حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ جَاءٍ فَقَالَ أُكِلَتِ الْحُمُرُ، ثُمَّ جَاءَهُ جَاءٍ فَقَالَ أُكِلَتِ الْحُمُرُ. ثُمَّ جَاءَهُ جَاءٍ فَقَالَ أُفْنِيَتِ الْحُمُرُ. فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى فِي النَّاسِ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ، فَإِنَّهَا رِجْسٌ. فَأُكْفِئَتِ الْقُدُورُ وَإِنَّهَا لَتَفُورُ بِاللَّحْمِ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "கழுதைகள் (அறுக்கப்பட்டு) உண்ணப்பட்டுவிட்டன" என்று கூறினார். பிறகு (மற்றொருவர்) வந்து, "கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன" என்று கூறினார். பிறகு (வேறொருவர்) வந்து, "கழுதைகள் அழிக்கப்பட்டுவிட்டன" என்று கூறினார்.
ஆகவே, மக்களிடையே (பின்வருமாறு) அறிவிக்குமாறு ஒரு அறிவிப்பாளருக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் **நாட்டுப் கழுதைகளின்** இறைச்சியை விட்டும் உங்களைத் தடுக்கிறார்கள்; ஏனெனில் அது அசுத்தமானதாகும்."
ஆகவே, இறைச்சியுடன் பானைகள் கொதித்துக் கொண்டிருந்த நிலையில் அவை தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன.