وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من طلب الشهادة صادقًا أعطيها ولو لم تصبه ((رواه مسلم)).
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் உளத்தூய்மையுடன் வீரமரணத்தை வேண்டுகிறாரோ, அவர் போர்க்களத்தில் கொல்லப்படாவிட்டாலும் அது அவருக்கு வழங்கப்படும்."