حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلاً لاَتَّخَذْتُ، أَبَا بَكْرٍ وَلَكِنْ أَخِي وَصَاحِبِي .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது சமுதாயத்தாரிலிருந்து ஒருவரை நான் 'கலீலாக' (மிகவும் நெருங்கிய, பிரத்தியேகமான நண்பராக) ஆக்கிக்கொள்வதாக இருந்தால், அபூபக்கர் (ரழி) அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆனால், அவர் என் சகோதரரும், என் தோழரும் ஆவார்."
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறிவீர்களாக! நான் எந்த உற்ற நண்பரையும் (எனக்கு கலீலாக) ஆக்கிக்கொள்வதிலிருந்து நீங்கியிருக்கிறேன். நான் எவரையேனும் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாக இருந்தால், அபூபக்ர் (ரழி) அவர்களை (என்) உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். நிச்சயமாக உங்கள் தோழர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் ஆவார்."