அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனது உவமையும் என் உம்மத்தின் உவமையும், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உவமையைப் போன்றதாகும்; அதில் ஈக்களும் விட்டில் பூச்சிகளும் விழத் தொடங்கின. நான் உங்கள் இடுப்புக் கச்சைகளைப் பிடித்து (உங்களை நரகத்தில் விழுவதிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கிறேன்; நீங்களோ அதில் பாய்ந்து விழுகிறீர்கள்."
الثامن: عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد ناراً فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار، وأنتم تفلتون من يدي ((رواه مسلم)).
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “எனக்கும் உங்களுக்குமுள்ள உவமையாவது, நெருப்பை மூட்டிய ஒருவரின் நிலைக்கு ஒப்பாகும். வெட்டுக்கிளிகளும் விட்டில் பூச்சிகளும் அதில் விழத் தொடங்கின; அவரோ அவற்றை அதிலிருந்து விரட்டுகிறார். நெருப்பிலிருந்து (உங்களைக் காப்பாற்ற) நான் உங்கள் இடுப்புக் கச்சைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீங்களோ என் கைகளிலிருந்து நழுவிச் செல்கிறீர்கள்”.