حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ الْبَرَاءِ، قَالَ ذَبَحَ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَبْدِلْهَا ". قَالَ لَيْسَ عِنْدِي إِلاَّ جَذَعَةٌ ـ قَالَ شُعْبَةُ وَأَحْسِبُهُ قَالَ ـ هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. قَالَ " اجْعَلْهَا مَكَانَهَا، وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ". وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالَ عَنَاقٌ جَذَعَةٌ.
அல்-பராஃ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ புர்தா (ரழி) அவர்கள் (ஈத்) தொழுகைக்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அதற்குப் பதிலாக வேறொன்றை அறுப்பீராக" என்றார்கள்.
அவர், "என்னிடம் ஒரு 'ஜதஆ'வைத் (ஆட்டுக்குட்டியைத்) தவிர வேறொன்றும் இல்லை" என்றார். (அறிவிப்பாளர் ஷுஅபா அவர்கள் கூறினார்கள்: "(அபூ புர்தா அவர்கள்) 'அது முஸின்னாவை (பருவமடைந்த ஆட்டை) விடச் சிறந்தது' என்று கூறியதாக நான் கருதுகிறேன்.")
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அதையே (முந்தியதற்குப்) பகரமாக்குவீராக. ஆனால், உமக்குப்பின் வேறு எவருக்கும் அது போதுமானதாக ஆகாது."
ஹாத்திம் பின் வர்தான் (ரஹ்) அவர்கள், அனஸ் (ரழி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கையில், "அனாக் ஜதஆ" (பெண் ஆட்டுக்குட்டி) என்று கூறினார்கள்.
அல்-பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
நாம் (ஈதுல் அழ்ஹா) நாளன்று நமது காரியங்களைத் துவங்கும் முதல் (செயல்), நாம் தொழுகையை நிறைவேற்றுவதாகும். பிறகு நாம் திரும்பி வந்து பிராணிகளை அறுத்துப் பலியிடுவோம்; யார் அவ்வாறு செய்தாரோ அவர் உண்மையில் நமது சுன்னாவை (நடைமுறையை)ப் பின்பற்றியவராவார். மேலும் (அந்நாளில் ஈத் தொழுகைக்கு முன் பிராணியை) அறுத்தவரோ, அவருக்கு (அந்த பிராணியை அறுத்தது) அவரது குடும்பத்திற்கான இறைச்சியைப் பெறுவதற்காகவே ஆகும், மேலும் அதில் குர்பானி என்ற எதுவும் இல்லை. அபூ புர்தா இப்னு நியார் (ரழி) அவர்கள்தான் (ஈத் தொழுகைக்கு முன் பிராணியை) அறுத்திருந்தார்கள். அவர் கூறினார்கள்: என்னிடம் ஒரு வருடத்திற்கும் குறைவான வயதுடைய ஒரு சிறிய ஆட்டுக்குட்டி உள்ளது, ஆனால் அது ஒரு வருடத்திற்கும் அதிகமான வயதுடையதை விட சிறந்தது. அதன் பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதை அறுப்பீராக, ஆனால் அது உமக்குப்பிறகு வேறு எவருக்கும் (குர்பானியாக) போதுமானதாக ஆகாது.