இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

200ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ، فَأُتِيَ بِقَدَحٍ رَحْرَاحٍ فِيهِ شَىْءٌ مِنْ مَاءٍ، فَوَضَعَ أَصَابِعَهُ فِيهِ‏.‏ قَالَ أَنَسٌ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى الْمَاءِ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ، قَالَ أَنَسٌ فَحَزَرْتُ مَنْ تَوَضَّأَ مَا بَيْنَ السَّبْعِينَ إِلَى الثَّمَانِينَ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் (கொண்ட) ஒரு பாத்திரத்தைக் கேட்டார்கள். (அப்போது) அகன்ற அடிப்பாகத்தையும், அதிக ஆழமில்லாததுமான, சிறிதளவு தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரம் அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதில் அவர்கள் தம் விரல்களை வைத்தார்கள்.” அனஸ் (ரழி) அவர்கள் (மேலும்) கூறினார்கள்: “நான் அவர்களுடைய (ஸல்) விரல்களுக்கு இடையிலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வருவதைக் கவனித்தேன்.” அனஸ் (ரழி) அவர்கள் (மேலும்) கூறினார்கள்: “அதைக் கொண்டு உளூச் செய்தவர்கள் எழுபது முதல் எண்பது பேர் வரை இருந்தனர் என நான் மதிப்பிட்டேன்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح