அப்துல்லாஹ் இப்னு கஅப் அவர்கள், அவர்களுடைய தந்தை கஅப் (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள்; மேலும் அவர்கள் (சாப்பிட்டு) முடித்ததும், அவற்றை நக்குவார்கள்' என்று தமக்கு அறிவித்ததாக அறிவித்தார்கள்.
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ وَلاَ يَمْسَحُ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا .
கஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள்; அதை நக்குவதற்கு முன்பு தம் கையைத் துடைக்க மாட்டார்கள்.