حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ ". قَالَ أُبَىٌّ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " اللَّهُ سَمَّاكَ لِي ". فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي. قَالَ قَتَادَةُ فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ}
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "அல்லாஹ் உங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறினார்கள். உபை (ரழி) அவர்கள், "அல்லாஹ் உங்களிடம் என் பெயரை குறிப்பிட்டு கூறினானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் என்னிடம் உன் பெயரை குறிப்பிட்டுள்ளான்" என்று கூறினார்கள். அதைக் கேட்டு உபை (ரழி) அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா அவர்கள் மேலும் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களுக்கு 'வேதக்காரர்களில் நிராகரித்தவர்கள்,' ... (என்ற வசனத்தை) ஓதிக்காட்டினார்கள் என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.