"'லைஸ அலல்லதீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் ஃபீமா தஇமூ இதா மத்த(க்)கவ் வஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹாதி' (ஈமான் கொண்டு ஸாலிஹான அமல்கள் செய்வோர், தக்வாவைக் கடைப்பிடித்து, ஈமான் கொண்டு, ஸாலிஹான அமல்கள் செய்தால், அவர்கள் (தடை செய்யப்படுவதற்கு) முன்பு உண்டதில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை - 5:93) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் அவர்களில் ஒருவர்' என்று கூறினார்கள்."