْغَزْوِ وَإِنَّمَا هُوَ تَخْلِيفُهُ إِيَّانَا وَإِرْجَاؤُهُ
أَمْرَنَا عَمَّنْ حَلَفَ لَهُ وَاعْتَذَرَ إِلَيْهِ فَقَبِلَ مِنْهُ ‏.‏

وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ
ابْنِ شِهَابٍ، بِإِسْنَادِ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ، سَوَاءً ‏.‏
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட எந்தவொரு போரிலிருந்தும் பின்தங்கியதில்லை; தபூக் போரையும் பத்ருப் போரையும் தவிர. பத்ருப் போரைப் பொறுத்தவரை, அதில் கலந்து கொள்ளாத யாரும் பழிக்கப்படவில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் (போரிடுவதற்காக அல்லாமல்) குறைஷிகளின் வர்த்தகக் கூட்டத்தை வழிமறிக்கவே புறப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களுடைய எதிரிகளுக்கும் இடையே முன்னரே திட்டமிடாமல் ஒரு சந்திப்பை (போரை) ஏற்படுத்திவிட்டான்.

நான் ‘அகபா’ இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது நாங்கள் இஸ்லாத்திற்காக (உறுதிமொழி) ஒப்பந்தம் செய்தோம். பத்ருப் போர் மக்களிடையே (அகபாவை விட) பிரபலம் என்றாலும், பத்ருப் போரில் நான் கலந்து கொள்வதை விட அகபாவில் கலந்துகொண்டதையே நான் அதிகம் விரும்புகிறேன்.

தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டு நான் பின்தங்கிய என் கதை இதுதான்:
அந்தப் போரின் போது இருந்த உடல் வலிமையும் வசதியும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்கு முன் என்னிடம் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் (ஒட்டகங்கள்) இருந்ததில்லை; ஆனால் இப்போருக்காக இரண்டு வாகனங்களைச் சேகரித்து வைத்திருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான வெப்பத்தில் இப்பயணத்தை மேற்கொண்டார்கள். இப்பயணம் வெகுதொலைவானதாகவும், பாலைவனத்தைக் கடக்க வேண்டியதாகவும் இருந்தது. மேலும், (ரோமர்கள் என்ற) பெரும் எதிரிப் படையைச் சந்திக்க வேண்டியிருந்ததால், முஸ்லிம்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக, தாம் எங்கே செல்கிறோம் என்ற விவரத்தை அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏராளமான முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களுடைய பெயர்களை எந்தப் பதிவேடும் உள்ளடக்கியிருக்கவில்லை.

கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: எனவே, ஒரு மனிதர் (போருக்கு வராமல்) மறைந்து கொள்ள நினைத்தால், அல்லாஹ்விடமிருந்து வஹீ (இறைச்செய்தி) வராத வரை, தான் வராமல் இருப்பது நபியவர்களுக்குத் தெரியாது என்று எண்ணிக் கொள்ள முடியும். கனிகள் பழுத்து, மரநிழல்கள் அடர்ந்திருந்த (சுகமான) காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்போருக்குப் புறப்பட்டார்கள். எனக்கு அவற்றின் மீது அதிக விருப்பம் இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்வதற்காகக் காலையில் புறப்படுவேன்; ஆனால், எதையும் முடிக்காமல் திரும்பி வருவேன். "நான் விரும்பினால் எளிதாகத் தயாராகிவிடுவேன்" என்று என் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன். இது இப்படியே நீடித்துக் கொண்டே இருந்தது. மக்களோ போருக்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஒரு காலையில் புறப்பட்டு விட்டனர். அப்போதும் நான் எனது சாதனங்களில் எதையும் தயார் செய்திருக்கவில்லை. "நான் ஓரிரு நாட்களில் தயாராகி விடுவேன்; பிறகு அவர்களுடன் சேர்ந்து கொள்வேன்" என்று கூறிக் கொண்டேன்.

அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகு, ஏற்பாடுகளைச் செய்வதற்காக நான் காலையில் சென்றேன்; ஆனால் எதையும் முடிக்காமலேயே திரும்பினேன். மறுநாளும் இப்படியே ஆனது. இது என்னிடம் நீடித்துக் கொண்டே இருந்தது. அதற்குள் படையினர் வேகமாகச் சென்று விட்டனர். நான் புறப்பட்டு அவர்களை அடைந்து விடலாமா என்று நினைத்தேன் - நான் அப்படிச் செய்திருக்கக் கூடாதா! - ஆனால், அது எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்களிடையே நடமாடியபோது, நயவஞ்சகத்தில் மூழ்கியவர் என்று கருதப்பட்டவர் அல்லது பலவீனத்தின் காரணமாக அல்லாஹ் யாரை மன்னித்துவிட்டானோ அத்தகையவரைத் தவிர (சரியான இறைநம்பிக்கை கொண்ட) யாரையும் (ஊரில்) பார்க்க முடியாதது எனக்குக் கவலையை ஏற்படுத்தியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போர்க்களத்தைச் சென்றடையும் வரை என்னை நினைவுகூரவில்லை. அங்கே மக்களிடையே அமர்ந்திருந்தபோது, "கஅப் பின் மாலிக் என்ன ஆனார்?" என்று கேட்டார்கள். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அவருடைய ஆடையும், அவர் தனது தோற்றப்பொலிவை ரசிப்பதும் அவரைத் தடுத்துவிட்டன" என்று கூறினார். உடனே முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், "நீ சொன்னது தவறு! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அவரைப் பற்றி நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

