حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا {إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلاَ} بَنِي سَلِمَةَ وَبَنِي حَارِثَةَ، وَمَا أُحِبُّ أَنَّهَا لَمْ تَنْزِلْ، وَاللَّهُ يَقُولُ {وَاللَّهُ وَلِيُّهُمَا}
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
இந்த வசனம்: "உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்துவிட முனைந்தபோது..." என்பது எங்களைப் பற்றி, அதாவது பனூ சலமா மற்றும் பனூ ஹாரிஸா கிளையினரைப் பற்றி வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டது. அது வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்படாமல் இருந்திருந்தால் நான் அதை விரும்பியிருக்க மாட்டேன். ஏனெனில் அல்லாஹ் கூறினான்:-- ஆனால் அல்லாஹ் தான் அவர்களின் பாதுகாவலன் ஆவான்...(3:122)
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“உங்களில் இரு பிரிவினர் தைரியம் இழக்க முற்பட்டபோது, ஆனால் அல்லாஹ் அவர்களின் பாதுகாவலனாக இருந்தான்,” (3:122) எனும் வசனம் எங்களைப் பற்றி வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டது. அந்த இரு பிரிவினரும் நாங்களே, அதாவது பனூ ஹாரிஸா மற்றும் பனூ ஸலமா ஆவோம். மேலும், அது (அவ்வசனம்) அருளப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவுமில்லை, அல்லது (அது அருளப்படாமல் இருந்திருந்தால்) நான் மகிழ்ச்சியடைந்திருக்கவும் மாட்டேன். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:-- “...அல்லாஹ் அவர்களின் பாதுகாவலனாக இருந்தான்.”