இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1884ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَيُوسُفُ بْنُ حَمَّادٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي عِصَامٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا وَيَقُولُ ‏ ‏ هُوَ أَمْرَأُ وَأَرْوَى ‏ ‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَرَوَاهُ هِشَامٌ الدَّسْتَوَائِيُّ عَنْ أَبِي عِصَامٍ عَنْ أَنَسٍ ‏.‏
وَرَوَى عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் (பருகும் போது, பாத்திரத்தை வாயிலிருந்து அகற்றி) மூன்று முறை சுவாசிப்பார்கள். மேலும், "அது மிக ஆரோக்கியமானது; தாகத்தை நன்கு தணிக்கக் கூடியது" என்று கூறுவார்கள்.

அபூ ஈஸா கூறினார்கள்: இந்த ஹதீஸ் ஹஸன் ஙரீப் ஆகும். ஹிஷாம் அத்-தஸ்தவாஈ அவர்கள், அபூ இஸாம் வாயிலாக அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து இதை அறிவித்தார்கள்.

மேலும் அஸ்ரா பின் ஸாபித் அவர்கள், ஸுமாமா வாயிலாக அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து, "நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் மூன்று முறை சுவாசிப்பார்கள்" என்று அறிவித்துள்ளார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)