அப்போது, கானல் நீரை ஊடுருவி வரும் வெண்ணிற ஆடை அணிந்த ஒருவரை நபி (ஸல்) கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூ கைஸமாவாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் அன்சாரியான அபூ கைஸமாவாகவே இருந்தார். அவர்தான் (முன்பொரு முறை) ஒரு ஸாஉ அளவு பேரீச்சம்பழத்தை தர்மம் செய்தபோது, நயவஞ்சகர்களால் கேலி செய்யப்பட்டவர்.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது என் கவலை அதிகமானது. பொய்யான காரணங்களைச் சொல்ல நான் நினைத்தேன். "நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்பிப்பேன்?" என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக என் குடும்பத்திலுள்ள விவேகமான அனைவரிடமும் ஆலோசனை கேட்டேன்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா) வந்துவிட்டார்கள்" என்று கூறப்பட்டபோது, பொய்யான எண்ணங்கள் என்னைவிட்டு அகன்றன. பொய்யைச் சொல்லிவிட்டு நபியவர்களிடமிருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்பதை நான் உணர்ந்தேன். எனவே, உண்மையையே பேசுவது என்று நான் உறுதி கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பினால், முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, மக்களுக்காக அமர்வது வழக்கம். அவ்வாறே செய்தார்கள். போருக்கு வராமல் பின்தங்கியவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களுக்கான (பொய்க்) காரணங்களைக் கூறி சத்தியம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட ஆண்களாக இருந்தனர். அவர்களுடைய வெளிப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள்; அவர்களின் உள்ளத்தில் உள்ளவற்றை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.

இறுதியில் நான் வந்தேன். நான் சலாம் சொன்னபோது, கோபத்திலிருப்பவர் புன்னகைப்பது போல் புன்னகைத்தார்கள். பிறகு, "அருகே வா!" என்றார்கள். நான் நடந்து சென்று அவர்கள் முன் அமர்ந்தேன். என்னிடம், "ஏன் நீர் பின்தங்கினீர்? நீர் உமது வாகனத்தை வாங்கியிருக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.

அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, தாங்கள் அல்லாத வேறொருவர் முன் நான் அமர்ந்திருந்தால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்திருப்பேன்; (வாதிடும்) தர்க்கத் திறமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இன்று உங்களிடம் பொய்யான காரணத்தைச் சொல்லி உங்களைத் திருப்திப்படுத்தினாலும், விரைவில் அல்லாஹ் என் மீது உங்களைக் கோபப்படச் செய்துவிடுவான் என்பதை நான் அறிவேன். நான் உங்களிடம் உண்மையைச் சொன்னால், அதில் நீங்கள் என் மீது கோபமடைவீர்கள்; இருப்பினும் அதில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு (தகுந்த) எந்தக் காரணமும் இருக்கவில்லை. நான் பின்தங்கியிருந்த அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் வலிமையும் வசதியும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை" என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் உண்மை பேசினார். நீர் எழுந்து செல்லும்! உமது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுத்திரும்" என்று கூறினார்கள். நான் எழுந்தேன். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன் நீர் எந்தக் குற்றமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை. பின்தங்கிய மற்றவர்கள் சொன்னது போல் ஏதாவது ஒரு காரணத்தை நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குத் தவறிவிட்டீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்காகப் பாவமன்னிப்புத் தேடியதே உமது பாவத்திற்குப் போதுமானதாக இருந்திருக்குமே!" என்று கூறினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, "நான் சொன்னது பொய் (எனக்குக் காரணம் இருந்தது)" என்று சொல்லச் சொல்லி அவர்கள் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார்கள். நான் அவர்களிடம், "என்னுடன் இது போன்று வேறு யாருக்கேனும் நடந்துள்ளதா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம், இரண்டு பேர் நீர் சொன்னது போலவே சொன்னார்கள். உமக்குச் சொல்லப்பட்டது போலவே அவர்களுக்கும் சொல்லப்பட்டது" என்றார்கள். "அவர்கள் இருவரும் யார்?" என்று கேட்டேன். அவர்கள், "முராரா பின் ரபீஆ அல்-ஆமிரி மற்றும் ஹிலால் பின் உமையா அல்-வாகிஃபி" என்று பதிலளித்தனர். பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயரை என்னிடம் அவர்கள் கூறினர்; அவ்விருவரிடமும் எனக்கு ஒரு முன்மாதிரி இருந்தது. அவர்கள் இருவரின் பெயரையும் என்னிடம் சொன்னவுடன் நான் (எனது முடிவில்) உறுதியாகிவிட்டேன்.

போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்களில் எங்கள் மூவருடன் மட்டும் யாரும் பேசக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தார்கள். பூமி எனக்கு அந்நியமாகிவிட்டது போல் என் உள்ளத்தில் தோன்றியது. நான் அறிந்திருந்த பூமி இதுவல்ல (என்று நினைத்தேன்). இப்படியே ஐம்பது இரவுகள் கழிந்தன. என் இரு தோழர்களும் சோர்ந்து போய், அழுது கொண்டே தங்கள் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். ஆனால் நான் மக்களில் மிகவும் இளையவனாகவும், திடகாத்திரமானவனாகவும் இருந்தேன். எனவே, நான் வெளியே சென்று தொழுகையில் கலந்து கொள்வேன்; கடைவீதிகளில் சுற்றி வருவேன்; ஆனால் யாரும் என்னுடன் பேச மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை முடித்து அமர்ந்திருக்கும் போது அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். "சலாமுக்கு பதிலளிக்க அவர்கள் உதட்டை அசைத்தார்களா இல்லையா?" என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு அவர்களுக்கு அருகிலேயே நின்று தொழுவேன்; அவர்களைக் கள்ளப் பார்வையாகப் பார்ப்பேன். நான் தொழுகையில் ஈடுபடும்போது அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்; நான் அவர்கள் பக்கம் திரும்பினால் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

மக்களின் புறக்கணிப்பு நீண்டுகொண்டே சென்றபோது, (ஒரு நாள்) நான் என் தந்தையின் சகோதரர் மகனும், எனக்கு மிகவும் விருப்பமானவருமான அபூ கதாதா (ரலி) அவர்களுடைய தோட்டத்தின் மதிலில் ஏறி அவருக்கு சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எனக்கு சலாம் பதில் சொல்லவில்லை. நான் அவரிடம், "அபூ கதாதாவே! அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்கிறேன்; நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதை நீ அறிவாயா?" என்று கேட்டேன். அவர் மவுனமாக இருந்தார். மீண்டும் அவரிடம் அல்லாஹ்வைக் கொடுத்துக் கேட்டேன்; அவர் மவுனமாகவே இருந்தார். மீண்டும் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்" என்று கூறினார். எனது கண்கள் கலங்கின. மதிலில் ஏறித் திரும்பி விட்டேன்.

நான் மதீனாவின் கடைவீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மதீனாவில் உணவு தானியங்களை விற்பதற்காக வந்திருந்த ஷாம் தேசத்து உழவன் (நபத்) ஒருவன், "கஅப் பின் மாலிக்கை எனக்கு யார் காட்டுவார்?" என்று கேட்டான். மக்கள் என்னைச் சுட்டிக்காட்டினார்கள். அவன் என்னிடம் வந்து, (கிறித்தவ) கஸ்ஸான் மன்னன் எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்தான். நான் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்ததால் அதைப் படித்தேன். அதில், "உமது தோழர் (முஹம்மத்) உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது. இழிவுக்கும் உரிமை மறுப்புக்கும் உள்ளாகும் இடத்தில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம்; நீர் எங்களிடம் வந்துவிடும்; நாங்கள் உம்மை கண்ணியப்படுத்துவோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்ததும், "இதுவும் ஒரு சோதனையே" என்று கூறி, அதை அடுப்பில் போட்டு எரித்து விட்டேன்.

ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கடந்த நிலையில் வஹீ (இறைச்செய்தி) வருவது தாமதமானது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தூதர் என்னிடம் வந்து, "நீர் உமது மனைவியை விட்டு விலகியிருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்" என்றார். "நான் அவளை விவாகரத்து செய்ய வேண்டுமா? அல்லது என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். "இல்லை, அவளைவிட்டு விலகியிரும்; அவளை நெருங்க வேண்டாம்" என்று அவர் கூறினார். என் இரு தோழர்களுக்கும் இது போன்றே சொல்லியனுப்பினார்கள். நான் என் மனைவியிடம், "அல்லாஹ் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்கும் வரை நீ உன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கே இரு" என்று கூறினேன்.

ஹிலால் பின் உமையாவின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஹிலால் பின் உமையா முதியவர்; அவருக்குப் பணிவிடை செய்பவர் யாருமில்லை. நான் அவருக்குப் பணிவிடை செய்வதை வெறுக்கிறீர்களா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை (வெறுக்கவில்லை), ஆனால் அவர் உம்மை நெருங்கக் கூடாது" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு எதிலும் நாட்டம் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு இந்நிலை ஏற்பட்டது முதல் இன்று வரை அவர் அழுது கொண்டே இருக்கிறார்" என்று கூறினார்.

என் குடும்பத்தினர் சிலர் என்னிடம், "ஹிலால் பின் உமையாவின் மனைவிக்கு அவருக்குப் பணிவிடை செய்ய அனுமதியளித்தது போல், உங்கள் மனைவிக்கும் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கலாமே?" என்று கூறினர். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இது குறித்து அனுமதி கேட்க மாட்டேன். நான் ஒரு இளைஞன்; நான் அனுமதி கேட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டேன்.

அதன் பிறகு பத்து இரவுகள் கழிந்தன. எங்களுடன் மக்கள் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு ஐம்பது இரவுகள் நிறைவடைந்தன. ஐம்பதாவது நாள் காலையில் நான் ஃபஜ்ர் தொழுதுவிட்டு, எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் அமர்ந்திருந்தேன். அல்லாஹ் (எங்களைப் பற்றிக் குர்ஆனில்) குறிப்பிட்டுள்ள அந்த நிலையில் நான் இருந்தேன்; என் உயிர் எனக்குச் சுமையாகி, பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் எனக்குக் குறுகியதாக இருந்தது. அப்போது, 'சல்ஃ' மலை மீதேறி ஒருவர், "கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி!" என்று உரத்த குரலில் அழைப்பதை நான் செவியுற்றேன். உடனே (நன்றிக்காக) சஜ்தாவில் விழுந்தேன்; துன்பம் நீங்கிவிட்டது என்பதை அறிந்து கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் போது, அல்லாஹ் எங்கள் தவ்பாவை (பாவமன்னிப்பை) ஏற்றுக் கொண்டதை மக்களுக்கு அறிவித்தார்கள். உடனே மக்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லப் புறப்பட்டனர். என் இரு தோழர்களிடமும் நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். ஒருவர் என் பக்கம் குதிரையை விரட்டி வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மலையேறி) என்னை நோக்கி ஓடி வந்தார். குதிரையை விட அவருடைய குரல் வேகமாக என்னிடம் வந்து சேர்ந்தது.

யாருடைய குரலை நான் கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல வந்தபோது, என்னுடைய இரண்டு ஆடைகளையும் கழற்றி அவருக்குப் பரிசாக அளித்துவிட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்நாளில் அவ்விரண்டைத் தவிர எனக்கு வேறு ஆடை இருக்கவில்லை. எனவே, நான் இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டேன். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, "அல்லாஹ் உமது தவ்பாவை ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு வாழ்த்துக்கள்!" என்று கூறினார்கள்.

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்; அவர்களைச் சுற்றி மக்கள் இருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்து, எனக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹாஜிர்களில் அவரைத் தவிர வேறு யாரும் என்னிடம் எழுந்து வரவில்லை. தல்ஹாவின் இந்தச் செயலை கஅப் (ரலி) அவர்கள் மறக்கவே இல்லை.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்க, "உம்மை உம் தாய் பெற்றெடுத்த நாள் முதல் உமக்குக் கிடைத்த நாட்களில் இதுவே சிறந்த நாள் என்ற நற்செய்தியைப் பெற்றுக் கொள்வீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இது தங்களிடமிருந்தா? அல்லது அல்லாஹ்விடமிருந்தா?" என்று கேட்டேன். "இல்லை, அல்லாஹ்விடமிருந்துதான்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களுடைய முகம் சந்திரனின் ஒரு துண்டு போன்று பிரகாசிக்கும்; அதை நாங்கள் அறிவோம்.

நான் அவர்கள் முன் அமர்ந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! என் தவ்பா அங்கீகரிக்கப்பட்டதற்காக என் செல்வங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தர்மமாக வழங்கி விடுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது செல்வத்தில் சிலவற்றை உமக்காக வைத்துக் கொள்ளும்; அதுவே உமக்கு நல்லது" என்றார்கள். நான், "கைபரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் வைத்துக் கொள்கிறேன்" என்று கூறினேன்.

மேலும் நான், "அல்லாஹ்வின் தூதரே! உண்மையின் மூலமாகவே அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். நான் உயிருடன் இருக்கும் வரை உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்பது என் தவ்பாவின் ஒரு பகுதியாகும்" என்று கூறினேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைச் சொன்னது முதல் இன்று வரை, என்னை விட உண்மையை அதிகமாகப் பேசியதற்காக அல்லாஹ் சோதித்த (வெற்றியளித்த) யாரையும் நான் முஸ்லிம்களில் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அதைச் சொன்னது முதல் இன்று வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்லவில்லை. எஞ்சிய காலத்திலும் அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்று ஆதரவு வைக்கிறேன்.

அப்போது அல்லாஹ் (கீழ்கண்ட) வசனங்களை அருளினான்:

[திருக்குர்ஆன் 9:117-118]
**“லகத் தாபல்லாஹு அலன் நபிய்யி வல் முஹாஜிரீன வல் அன்ஸார் அல்லதீனத் தபஊஹு ஃபீ ஸாஅதில் உஸ்ரதி மின் பஅதி மா காத யஸீகு குலூபு ஃபரீகிம் மின்ஹும் ஸும்ம தாப அலைஹிம் இன்னஹு பிஹிம் ரஊஃபுர் ரஹீம். வ அலத் ஸலாஸதில் லதீன குல்லிஃபூ ஹத்தா இதா தாகத் அலைஹிமுல் அருளு பிமா ரஹுபத் வ தாகத் அலைஹிம் அன்ஃபுஸுஹும்...”**

(பொருள்: "நிச்சயமாக அல்லாஹ் நபியையும், கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் மன்னித்தான்; அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க அன்புடைவனாகவும், பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான். மேலும், (போருக்குச் செல்லாமல்) பின்தங்கி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (அல்லாஹ் மன்னித்தான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் அவர்களுக்குக் குறுகிவிட்டது; அவர்களுடைய உயிர்களும் அவர்களுக்குச் சுமையாகிவிட்டன... (இறுதியில்) 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள்' என்பது வரை (வசனம் அருளப்பட்டது).")

கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழிகாட்டிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உண்மை பேசியதை விடப் பெரிய அருட்கொடை எதையும் என் வாழ்வில் நான் உணரவில்லை. நான் பொய் சொல்லியிருந்தால், பொய் சொன்னவர்கள் அழிந்தது போல் நானும் அழிந்திருப்பேன். ஏனெனில், பொய் சொன்னவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, யாருக்கும் சொல்லாத மிகக் கடுமையான வார்த்தைகளை வஹீ அருளப்பட்டபோது அல்லாஹ் கூறினான்:

[திருக்குர்ஆன் 9:95-96]
**“ஸயஹ்லிபூன பில்லாஹி லகும் இதின்கலப்தும் இலைஹிம் லிதுஃரிளூ அன்ஹும் ஃஅக்ரிளூ அன்ஹும் இன்னஹும் ரிஜ்ஸுன் வ மஃவாஹும் ஜஹன்னமு ஜஸாஅன் பிமா கானூ யக்ஸிபூன். யஹ்லிபூன லகும் லிதர்ளவ் அன்ஹும் ஃஇன் தர்ளவ் அன்ஹும் ஃஇன்னல்லாஹ லா யர்ளா அனில் கவ்மில் ஃபாஸிகீன்.”**

(பொருள்: "நீங்கள் அவர்களிடம் திரும்பிச் சென்றால், அவர்களை நீங்கள் (கண்டிப்பதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக உங்கள் முன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணியுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் சம்பாதித்ததற்குக் கூலியாக அவர்கள் தங்குமிடம் நரகமேயாகும். நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும், நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.")

கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரிடம் சத்தியத்தை ஏற்று, பைஅத் செய்து, அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடினார்களோ, அவர்களை விட்டும் எங்கள் மூவரின் விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது. எங்கள் விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தள்ளிப் போட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் **"வ அலத் ஸலாஸதில் லதீன குல்லிஃபூ"** (மேலும் பின்தங்கி வைக்கப்பட்ட அந்த மூவர்) என்று கூறினான்.

இங்கே (குல்லிஃபூ - பின்தங்க வைக்கப்பட்டனர் என்று) அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது, நாங்கள் போரிலிருந்து பின்தங்கியதை அல்ல; மாறாக, எங்களுடைய விவகாரம் ஒத்திவைக்கப்பட்டதையே அது குறிக்கிறது. அதாவது, தங்களிடம் வந்து சத்தியம் செய்து சாக்குப்போக்குச் சொன்னவர்களை ஏற்றுக்கொண்டு, எங்களை(த் தீர்ப்புக் கூறாமல்) பிற்படுத்தினானே, அதையே இது குறிக்கிறது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3149ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ لَيْسَ بِمُوسَى صَاحِبِ الْخَضِرِ قَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ سَمِعْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ قَامَ مُوسَى خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ ‏.‏ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ مُوسَى أَىْ رَبِّ فَكَيْفَ لِي بِهِ فَقَالَ لَهُ احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ فَحَيْثُ تَفْقِدُ الْحُوتَ فَهُوَ ثَمَّ فَانْطَلَقَ وَانْطَلَقَ مَعَهُ فَتَاهُ وَهُوَ يُوشَعُ بْنُ نُونٍ وَيُقَالُ يُوسَعُ فَحَمَلَ مُوسَى حُوتًا فِي مِكْتَلٍ فَانْطَلَقَ هُوَ وَفَتَاهُ يَمْشِيَانِ حَتَّى إِذَا أَتَيَا الصَّخْرَةَ فَرَقَدَ مُوسَى وَفَتَاهُ فَاضْطَرَبَ الْحُوتُ فِي الْمِكْتَلِ حَتَّى خَرَجَ مِنَ الْمِكْتَلِ فَسَقَطَ فِي الْبَحْرِ قَالَ وَأَمْسَكَ اللَّهُ عَنْهُ جِرْيَةَ الْمَاءِ حَتَّى كَانَ مِثْلَ الطَّاقِ وَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَكَانَ لِمُوسَى وَلِفَتَاهُ عَجَبًا فَاَنْطَلَقَا بَقِيَّةَ يَوْمِهِمَا وَلَيْلَتِهِمَا وَنُسِّيَ صَاحِبُ مُوسَى أَنْ يُخْبِرَهُ فَلَمَّا أَصْبَحَ مُوسَى قَالَ لِفَتَاهُ‏:‏ ‏(‏آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا ‏)‏ قَالَ وَلَمْ يَنْصَبْ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ ‏:‏ ‏(‏قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا ‏)‏ قَالَ مُوسَى ‏:‏ ‏(‏ ذَلِكَ مَا كُنَّا نَبْغِ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا ‏)‏ قَالَ فَكَانَا يَقُصَّانِ آثَارَهُمَا ‏.‏ قَالَ سُفْيَانُ يَزْعُمُ نَاسٌ أَنَّ تِلْكَ الصَّخْرَةَ عِنْدَهَا عَيْنُ الْحَيَاةِ وَلاَ يُصِيبُ مَاؤُهَا مَيِّتًا إِلاَّ عَاشَ ‏.‏ قَالَ وَكَانَ الْحُوتُ قَدْ أُكِلَ مِنْهُ فَلَمَّا قَطَرَ عَلَيْهِ الْمَاءُ عَاشَ ‏.‏ قَالَ فَقَصَّا آثَارَهُمَا حَتَّى أَتَيَا الصَّخْرَةَ فَرَأَى رَجُلاً مُسَجًّى عَلَيْهِ بِثَوْبٍ فَسَلَّمَ عَلَيْهِ مُوسَى فَقَالَ أَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ قَالَ أَنَا مُوسَى ‏.‏ قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ يَا مُوسَى إِنَّكَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ وَأَنَا عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ فَقَالَ مُوسَى ‏:‏ ‏(‏ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا * قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا * وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا * قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا ‏)‏ قَالَ لَهُ الْخَضِرُ ‏:‏ ‏(‏فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ‏)‏ قَالَ نَعَمْ فَانْطَلَقَ الْخَضِرُ وَمُوسَى يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ فَكَلَّمَاهُ أَنْ يَحْمِلُوهُمَا فَعَرَفُوا الْخَضِرَ فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا ‏:‏ ‏(‏ لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا * قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا * قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا ‏)‏ ثُمَّ خَرَجَا مِنَ السَّفِينَةِ فَبَيْنَمَا هُمَا يَمْشِيَانِ عَلَى السَّاحِلِ وَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ فَاقْتَلَعَهُ بِيَدِهِ فَقَتَلَهُ فَقَالَ لَهُ مُوسَى ‏:‏ ‏(‏ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا * قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ‏)‏ قَالَ وَهَذِهِ أَشَدُّ مِنَ الأُولَى ‏:‏ ‏(‏ قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي عُذْرًا * فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ ‏)‏ يَقُولُ مَائِلٌ فَقَالَ الْخَضِرُ بِيَدِهِ هَكَذَا ‏:‏ ‏(‏ فَأَقَامَهُ ‏)‏ فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُضَيِّفُونَا وَلَمْ يُطْعِمُونَا ‏:‏ ‏(‏ إِنْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا * قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا ‏)‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَرْحَمُ اللَّهُ مُوسَى لَوَدِدْنَا أَنَّهُ كَانَ صَبَرَ حَتَّى يَقُصَّ عَلَيْنَا مِنْ أَخْبَارِهِمَا ‏"‏ ‏.‏ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ الأُولَى كَانَتْ مِنْ مُوسَى نِسْيَانٌ - قَالَ وَجَاءَ عُصْفُورٌ حَتَّى وَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ ثُمَّ نَقَرَ فِي الْبَحْرِ فَقَالَ لَهُ الْخَضِرُ مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ مِثْلَ مَا نَقَصَ هَذَا الْعُصْفُورُ مِنَ الْبَحْرِ ‏"‏ ‏.‏ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ وَكَانَ يَعْنِي ابْنَ عَبَّاسٍ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا وَكَانَ يَقْرَأُ وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَرَوَاهُ الزُّهْرِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رَوَاهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ أَبَا مُزَاحِمٍ السَّمَرْقَنْدِيَّ يَقُولُ سَمِعْتُ عَلِيَّ بْنَ الْمَدِينِيِّ يَقُولُ حَجَجْتُ حَجَّةً وَلَيْسَ لِي هِمَّةٌ إِلاَّ أَنْ أَسْمَعَ مِنْ سُفْيَانَ يَذْكُرُ فِي هَذَا الْحَدِيثِ الْخَبَرَ حَتَّى سَمِعْتُهُ يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ وَقَدْ كُنْتُ سَمِعْتُ هَذَا مِنْ سُفْيَانَ مِنْ قَبْلِ ذَلِكَ وَلَمْ يَذْكُرْ فِيهِ الْخَبَرَ ‏.‏
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "நவ்ஃப் அல்-பிகாலீ என்பவர், பனூ இஸ்ராயீல்களுக்கு அனுப்பப்பட்ட மூஸா, கித்ருடைய தோழரான மூஸா அல்லர் என்று வாதிடுகிறார்" என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "அல்லாஹ்வின் எதிரி பொய் சொல்லிவிட்டான்" என்று கூறினார்கள். (பிறகு) "உபய் பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவித்ததாக நான் கேட்டிருக்கிறேன்; அவர்கள் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள்:

'மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே உரையாற்ற எழுந்தார்கள். அப்போது அவர்களிடம், "மக்களில் மிக அறிந்தவர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நானே மிக அறிந்தவன்" என்று பதிலளித்தார்கள். அறிவை (இல்மை) அல்லாஹ்வின் பக்கம் அவர்கள் சேர்க்காததால் அல்லாஹ் அவர்கள் மீது அதிருப்தி கொண்டான். அல்லாஹ் அவருக்கு, "இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் (மஜ்மஉல் பஹ்ரைனில்) என்னுடைய அடியார்களில் ஒருவர் இருக்கிறார்; அவர் உங்களை விட அதிகம் அறிந்தவர்" என்று வஹீ அறிவித்தான்.

மூஸா (அலை) அவர்கள், "என் இறைவா! அவரை நான் எவ்வாறு சந்திப்பது?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், "ஒரு மீனைத் தயார் செய்து அதை ஒரு கூடையில் (மிக்னல்) வைத்துச் சுமந்து செல்லும்! எங்கு அந்த மீனைத் தவறவிடுகிறீரோ அங்கே அவர் இருப்பார்" என்று கூறினான்.

ஆகவே, மூஸா (அலை) அவர்களும் அவருடைய இளைஞரான யூஷஃ பின் நூன் என்பவரும் புறப்பட்டனர். (யூஷஃ என்பதை யூஸஃ என்றும் சொல்லப்படும்). மூஸா (அலை) ஒரு மீனை ஒரு கூடையில் வைத்துச் சுமந்து சென்றார்கள். அவரும் அவருடைய இளைஞரும் நடந்து சென்றனர். அவர்கள் ஒரு பாறையை அடைந்தபோது, மூஸா (அலை) அவர்களும் அவருடைய இளைஞரும் (அயர்ந்து) உறங்கிவிட்டனர். அப்போது கூடையில் இருந்த மீன் துடித்து, கூடையிலிருந்து வெளியேறி கடலில் விழுந்தது.

அல்லாஹ் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தினான்; அது ஒரு சுரங்கம் போலானது. மீனுக்கு அது ஒரு வழியை ஏற்படுத்தியது; மூஸாவுக்கும் அவருடைய இளைஞருக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பகலின் எஞ்சிய நேரத்திலும் இரவிலும் பயணம் செய்தனர். மூஸாவுடைய தோழர் (யூஷஃ) மீன் விஷயத்தை மூஸாவிடம் கூற மறந்துவிட்டார்.

விடிந்ததும் மூஸா (அலை) தம் இளைஞரிடம்: **"ஆதினா ஃகதாஅனா லகத் லகீனா மின் ஸஃபரினா ஹாதா நஸபா"** (18:62) என்று கூறினார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தைக் கடந்து செல்லும் வரை மூஸா (அலை) களைப்பை உணரவில்லை.

அப்போது அந்த இளைஞர்: **"அரஅய்த இத் அவாய்னா இலாஸ் ஸக்ரதி ஃப இன்னீ நஸீதுல் ஹூத வமா அன்ஸானீஹு இல்லஷ் ஷைத்தானு அன் அத்குரஹ்; வத்த ஃகத ஸபீலஹு ஃபில் பஹ்ரி அஜபா"** (18:63) என்று கூறினார்.

அதற்கு மூஸா (அலை): **"தாலிக மா குன்னா நப்ஃகி ஃபர்தத்தா அலா ஆத்தாரிஹிமா கஸஸா"** (18:64) என்று கூறிவிட்டு, அவர்கள் இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் (திரும்பிச்) சென்றார்கள்.'"

(அறிவிப்பாளர்) சுஃப்யான் (ரஹ்) கூறினார்: "அந்தப் பாறையின் அருகில் 'அல்-ஹயாத்' (ஜீவ ஊற்று) என்றொரு ஊற்று இருந்ததாகவும், அதன் தண்ணீர் இறந்துபோன எவர் மீது பட்டாலும் அவர் உயிர் பெற்றுவிடுவார் என்றும் மக்கள் கருதுகின்றனர். அந்த மீனில் ஒரு பகுதி உண்ணப்பட்டிருந்தது. அதன் மீது அந்தத் தண்ணீர் துளி பட்டவுடன் அது உயிர் பெற்றது."

(நபிகளார் தொடர்ந்தார்கள்): "அவர்கள் இருவரும் தங்கள் சுவடுகளைப் பின்பற்றிச் சென்று அந்தப் பாறையை அடைந்தபோது, அங்கே ஒரு மனிதர் தம் உடல் முழுவதையும் ஆடையால் போர்த்தியவாறு இருப்பதைக் கண்டனர். மூஸா (அலை) அவருக்கு ஸலாம் கூறினார்கள். அதற்கு அவர் (கித்ர்), "உமது பூமியில் சாந்தி (ஸலாம்) ஏது?" என்று கேட்டார். மூஸா (அலை), "நான்தான் மூஸா" என்றார்கள். அவர், "பனூ இஸ்ராயீல்களின் மூஸாவா?" என்று கேட்டார். மூஸா (அலை), "ஆம்" என்றார்கள். அவர், "மூஸாவே! அல்லாஹ் உமக்குக் கற்றுக்கொடுத்த அவனது இல்ம் (ஞானம்) உம்மிடம் உள்ளது; அதை நான் அறியமாட்டேன். அவன் எனக்குக் கற்றுக்கொடுத்த இல்ம் என்னிடம் உள்ளது; அதை நீர் அறியமாட்டீர்" என்று கூறினார்.

அப்போது மூஸா (அலை): **"ஹல் அத்தபிஉக அலா அன் துஅல்லிமனி மிம்மா உல்லிம்த ருஷ்தா"** (18:66) என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்: **"இன்னக லன் தஸ்ததீஅ மஇய ஸப்ரா, வ கைஃப தஸ்பிரு அலா மா லம் துஹித் பிஹி ஃகுப்ரா"** (18:67-68) என்று கூறினார்.

மூஸா (அலை): **"ஸ தஜிதுனீ இன் ஷாஅல்லாஹு ஸாபிரன் வலா அஃஸீ லக அம்ரா"** (18:69) என்று கூறினார்கள்.

அதற்கு கித்ர் அவரிடம்: **"ஃப இனித்த பஅதனீ ஃபாலா தஸ்அல்னீ அன் ஷையின் ஹத்தா உஹ்தித லக மின்ஹு திக்ரா"** (18:70) என்று கூறினார். மூஸா (அலை), "சரி" என்றார்கள்.

