அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "செய்த நன்மையைச் சொல்லிக்காட்டுபவனும், தன் பெற்றோருக்கு மாறு செய்பவனும், மது அருந்தும் வழக்கமுடையவனும் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்கள்."
புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக நான் உங்களுக்குப் பாத்திரங்கள் குறித்துத் தடை விதித்திருந்தேன். (ஆனால்) நிச்சயமாகப் பாத்திரம் எதையும் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஆக்குவதும் இல்லை; ஹராம் (தடுக்கப்பட்டது) ஆக்குவதும் இல்லை. மேலும் போதையூட்டும் ஒவ்வொன்றும் ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகும்."