حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَيُعْجِبُنِي الْفَأْلُ الصَّالِحُ، الْكَلِمَةُ الْحَسَنَةُ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அத்வா (அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் தொற்று நோயும் மற்றவர்களுக்குப் பரவாது) கிடையாது, தியரா-வும் கிடையாது, ஆனால், நான் நல்ல ஃபஅல்-ஐ, அதாவது நற்சொல்லை விரும்புகிறேன்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று நோய் என்பது கிடையாது; ஹாம என்பதும் கிடையாது; சகுனம் என்பதும் கிடையாது; ஆனால், நான் நற்குறியை விரும்புகிறேன்.
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَيُعْجِبُنِي الْفَأْلُ الصَّالِحُ وَالْفَأْلُ الصَّالِحُ الْكَلِمَةُ الْحَسَنَةُ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் என்பது (தாமாகப் பரவுவது) கிடையாது*, தீய சகுனமும் கிடையாது. மேலும் நான் நற்குறியை விரும்புகிறேன். நற்குறி என்பது ஒரு நல்ல வார்த்தையாகும்.
* பெரும்பான்மையான அறிஞர்கள் இதை இவ்வாறு விளக்குகிறார்கள்: இந்த விஷயங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது மறைவான வழிகளில் தங்களுக்குள் தீங்கு விளைவிப்பதோ அல்லது பரப்புவதோ இல்லை, மாறாக அல்லாஹ்வே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறான், மேலும் இவைகளைச் சுற்றியுள்ள எந்தவொரு பயமுறுத்தும் மூடநம்பிக்கையும் தவறானது.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَأُحِبُّ الْفَأْلَ الصَّالِحَ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அத்வா*வும் இல்லை, சகுனமும் இல்லை, ஆனால் அல்-ஃபஃல் அஸ்-ஸாலிஹ் எனக்குப் பிடிக்கும்.”**