கித்ரும் மூஸாவும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது ஒரு கப்பல் அவர்களைக் கடந்து சென்றது. அதில் தங்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு அவர்கள் பேசினார்கள். அவர்கள் கித்ரை அடையாளம் கண்டுகொண்டு, கூலி எதுவும் வாங்காமல் அவர்களை ஏற்றிக்கொண்டனர். அப்போது கித்ர் கப்பல் பலகைகளில் ஒன்றை கழற்றிவிட்டார்.

இதைக் கண்ட மூஸா (அலை), "இம்மக்கள் நம்மை கூலி எதுவும் வாங்காமல் ஏற்றிக்கொண்டனர். ஆனால், நீர் அவர்களுடைய கப்பலைக் கேடுபடுத்தும் விதமாக ஓட்டையிட்டுவிட்டீரே!" **"லி துஃக்ரிக அஹ்லஹா லகத் ஜிஃத ஷையன் இம்ரா"** (18:71) என்று கூறினார்கள்.

அதற்கு கித்ர்: **"அலம் அகுல் இன்னக லன் தஸ்ததீஅ மஇய ஸப்ரா"** (18:72) என்று கேட்டார்.

அதற்கு மூஸா (அலை): **"லா துஆகித்னீ பிமா நஸீது வலா துர்ஹிக்னீ மின் அம்ரீ உஸ்ரா"** (18:73) என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் கப்பலிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். கித்ர் அந்தச் சிறுவனின் தலையைப் பிடித்துத் தம் கையால் அதைத் துண்டித்துக் கொன்றுவிட்டார்.

இதைக் கண்ட மூஸா (அலை) அவரிடம்: **"அ கதல்த நஃப்ஸன் ஸகிய்யதன் பி ஃகைரி நஃப்ஸ்; லகத் ஜிஃத ஷையன் நுக்ரா"** (18:74) என்று கேட்டார்கள்.

அதற்கு கித்ர்: **"அலம் அகுல் லக இன்னக லன் தஸ்ததீஅ மஇய ஸப்ரா"** (18:75) என்று கேட்டார்.

(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்): "இது முதலாவதை விட மிகக் கடுமையானது."

மூஸா (அலை): **"இன் ஸஅல்துக அன் ஷையின் பஃதஹா ஃபாலா துஸாஹிப்னீ; கத் பலஃக்த மின் லதுன்னீ உத்ரா"** (18:76) என்று கூறினார்கள்.

**"ஃபன் தலகா ஹத்தா இதா அதயா அஹ்ல கர்யதின் இஸ்தத்அமா அஹ்லஹா ஃப அபவ் அன் யுளய்யிஃபூஹுமா ஃப வஜதா ஃபீஹா ஜிதாரன் யுரீது அன் யின்கள்ள"** (18:77). (யுரீது அன் யின்கள்ள என்பதற்கு) சாய்ந்திருந்தது என்று பொருள். கித்ர் தம் கையால் 'இப்படி'ச் செய்து அதை நிமிர்த்தி வைத்தார் **"ஃப அகாமுஹு"**.

அப்போது மூஸா (அலை) அவரிடம், "நாம் ஒரு கூட்டத்தாரிடம் வந்தோம்; அவர்கள் நமக்கு விருந்தளிக்கவுமில்லை; உணவளிக்கவும் இல்லை. **இன் ஷிஃத லத்த ஃகத்த அலைஹி அஜ்ரா**" (18:77) என்று கூறினார்கள்.

அதற்கு கித்ர்: **"ஹாதா ஃபிராகு பைனீ வ பைனிக; ஸ உனப்பிவுக பி தஃவீலி மா லம் தஸ்ததி அலைஹி ஸப்ரா"** (18:78) என்று கூறினார்."

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் மூஸாவுக்கு அருள் புரிவானாக! அவர் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம்; அவ்வாறாயின் அவர்களின் செய்திகள் நமக்கு இன்னும் விபரிக்கப்பட்டிருக்கும்."

மேலும் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முதலாவது நிகழ்வு மூஸாவிடமிருந்து ஏற்பட்ட மறதியாகும்." (மேலும் கூறினார்கள்): "ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் விளிம்பில் அமர்ந்து கடலில் (தண்ணீரைக்) கொத்தியது. அப்போது கித்ர் மூஸாவிடம், 'அல்லாஹ்வின் அறிவுக்கு முன்னால் என்னுடைய அறிவும் உம்முடைய அறிவும், இந்தக் குருவி கடலிலிருந்து குறைத்த அளவேயன்றி வேறில்லை' என்று கூறினார்."

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறினார்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79 வசனத்தை) **"வ கான அமாமஹும் மலிகன் யஃகுது குல்ல ஸஃபீனதின் ஸாலிஹதின் ஃகஸ்பா"** (அவர்களுக்கு முன்னால் ஒரு மன்னன் இருந்தான்; அவன் பழுதுபடாத நல்ல கப்பல்களை எல்லாம் அபகரித்துக் கொண்டிருந்தான்) என்று ஓதுவார்கள். மேலும், (18:80 வசனத்தை) **"வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரா"** (அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்) என்றும் ஓதுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)