"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தங்களின் படையெடுப்புகளில் ஒன்றில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நான் அன்னாரை நோக்கிச் சென்றேன்; ஆனால் நான் அன்னாரை அடைவதற்கு முன்பே அவர்கள் திரும்பிவிட்டார்கள். எனவே, 'அவர்கள் என்ன கூறினார்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கு என்னிடம், 'சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட ஜாடியிலும் நபீத் தயாரிப்பதைத் அவர்கள் தடை செய்தார்கள்' என்று கூறப்பட்டது."