حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ ـ أَوْ بِمَشَاقِصَ ـ فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخْتِلُ الرَّجُلَ لِيَطْعُنَهُ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் எட்டிப் பார்த்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் அகன்ற அம்பு முனையைக் கையில் பிடித்தவாறு அவரை நோக்கி எழுந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மனிதரைக் குத்துவதற்காகப் பதுங்கிச் சென்றதை நான் இப்போதும் காண்பது போன்றுள்ளது.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، اطَّلَعَ فِي بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ بِمَشَاقِصَ وَجَعَلَ يَخْتِلُهُ لِيَطْعُنَهُ.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் எட்டிப் பார்த்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகலமான ஓர் அம்பின் முனையை (அல்லது பல முனைகளை) எடுத்துக்கொண்டு அவரை நோக்கி எழுந்தார்கள். அவரைக் குத்துவதற்காகத் தந்திரமாக நெருங்கலானார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ - قَالَ - فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَخْتِلُهُ لِيَطْعُنَهُ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நபிகளார் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் எட்டிப் பார்த்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அம்பின் முனையையோ அல்லது அம்பின் முனைகளையோ எடுத்துக்கொண்டு அவரை நோக்கி எழுந்தார்கள். அவர் (அனஸ்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதரைக் குத்துவதற்காக நோட்டமிட்டுக் கொண்டிருந்ததை, இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது."