وعن جابر رضي الله عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال: إن بالمدينة لرجالا ما سرتم مسيرًا، ولا قطعتم واديًا إلا كانوا معكم حبسهم المرض
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரின்போது சென்றிருந்தோம், அப்போது அவர்கள் கூறினார்கள், "மதீனாவில் நமக்குப்பின்னால் சிலர் தங்கிவிட்டார்கள். நாம் எந்த ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றாலும் அவர்கள் நம்முடனேயே இருக்கிறார்கள். முறையான காரணம் அவர்களைத் தடுத்துவிட்டதால், அவர்கள் நன்மையில் நம்முடன் பங்காளிகளாக இருக்கிறார்கள்."
மற்றொரு அறிவிப்பில், "...ஏதேனும் உண்மையான காரணத்தால்" என்று வந்துள்ளது.
மற்றொரு அறிவிப்பில், "அவர்கள் நன்மையில் உங்களின் பங்காளிகள்" என்று வந்துள்ளது.