حَدَّثَنِي مَطَرُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَكَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَكَّةَ ثَلاَثَ عَشْرَةَ، وَتُوُفِّيَ وَهْوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல் வஹீ (இறைச்செய்தி) அருளப்பெற்ற பின்னர்) மக்காவில் பதின்மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து, தமது அறுபத்து மூன்றாவது வயதில் வஃபாத் ஆனார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நபி (ஸல்) அவர்கள், தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டுக் கொண்டிருக்க, மக்காவில் பதின்மூன்று வருடங்களும், மதீனாவில் பத்து வருடங்களும் தங்கியிருந்து, தங்களின் அறுபத்து மூன்றாவது வயதில் வஃபாத் ஆனார்கள்.”