حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا، فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا، فَجَعَلَ يَنْزِعُهُنَّ وَيَغْلِبْنَهُ فَيَقْتَحِمْنَ فِيهَا، فَأَنَا آخُذُ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ، وَأَنْتُمْ تَقْتَحِمُونَ فِيهَا .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "எனக்கும் மக்களுக்கும் உள்ள உதாரணமானது, ஒரு மனிதரின் உதாரணத்தைப் போன்றது. அவர் ஒரு நெருப்பை மூட்டினார். அது அவரைச் சுற்றியுள்ளவற்றை ஒளிரச் செய்தபோது, விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் பூச்சி இனங்களும் அதில் வந்து விழத் தொடங்கின. அவர் அவற்றை (விழவிடாமல்) தடுக்கலானார்; ஆனால் அவை அவரை மீறிக்கொண்டு அந்த நெருப்பில் விழலாயின. (இதைப் போன்றே) நான் உங்களை நரக நெருப்பிலிருந்து தடுப்பதற்காக உங்கள் இடுப்புக்கச்சைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீங்களோ (என்னை மீறிக்கொண்டு) அதில் முண்டியடித்துக் கொண்டு விழுகிறீர்கள்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனது உவமையும் என் உம்மத்தின் உவமையும், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உவமையைப் போன்றதாகும்; அதில் ஈக்களும் விட்டில் பூச்சிகளும் விழத் தொடங்கின. நான் உங்கள் இடுப்புக் கச்சைகளைப் பிடித்து (உங்களை நரகத்தில் விழுவதிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கிறேன்; நீங்களோ அதில் பாய்ந்து விழுகிறீர்கள்."