وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : "ما تعدون الشهداء فيكم؟ قالوا: يا رسول الله من قتل في سبيل الله فهو شهيد. قال: "إن شهداء أمتي إذًا لقليل!" قالوا: فمن يا رسول الله ؟ قال: "من قتل في سبيل الله فهو شهيد، ومن مات في سبيل الله فهو شهيد، ومن مات في الطاعون فهو شهيد، ومن مات في البطن فهو شهيد، والغريق شهيد" ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் நீங்கள் யாரை ஷஹீத் (தியாகி) என்று கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், என் உம்மத்தில் ஷஹீத்கள் குறைவாகவே இருப்பார்கள்" என்று கூறினார்கள். தோழர்கள் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால், ஷஹீத்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார்; அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பவர் ஷஹீத் ஆவார்; கொள்ளை நோயால் மரணிப்பவர் ஷஹீத் ஆவார்; வயிற்று நோயால் மரணிப்பவர் ஷஹீத் ஆவார்; நீரில் மூழ்கி மரணிப்பவரும் ஷஹீத் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம்.
இந்த ஹதீஸ், மனித இனத்திலேயே சிறந்த உம்மத்தாகிய இந்த உம்மத்தின் மீது அல்லாஹ்வுக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. (பதிப்பாசிரியரின் குறிப்பு)