حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَعَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلا خَيَّاطًا دَعَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، فَقَرَّبَ مِنْهُ ثَرِيدًا عَلَيْهِ دُبَّاءُ، قَالَ: فَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، يَأْخُذُ الدُّبَّاءَ، وَكَانَ يُحِبُّ الدُّبَّاءَ، قَالَ ثَابِتٌ: فَسَمِعْتُ أَنَسًا، يَقُولُ: فَمَا صُنِعَ لِي طَعَامٌ، أَقْدَرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءُ، إِلا صُنِعَ.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு தையல்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (உணவருந்த) அழைத்தார். அவர் (நபியவர்களுக்கு) சுரைக்காய் (துண்டுகள்) இடப்பட்ட ‘தரீத்’ (ரொட்டி மற்றும் இறைச்சி குழம்பு கலந்த) உணவை முன்வைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்வுணவிலிருந்து) சுரைக்காய் (துண்டுகளைத் தேர்ந்தெடுத்து) எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சுரைக்காயை விரும்புபவர்களாக இருந்தார்கள்.”
ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அனஸ் (ரழி) அவர்கள், ‘எனக்காகச் சமைக்கப்படும் உணவில் சுரைக்காயைச் சேர்க்க முடியுமானால், அதில் சுரைக்காய் சேர்க்கப்படாமல் இருந்ததில்லை’ என்று கூறுவதை நான் கேட்டேன்.”