அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் (கொண்ட) ஒரு பாத்திரத்தைக் கேட்டார்கள். (அப்போது) அகன்ற அடிப்பாகத்தையும், அதிக ஆழமில்லாததுமான, சிறிதளவு தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரம் அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதில் அவர்கள் தம் விரல்களை வைத்தார்கள்.” அனஸ் (ரழி) அவர்கள் (மேலும்) கூறினார்கள்: “நான் அவர்களுடைய (ஸல்) விரல்களுக்கு இடையிலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வருவதைக் கவனித்தேன்.” அனஸ் (ரழி) அவர்கள் (மேலும்) கூறினார்கள்: “அதைக் கொண்டு உளூச் செய்தவர்கள் எழுபது முதல் எண்பது பேர் வரை இருந்தனர் என நான் மதிப்பிட்டேன்.”