حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، قَالَ دَخَلْتُ مَعَ أَنَسٍ عَلَى الْحَكَمِ بْنِ أَيُّوبَ، فَرَأَى غِلْمَانًا ـ أَوْ فِتْيَانًا ـ نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا. فَقَالَ أَنَسٌ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُصْبَرَ الْبَهَائِمُ.
ஹிஷாம் பின் ஸைத் அவர்கள் அறிவித்தார்கள்:
நானும் அனஸ் (ரலி) அவர்களும் அல்-ஹகம் பின் அய்யூப் அவர்களிடம் சென்றோம். (அங்கே) சிறுவர்கள் -அல்லது இளைஞர்கள்- சிலர் ஒரு கோழியை (இலக்காக) நிறுத்தி வைத்து, அதன் மீது அம்பெய்வதை அனஸ் (ரலி) கண்டார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்கள், "விலங்குகளைக் கட்டிவைத்து (இலக்காகக்) கொல்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
ஹிஷாம் பின் ஸைத் அவர்கள் கூறினார்கள்; "நானும் அனஸ் (ரழி) அவர்களும் அல்-ஹகம் - அதாவது, இப்னு அய்யூப் - அவர்களிடம் சென்றோம். ஆளுநரின் வீட்டில் சிலர் ஒரு கோழியை இலக்காக வைத்து அம்பெய்திக் கொண்டிருந்தனர். அவர் கூறினார்கள்:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிராணிகளை இலக்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்தார்கள்;'
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، قَالَ دَخَلْتُ مَعَ أَنَسٍ عَلَى الْحَكَمِ بْنِ أَيُّوبَ فَرَأَى فِتْيَانًا أَوْ غِلْمَانًا قَدْ نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا فَقَالَ أَنَسٌ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُصْبَرَ الْبَهَائِمُ .
ஹிஷாம் இப்னு ஸைத் அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அனஸ் (ரழி) அவர்களுடன் அல்-ஹகம் இப்னு அய்யூப் அவர்களிடம் சென்றேன். அவர், ஒரு கோழியை இலக்காக வைத்து அதன் மீது அம்பெய்திக் கொண்டிருந்த சில இளைஞர்களையோ அல்லது சிறுவர்களையோ கண்டார். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஓர் உயிரினத்தைக் கட்டிவைத்து (இலக்காக ஆக்கி) கொல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.