இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3963ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ ‏ ‏ مَنْ يَنْظُرُ مَا فَعَلَ أَبُو جَهْلٍ ‏ ‏‏.‏ فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ، فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ أَوْ قَالَ قَتَلْتُمُوهُ‏.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பத்ருப் போர் நாளன்று, நபி (ஸல்) அவர்கள், "அபூ ஜஹ்லுக்கு என்ன நேர்ந்தது என்று யார் சென்று பார்ப்பார்?" என்று கூறினார்கள். இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சென்று, அஃப்ராவுடைய இரு மகன்கள் அவனுக்கு மரண அடி அடித்திருந்ததைக் கண்டார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, "'நீ அபூ ஜஹ்லா?'" என்று கேட்டார்கள். அவன், "தன் சமூகத்தாராலேயே கொல்லப்பட்ட ஒருவனை விட (அல்லது நீங்கள் கொன்ற ஒருவனை விட) மேலான மனிதன் இருக்க முடியுமா?" என்று பதிலளித்தான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح