அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் பூமியில் உள்ள மக்களில் ஒருவரை என் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாயின், அபூ குஹாஃபாவின் மகனை (அபூபக்கர் (ரழி) அவர்களை) என் உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆனால் அல்லாஹ் உங்கள் தோழரை (அதாவது தம்மை) தன் உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான்.