இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4325ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ الشَّاعِرِ الأَعْمَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ لَمَّا حَاصَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الطَّائِفَ فَلَمْ يَنَلْ مِنْهُمْ شَيْئًا قَالَ ‏"‏ إِنَّا قَافِلُونَ إِنْ شَاءَ اللَّهُ ‏"‏‏.‏ فَثَقُلَ عَلَيْهِمْ وَقَالُوا نَذْهَبُ وَلاَ نَفْتَحُهُ ـ وَقَالَ مَرَّةً نَقْفُلُ ـ فَقَالَ ‏"‏ اغْدُوا عَلَى الْقِتَالِ ‏"‏‏.‏ فَغَدَوْا فَأَصَابَهُمْ جِرَاحٌ فَقَالَ ‏"‏ إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ ‏"‏‏.‏ فَأَعْجَبَهُمْ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَتَبَسَّمَ‏.‏ قَالَ قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ الْخَبَرَ كُلَّهُ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபை முற்றுகையிட்டு, அதன் மக்களை அவர்களால் வெற்றிகொள்ள முடியாதபோது, "அல்லாஹ் நாடினால் நாம் (மதீனாவிற்கு) திரும்பிச் செல்வோம்" என்று கூறினார்கள். அது நபித்தோழர்களுக்குத் துயரத்தை அளித்தது. அவர்கள், "அதை வெற்றி கொள்ளாமலேயே நாம் சென்று விடுவோமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நாளை போரிடுங்கள்" என்று கூறினார்கள். (மறுநாள்) அவர்கள் போரிட்டார்கள்; (அவர்களில் பலருக்குக்) காயங்கள் ஏற்பட்டன. ஆகவே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் நாடினால் நாம் நாளை திரும்பிச் செல்வோம்" என்று கூறினார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. (இதைக் கண்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். (துணை அறிவிப்பாளரான சுஃப்யான் அவர்கள் ஒருமுறை, "(நபி (ஸல்) அவர்கள்) புன்னகைத்தார்கள்" என்று கூறினார்கள்).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
7480ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ حَاصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَهْلَ الطَّائِفِ فَلَمْ يَفْتَحْهَا فَقَالَ ‏"‏ إِنَّا قَافِلُونَ إِنْ شَاءَ اللَّهُ ‏"‏‏.‏ فَقَالَ الْمُسْلِمُونَ نَقْفُلُ وَلَمْ نَفْتَحْ‏.‏ قَالَ ‏"‏ فَاغْدُوا عَلَى الْقِتَالِ ‏"‏‏.‏ فَغَدَوْا فَأَصَابَتْهُمْ جِرَاحَاتٌ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ ‏"‏، فَكَأَنَّ ذَلِكَ أَعْجَبَهُمْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால் அதை வெற்றிகொள்ள முடியவில்லை. எனவே, "அல்லாஹ் நாடினால் நாம் திரும்பிச் செல்வோம்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) முஸ்லிம்கள், "வெற்றிகொள்ளாமலேயே நாம் திரும்பிச் செல்வதா?" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் காலையில் போருக்குச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் காலையில் சென்றார்கள்; அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் நாடினால், நாளை நாம் திரும்பிச் செல்வோம்" என்று கூறினார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தோன்றியது; (இதைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح