இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2033 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ،
قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَىْءٍ
مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمُ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ
أَذًى ثُمَّ لْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَىِّ طَعَامِهِ
تَكُونُ الْبَرَكَةُ ‏ ‏ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: ஷைத்தான் உங்களில் ஒவ்வொருவருடனும் அவர் செய்யும் எல்லா காரியங்களிலும் உடன் இருக்கிறான்; அவர் உணவு உண்ணும் போதும் கூட அவன் உடன் இருக்கிறான்; ஆகவே, உங்களில் ஒருவர் ஒரு கவளம் (உணவைத்) தவறவிட்டால், அவர் அதில் படிந்துள்ள அசுத்தத்தை அகற்றிவிட்டு அதை உண்ணட்டும்; அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்; மேலும், அவர் (உணவை) உண்டு முடித்ததும், தம் விரல்களை அவர் சூப்பிக் கொள்ளட்டும், ஏனெனில், தம் உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது என்பதை அவருக்குத் தெரியாது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
164ரியாதுஸ் ஸாலிஹீன்
التاسع‏:‏ عنه أن رسول الله صلى الله عليه وسلم، أمر بلعق الأصابع والصحفة وقال‏:‏ ‏"‏إنكم لا تدرون في أيها البركة‏"‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
وفي رواية له‏:‏ ‏"‏ إذا وقعت لقمة أحدكم ‏.‏ فليأخذها فليمط ماكان بها من أذى، وليأكلها، ولا يدعها للشيطان، ولا يمسح يده بالمنديل حتى يلعق أصابعه، فإنه لا يدري في أي طعامه البركة‏"‏‏.‏
وفي رواية له‏:‏ ‏"‏إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه حتى يحضره عند طعامه، فإذا سقطت من أحدكم اللقمة فليمط ما كان بها من أذى ، فليأكلها، ولا يدعها للشيطان‏"‏‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சாப்பிட்ட பிறகு) விரல்களைச் சப்புமாறும், தட்டை வழித்துச் சாப்பிடுமாறும் கட்டளையிட்டார்கள். "உணவின் எந்தப் பகுதியில் (அல்லாஹ்வின்) பரக்கத் இருக்கிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார்கள்.

முஸ்லிம்.

மற்றொரு அறிவிப்பில், ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவரது உணவுக்கவளம் கீழே விழுந்துவிட்டால், அதை எடுத்து, அதில் படிந்துள்ள அழுக்கையோ அல்லது தூசியையோ அகற்றி, பிறகு அதை உண்ணட்டும்; அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்; மேலும், அவர் தம் விரல்களைச் சப்பும் வரை கையைத் துண்டினால் துடைக்க வேண்டாம், ஏனெனில் உணவின் எந்தப் பகுதியில் அல்லாஹ்வின் பரக்கத்* இருக்கிறது என்பதை அவர் அறியமாட்டார்".

* பரக்கத் என்பது நன்மையின் மிகுதியும் அதன் தொடர்ச்சியும் ஆகும்.