حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ . تَابَعَهُ جَرِيرٌ وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என்னுடைய தோழர்களை ஏசாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலை அளவுக்குத் தங்கத்தை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தாலும், அது, அவர்களில் ஒருவர் செலவு செய்த ஒரு 'முத்' அளவுக்கோ அல்லது அதில் பாதியளவுக்கோ கூட ஈடாகாது."
அல்-அஃமஷ் அவர்களிடமிருந்து அதே அறிவிப்பாளர் தொடருடன் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், "என் தோழர்கள்! என் தோழர்கள்!" என்று குறிப்பிடப்படவில்லை.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்: என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள், என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவர் உஹது மலை அளவிற்குத் தங்கம் செலவழித்தாலும், அது என் தோழர்களில் ஒருவர் செலவழித்த ஒரு ‘முத்’ அளவுக்கோ அல்லது அதன் பாதியளவுக்கோ கூட ஈடாகாது.
அபூ ஸயீத் (அல்-குத்ரீ) (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை (ரழி) ஏசாதீர்கள்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவர் உஹத் மலைக்கு நிகரான தங்கத்தைச் செலவழித்தாலும், அது அவர்களில் ஒருவரின் ஒரு முத் அளவுக்கோ அல்லது அதன் பாதியளவுக்கோ கூட ஈடாகாது.
அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் தோழர்களைத் திட்டாதீர்கள்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலைக்கு நிகரான தங்கத்தைச் செலவு செய்தாலும், அது அவர்களில் ஒருவர் செலவு செய்த ஒரு கைப்பிடி அளவுக்கோ, அல்லது அதில் பாதிக்கோ கூட ஈடாகாது.'"