உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) இருந்தபோது, ‘அவர்களுக்கு எதிராக உங்களால் முடிந்தவரை உங்கள் பலத்தைத் தயார் செய்யுங்கள். அறிந்துகொள்ளுங்கள், பலம் என்பது எய்வதுதான், அறிந்துகொள்ளுங்கள், பலம் என்பது எய்வதுதான், அறிந்துகொள்ளுங்கள், பலம் என்பது எய்வதுதான்’ என்று ஓதுவதை நான் கேட்டேன்.”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஆயத்தை மிம்பரின் மீது ஓதினார்கள்: "அவர்களுக்கு எதிராக உங்களால் இயன்ற அளவு பலத்தைத் திரட்டிக் கொள்ளுங்கள் (8:60)."
அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக! பலம் என்பது எய்தல்" - மூன்று முறை - "நிச்சயமாக! அல்லாஹ் உங்களுக்காக பூமியைத் திறப்பான், மேலும் உங்களுக்கு வாழ்வாதாரங்களைப் போதுமானதாக்குவான், ஆகவே, உங்களில் எவரும் தமது அம்புகளைக் கொண்டு பயிற்சி செய்வதைக் கைவிட்டுவிட வேண்டாம்."
وَعَنْ عَقَبَةِ بْنُ عَامِرٍ - رضى الله عنه - { [ قَالَ ]: سَمِعْتَ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم -وَهُوَ عَلَى اَلْمِنْبَرِ يَقْرَأُ: ﴿ وَأَعِدُّوا لَهُمْ مَا اِسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ ﴾ [1] "أَلَا إِنَّ اَلْقُوَّةَ اَلرَّمْيُ, أَلَا إِنَّ اَلْقُوَّةَ اَلرَّمْيُ, أَلَا إِنَّ اَلْقُوَّةَ اَلرَّمْيُ } [2] . رَوَاهُ مُسْلِمٌ . [3] .
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது இருந்தபோது, “அவர்களுக்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் (டாங்கிகள், விமானங்கள் போன்றவை) தயார் செய்து வையுங்கள்.”(8:60) என்று ஓதிவிட்டு, “நிச்சயமாக, பலம் என்பது எய்வதில் (அம்புகள்) இருக்கிறது; நிச்சயமாக, பலம் என்பது எய்வதில் இருக்கிறது; நிச்சயமாக, பலம் என்பது எய்வதில் இருக்கிறது” என்று கூறியதை நான் கேட்டேன்.’ இதை முஸ்லிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وعن أبي حماد- ويقال: أبو سعاد، ويقال: أبو أسد، ويقال: أبو عامر، ويقال: أبو عمرو، ويقال: أبو الأسود، ويقال: أبو عبس- عقبة بن عامر الجهني، رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر يقول: “وأعدوا لهم ما استطعتم من قوة ألا إن القوة الرمي، ألا إن القوة الرمي، ألا إن القوة الرمي". ((رواه مسلم)).
وعنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "ستفتح عليكم أرضون ويكفيكم الله فلا يعجز أحدكم أن يلهو بأسهمه" ((رواه مسلم)).
உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் (பிரசங்க மேடையில்) இருந்து, "அவர்களை (எதிரிகளை) சந்திப்பதற்காக உங்களால் இயன்ற அளவு வலிமையைத் தயார் செய்யுங்கள். நிச்சயமாக! வலிமை என்பது அம்பெய்வதில்தான் உள்ளது, வலிமை என்பது அம்பெய்வதில்தான் உள்ளது, வலிமை என்பது அம்பெய்வதில்தான் உள்ளது" என்று கூற நான் கேட்டேன்.