حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عَنْهُ ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ، وَالأَنْبِيَاءُ أَوْلاَدُ عَلاَّتٍ، لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன், "நான் மர்யமின் மகனுக்கு (ஈஸா (அலை) அவர்களுக்கு) மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன், மேலும், அனைத்து நபிமார்களும் தந்தையின் வழியில் சகோதரர்கள் ஆவார்கள், மேலும், எனக்கும் அவருக்குமிடையே (அதாவது, ஈஸா (அலை) அவர்களுக்கு) எந்த நபியும் இருக்கவில்லை."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் அனைவரிலும் மர்யமின் மகனான (ஈஸா (அலை) அவர்களுக்கு) நானே மிகவும் உரித்தானவன். நபிமார்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள்; அவர்களின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள், அவர்களின் மார்க்கம் ஒன்றே. மேலும், எனக்கும் அவருக்கும் (ஈஸா (அலை) அவர்களுக்கு) இடையில் வேறு எந்த நபியும் அனுப்பப்படவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: மக்களிலேயே மர்யமின் குமாரரான ஈஸா (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் நான் தான். நபிமார்கள், ஒரு தந்தையின் வெவ்வேறு மனைவிகளுக்குப் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்த நபியும் இல்லை.